Friday, March 26, 2004

ஓர் நட்சத்திரம் பிறந்தது

ஆயிரத்து ஐநூறு ஒளி ஆண்டுகளுக்கப்பால் ஒர் நட்சத்திரம் பிறந்துள்ளது. இதை ஜே மெக்நெய்ல் என்ற ஓர் அமெச்சூர் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். அவர் தனது எளிமையான 3 இன்ச் தொலை நோக்கியை கொண்டு, தனது வீட்டின் கொல்லையில் இருந்து ஆகாயத்தை அலசியுள்ளார். அப்போது வேட்டைக்காரன் என்ற நட்சத்திர கூட்டத்தில் புதிய ஒளி தெரிவதை பதிவு செய்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக, ஓர் ஒளி தெரிவதை சரியாக அடையாளம் கண்டு இணையத்தின் மூலம் புரஃபோஷனல்ஸை தொடர்பு கொண்டு இச்செய்தியை தெரிவித்துள்ளார்.

அதன் பின் உலகின் தலைசிறந்த வானவியல் மையங்கள் அவரது கண்டுபிடிப்பை பாராட்டி உள்ளன. அந்த நட்சத்திரத்திற்கு, மெக்னேய்ல் நெபுலா என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு சுட்டவும்

Tuesday, March 23, 2004

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்: கோமதி டீச்சர் - 1

கி.பி.1940-50 களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
(-தொடரும்)

Monday, March 08, 2004

பெண்கள் தின வாழ்த்துக்கள்!!!

இன்று பெண்கள் தினம். இந்த தினத்தை ஒட்டி என்னைக் கவர்ந்த பெண்கள் என்ற தொடர் எழுத முடிவு செய்துள்ளேன். ஆணாதிக்க சமுதாயத்திலும் திறம் பட சாதனைகள் பல செய்த நான் சந்தித்த பெண்மணிகள் பற்றி இங்கே எழுத உள்ளேன். முதலில் நமக்கு அறிமுகமாவது, எனக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்த கோமதி டீச்சர் அவர்கள்.

இத்தொடர் சற்று கால இடைவெளியுடன் வரும்...... பணி அழுத்தம் காரணம்.

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!!

அன்புடன்
-பாரி

Wednesday, March 03, 2004

தமிழ் பற்றி UNESCO அறிக்கை

திரு சுரேஷ் அவர்கள் மரத்தடியில் இட்டுள்ள அறிக்கையின் சுட்டி.
யுனஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்த திரு. மணவை முஸ்தாபா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி சுட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் பற்றி UN என்ன கூறி உள்ளது என்ற விபரம் உள்ளது.