Monday, August 06, 2007

காலங்கள் மாறும்...கோலங்கள் மாறும்...

அடுத்த வரியை நீங்க ஞாபகப்படுத்திட்டு, ஏதோ கனமா எழுதப் போறான்னு நினைச்சா, சாரி, மக்கா, சாரி.

பெங்களூர்ல இருந்தப்போ, இந்த மாதிரியான மாற்றங்கள் மிக அழகா, மனசை தொடர மாதிரி இருக்கும். இந்த ஊர்லயும் அப்படி இருக்கும்னு சொல்றாங்க.

இப்போ என் கவனத்தில் இருக்கின்ற சில விசயங்கள சொல்றேன்.




வீதிகளின் இருபுறமும் இருக்கும் குட்டி பனி சுவர்கள் கரைய தொடங்கி விட்டன. அம்மலைகளின் அடியில் இருக்கும் பழுப்பு நிற புற்கள் "அப்பாடா!" என்று ஒரு சுமையை இறக்கி வைத்து வெளியே தலை காட்டுகின்றன.

காற்று தன் கனத்தை குறைத்து கொண்டுள்ளது இதமாக.

பறவைகள் சில வந்து உற்சாகம் கொடுக்கின்றன. காலை பொழுதில், "ப்ளிங்" என்று சத்தமிட்டபடி
சீ கல்-கள் பறக்கும் அவைகள் ஒரு அற்புதம். தங்களது உடலின் மேல் ஒரு கருமையான சாம்பல் நிறத்தையும், அவற்றின் அடியில் தூய்மையான வெள்ளை நிறத்துடனும் பறப்பதை பார்ப்பது சுகம். Feynman-னின் தந்தை பறவைகளின் சிறகை பற்றி அவருக்கு சொல்லும் போது அதில் இருக்கும் ஒரு மெல்லிய மெழுகு போன்ற ஒரு பூச்சை பற்றி குறிப்பிடுவார். இவைகளின் தூய்மை அக்கூற்றை நினைவு படுத்துகின்றன.

எங்கு போனாலும் இருக்கும் காக்கைகள். அவைகள் மனிதர்களை சுற்றி வாழும் என்பது இங்கு சிறிது மகிழ்ச்சியை தருகின்றது. புறாக்களும் அவ்வாறே.

இவற்றை தவிர எனது வீட்டில் சாளரத்திற்கு அருகில் வசிக்கும் சில குருவி போன்ற பறவைகள் அவ்வப்போது ஹலோ சொல்லும்!!

இன்று காலையில் சில பறவைகள் கீச் கீச் சென்று சப்தம் எழுப்பி, தங்கள் வருகையை தெரிவித்தன. அவைகளை காண முடியவில்லை.

மழை பெய்கின்றது. வானொலியில் ஏப்ரல் மழை என்று கூறுகின்றனர். இந்த மழைதான் பனி சுவர்களை கரைக்கின்றதோ என உணர்வு வருகின்றது.

இப்போதெல்லாம் டெம்ப்ரேச்சர் பாஸிட்டிவில் உள்ளது. 2 லிருந்து 7 வரை.

வசந்தம் வருகின்றது.

No comments: