Monday, August 06, 2007

ஒரு கவிதையும் அது உருவாக்கிய சுழலும்

சமீபத்தில் படித்த ஒரு கவிதையை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பூவின் வலி
அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
பூவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சந்தித்த
பறவையின் உதிரும் இறகுகளைப்போல

பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

-குட்டி ரேவதி (பக்:26-தனிமையின் ஆயிரம் இறக்கைகள்-டிசம். 2003 - பனிக்குடம் பதிப்பகம்- சென்னை)

இக்கவிதையை படித்தவுடன் குல்-மொஹர் மரத்திலிருந்து, மழைக் கால துவக்கத்தில் உதிர்ந்த அந்த சிவப்பு வண்ண இதழ்கள் பாதையெங்கும் வியாபித்து விரிந்து கிடக்கும் அந்த பேரழகு இன்று ஒரு நினைவாக வருகின்றது. பெங்களூரில் இத்தகைய காட்சிகள் எங்களது வளாகத்தில் நிறைய சிதறிக் கிடக்கும்.

அன்புடன்
பாலாஜி-பாரி

No comments: