Monday, August 06, 2007

செய்திகள்

இயற்கை சில சமயங்களில் பல அழகை காட்டி நிற்கின்றது. சில சமயம் எனும்போது அவதானிப்பாரின் கணங்கள் எனக் கொள்க. இயற்கை எக்கணமும் ஏதேனும் ஒரு சுவாரசியத்தை கொண்டுள்ளது என்பதுதான் உண்மையோ?

ஒரு பெரிய அளவிலான வண்ண வளைவாக, கடலில் ஒரு முனையை கொண்டு, வானை அளந்து, தேவாலயம், பச்சை மரங்கள், சில மனிதர்கள் ஆகியவற்றிற்கு ஆரமாய் வடிவெடுத்து, தன் மறுமுனையை மண்ணில் புதைத்துக் கொண்டு, சில கணங்களே இருந்த ஒரு வானவில்லை பற்றி சொல்ல முயல்வது கடினம்.

சில தண்மை துளிகள் காற்றில் நிறைந்த கணத்தில், வெம்மை கதிர்கள் ஊடாடி நிகழ்த்தும், ஒரு முரண்களின் கலப்பு தோற்றுவிக்கும், அழகே இந்த வண்ணப் பட்டைகள் என்பது அறிவியல் மொழி. இந்த முரண்கள் தண்மை, வெம்மை என்ற வார்த்தைகளின் பிரசங்கமாக கூட இருக்கலாம். அவை தன்னியல்பில் பூரணமானவை. நிகரானவை.

பாதையின் மருங்கில் இருக்கும் கிரைசாந்திமம் பூவிலும் நிறைந்துள்ளது. வானவில்லின் சில கண இருப்பிலும் ஒளிந்துள்ளது. அவைகள் மெதுவாகவும், பல முறை கூறிவிட்ட சலிப்புடனும் மீண்டும் தங்களது இருத்தல்களில் முரண்கள் வெறும் கற்பிதங்கள் என்பதை காட்டியவாறே உள்ளன.

இன்று ஒரு ஒளிதுகள் உள்ளே.

No comments: