Monday, August 06, 2007

இப்படியாக மீண்டும்...

நண்பர்களுக்கு வணக்கம்!

பனிக்காலம் கடந்து வசந்த காலத்தின் நுழைவாயிலில் நிற்கும் எம்மை பறவைகளும், பளீர் கதிரவனும் வரவேற்கும் நேரத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்வெனும் நதியில் பல நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதில் எமக்கான நிகழ்வுகளும் அடங்கும். அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

குறிப்பாக நாங்கள் இருக்கும் பகுதியில், மேப்பிள் "சிரப்" பிரபலமானது. இந்த "சிரப்" நம்ம ஊர்கள்ல இருக்கும் தேன்பாகு போன்று இருக்கும். இது மேப்பிள் மரத்திலிருந்து எடுக்கப்படுகின்றது. இதை எடுக்கும் முறையை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதை பகிர்வதற்கு முன் மேப்பிள் மரத்தை பற்றி சில வரிகள். இம் மரம் கனடாவில் எல்லா இடங்களிலும் காணலாம். இம்மரங்கள் பனிக்காலத்தில் மொத்தமாக இலைகளை இழந்து நிற்கும். வசந்த காலத்தில் துளிர்த்து, கோடையில் பசுமையாக வளர்ந்து, இலையுதிர் காலத்தின் துவக்கத்தில் பற்பல நிறங்களை காட்டி வசியம் செய்து, கடைசியில் அனைத்து இலைகளையும் உதிர்த்து விடும். கனடா நாட்டின் கொடியிலும் இடம் பெற்றிருக்கின்றது இந்த மரத்தின் இலை வடிவம்.

Image hosting by Photobucket


எங்களது பல்கலைக்கழக்திலிருந்து ஏழு நபர்கள் மேப்பிள் சிரப் தயாரிக்கப்படும் இடத்திற்கு சென்றோம்.
இது "கேபினை சுக்ரு" என்றழைக்கப்படும் ஒரு உணவகத்திற்கு அருகில் இருந்தது. அங்கு போய் வழக்கம் போல முதற் கடமையாக வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் நீல நிறக் குழாய்கள் எல்லா மரங்களையும் இணைத்திருந்ததை கண்டோம். எங்களது ஆர்வக் கோளாறினால், சில கேள்விகளை எழுப்ப ஆரம்பித்ததும், திரு. மார்க் என்பவர் எங்களுக்கு விவரிக்க துவங்கினார்.


Image hosting by Photobucket

இம்மரங்களில் ஊறும் நீர்த்த திரவத்தை பனிக்காலத்தின் இறுதியில் அம்மரங்களில் இருந்து துழையிட்டு வடிப்பார்கள். இதை எங்களுக்கும் விளக்கும் முகமாக, அவர் ஒரு மின் துழைப்பானை எடுத்து மரத்தில் துழையிட்டு அதில் ஒரு சிறிய குழாயை இணைத்து படத்தில் காட்டியுள்ள ஒரு பாத்திரத்தை பொறுத்தினார். ஒரு சில நிமிடங்களில் மேப்பிள் திரவம் அதில் சேரத்துவங்கியது. இந்த பாத்திரத்திற்கு பதில் குழாய்களை ஒரு பின்னலாக இணைத்து, மேப்பிள் திரவத்தை "பம்ப்" செய்கின்றனர். அந்த திரவத்தை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரிக்கின்றனர். அது பெரிய மின் அடுப்புக்கு மேல் உள்ளது. அதன் பிறகு அதை பாகு போல் காய்ச்சி போத்தல்களில் அடைக்கின்றனர்.

Image hosting by Photobucket

மேப்பிள் மரத்தில் இருந்து வரும் திரவம், மிகவும் குறைந்த இனிப்புடன் உள்ளது. ஆனால் அதை காய்ச்சும் போது இறுகி பாகு பதத்திற்கு வருகின்றது. இதை தான் மேப்பிள் "சிரப்" என்கிறார்கள். இது கிட்டதட்ட நம் ஊரில் கிடைக்கும் தேன்பாகு போல் இனிக்கின்றது.

இந்த மேப்பிள் "சிரப்" பனிக்கட்டிகளின் மேல் ஊற்றி மிட்டாய்களாகவும் செய்வார்கள்.

சரி, நண்பர்களே!!

விரைவில் மீண்டும் சந்திப்போம்.

No comments: