Monday, August 06, 2007

கனவுகளைத் தேடி

கதிரவனின் வெண் மஞ்சளில்
எனது கனவுகள் செதுக்கப்படுகின்றது.
எண்ணங்களே வாழ்க்கையாகி
சிந்தனை சிலைவடிக்கும்
கனவுச் சிற்பி ஆகினேன்.
மிதக்கும் கம்பளங்களாகிப் போன
இக்கனவுலகு
இயல்நிலையை தொடும் கணம்,
மனச் சூறாவளியில்
அலை எழுப்ப,
நானும் நீங்களும் எப்போதும்
எதிரெதிர் கரைகளிலேயே!

-பாலாஜி-பாரி

No comments: