Sunday, May 30, 2004

குடி நீர் திட்டம்!!

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை நடுவண் அரசு செயல் படுத்த போவதாகவும், அது முதலில் தமிழ் நாட்டில் துவக்கப்படும் என்ற செய்தி விகடன் தளத்தில் வந்துள்ளது.
மற்ற விவரங்கள் அறிந்தவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Wednesday, May 12, 2004

தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

As I could not find a place which hosts 38 MB file, this post remains incomplete. I regret it.
(This post is corrected and republished with above info on 20May04 at 2:45 AM IST)



தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஹோஸூரில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவை தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்தியது.அவ்விழாவில் ஒரு பட்டிமன்றமும், திரு. புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி அவர்களின் பாட்டுக் கச்சேரியும் நடந்தது.
நண்பர் திரு. ராஜா அவர்களின் அன்பான அழைப்பினால் இந்நிகழ்ச்சியை நாங்கள் (தங்கமணி,யென்ஸ்,பாலாஜி) கண்டுகளிக்கச் சென்றோம். இந்த விழியத்தை நம் அனைவருக்கும் பதிவு செய்து வழங்கியது திரு. யென்ஸ். அவர் ஜெர்மனியை சேர்ந்தவர். இங்கு பின்முனைவராக () பணியாற்ற வந்துள்ளார். அவருக்கு இசையில் ஈடுபாடு அதிகம். அன்றைய நிகழ்ச்சியை அவர் வெகுவாக ரசித்தார். இதை இங்கு இட ஆலோசனைகள் வழங்கிய நண்பர் ரமணீதரன், சத்தியராஜ்குமார்,சுந்தர் ஆகியோருக்கு நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் தேவையான ஜாவா ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுத்தமைக்கு அவருக்கு உங்கள் சார்பில் ஒரு பெரிய "ஓ".


அன்புடன்
பாரி

Tuesday, May 11, 2004

பயணம்

முகமறியா பலர் அமைத்த பாதை.

ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.

புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....

இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.

சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...

கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.

சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.

வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.



அன்புடன்
-பாரி

Monday, May 10, 2004

நண்பர் சித்ரன்

இன்று நண்பர் சித்ரனின் வலைப்பக்கத்தை காண நேர்ந்தது. மரத்தடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதற் பரிசை வென்றவர். கல்கியில் பல நல்ல கதைகள் உள்ளார். அவரது வரவு நம் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Sunday, May 09, 2004

uthavi! uthavi!!

ஒரு மூவி க்ளிப்பிங்க் இருக்கு!! அதை எப்படி இடுவது என்பதை யாரேனும் கூற இயலுமா??

இன்னொன்னு....




இந்த புலி பதிவு முடிச்சுட்டு ரூம்முக்கு போனா, நண்பன் பாபு, "மால்குடிக்கு ஒரு புலி"(ஆங்கிலம்) ங்கிற புத்தகம் வைத்திருந்தான். ஒரே புலிகள் மயமா இருக்கேன்னு நினைச்சேன். அப்போ "இந்த ஒரு படம் மட்டும் சரிப்படாது. இன்னொன்னு போடுன்னு" புலி சொல்றாப்ல இருந்துச்சா. இன்னொரு படமும் புகைப்படமும் போட்டாச்சு.

பாலாஜி-பாரி

Saturday, May 08, 2004

புலி பாருங்கோ! புலி பாருங்கோ!!


புலி பாருங்கோ!! புலி பாருங்கோ!!!
பெங்களூரு புலி பாருங்கோ!!!!
'புலி' ந்னு சொன்னா பயப்படாதீங்கோ!!
தேசியம் சம்பந்தப் பட்டதுங்கோ!!!
அதாவது இந்திய தேசிய விலங்குங்கோவ் :) !!!
(நாங்கள் வன உலா சென்ற போது, இந்த புலியை நண்பர் 'யென்ஸ்' படம் பிடித்தார்!!)

"என் ஜாய் மாடி!!"
-பாரி

Tuesday, May 04, 2004

துருவலாய் மழை பொழியும் ஓர் காலை நேரத்தில்.....

முன்னிரவில் ஓய்வின்றி பொழிந்த மழை
மந்தமான வெளிச்சத்தை
பாரிலே பரப்பிவிட்டு
தன் ஓய்வை அறிவிக்க முயல்கிறது!!
நீர்க்குச்சிகள் துருவலாய் மாறி
தான் உதிர்த்த பல வண்ண மலர்களின் இதழ்களுக்கு
இதமாக இதழ் கொடுக்கின்றது!!
மந்தகாசம் மனதை நிறைத்த காலை
சிறு சோம்பலுடன் அலுவலகம் அடைந்து
இருக்கையின் பின்னிருக்கும்
ஜன்னலை திறந்தேன்.
மழைத் துருவலில் சிலிர்த்து
கம்பிகள் ஊடே அறையில் நுழைந்து சிலிர்க்கச் செய்தது
நட்சத்திரங்கள் கொண்ட பெயர் தெரியா அச்சிகப்பு மலர்!!


அன்புடன்
பாரி