காயப்படுத்திக் கொண்டே
இருந்தாய்
சிரித்தபடி ஏற்றுக் கொண்டேன்
உன் மீது யாரேனும்
பழி சொல்ல,
சொன்னவரைக்
கடிந்து கொண்டேன்
நீ சொல்ல நடந்து
நீ சொல்ல நின்றேன்.
உன் குருவிக்கூட்டு இதயத்திற்குள்
வலுக்காட்டாயமாய் நுழைந்தேன்
மின்னும் மின்மினியாய்
என் சிறகை விரிக்கவும்
எனக்குள் சுருக்கி கொள்ளவும்
உன் கட்டளைக்காய் காத்து நிற்கிறேன்
காதலைப் போல
நட்பிற்கும் மயக்கமுண்டு என்று
காட்டியது நீ!!
- வீணா நிரஞ்சனா (ஒரு இணை தளத்தில் படித்தது.....இவரது படைப்புகளை மேலும் படிக்க விரும்பும் - பாரி)
நட்பு மேலோங்கி நானிலம் தழைக்க, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!
No comments:
Post a Comment