Wednesday, January 01, 2014

நகர்வுகள்



தட தடவென பொழுதுகளை  நிறைக்கின்றன  நிகழ்வுகள். 
சடுதியாக விரைகின்றன  நாட்கள்.
கவலை என்பதை பற்றி கவலை கொள்ள முடியாமல்
உணர்வுகளை ஏமாற்றி திரியும் மனோநிலை.
ஏற்ற பாத்திரத்தை செவ்வனே செய்ய 
எம்பி குதிக்கின்ற  தொடர் முயற்சிகள்.
அவ்வப்போது நிலை கொள்ள உதவுகின்றது வானம்
மகளின் சிரிப்பைப் போல்.
மீண்டும் விடிகின்றது மற்றொரு காலை. 



-பாலாஜி பாரி