Wednesday, December 03, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 3 (தாயம்மா..)

இன்றைய வேகமான நாட்களில், குறிப்பாக இரண்டு சம்பாத்தியம் இருக்கும் வீடுகளில் அல்லது முதியோர் மட்டும் வசிக்கும் வீடுகளில், அந்த வீட்டில் உள்ளோரைத் தவிர தினமும் மிக உரிமையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்கள், அந்த வீட்டின் "வேலைக்காரர்கள்". இவர்களை நீங்கள் சந்தித்திருக்க கூடும், சமயங்களில் கருணையோடும், சமயங்களில் காழ்ப்போடும். இங்கு அறிமுகமாவது லக்ஷ்மி புரத்தில் பெரும்பாலான வீடுகளில் பணிபுரிந்த "தாயம்மா" அவர்கள்.......

குழந்தைகள் மனிதர்களை அடையாளம் அறியும் வயதிலேயே, எனக்கு அறிமுகமானவங்கதான் "தாயம்மா". இவங்க பார்க்க நல்ல கருப்பா இருப்பாங்க. ரொம்ப ஒல்லியான வற்றிப் போன உடம்பு. ஆனா ஆச்சரியப் பட வைக்கிற சுறுசுறுப்பு. எங்க காம்பௌண்ட்ல ஒரு சதுரமான வாயுடைய கிணறு இருக்கு(ம்). அதுல தண்ணி வத்தினதே கிடையாது. அந்த கிணறை சுத்தி நேர்த்தியான கல் சுவர்கள் இருக்கும். கல் சுவர்கள் மேலே ஒரு நீர் சேமிப்பு தொட்டி உண்டு. அந்த கல் சுவரின் ஒரு பக்கத்தில்தான் தாயம்மாவோட பொருட்கள் அடங்கிய சற்றே சிதிலமான தொட்டி இருக்கும். இதுதான் அவங்க சொத்து.

அவங்க எப்பவும் "பிசி"யாவே இருப்பாங்க. அவங்க சாப்பிடறது பெரும்பாலும் 11-வீடுகள்ல் எதிலிருந்தாவது கொடுக்கப்பட்டிருக்கும் உணவாக இருக்கும். அவங்ககிட்ட ஒரு பழக்கம். மதியம் சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரம் தூங்குவது. தாயம்மாவின் பேரன்களுக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அவர்கள் அவ்வப்போது வந்து போவார்கள்.

-தொடரும்....

No comments: