Thursday, December 18, 2003

மழை



சவுக்குத் தோப்பில் ஈரமாய் நின்று
ஏகமாய் காட்டினாய் நான் அழகு என்று...
துளியாய் நின்றாய்....
தூலம் சிலிர்க்கச் செய்தாய்...
மென்மை ஒளியை ஊடுறுவச் செய்தாய்.....
ஒளியும் வியந்தது!
ஒளிக்கு ஒளி கொடுத்தாய் என்று!!

தண்(ன்)மை மிக்க மழைத்துளியே....
இவ்வளவு இருந்தாலும்,
கருணையினால் கசிந்து
கண் விளிம்பில் பூத்த துளிக்கு...
எவ்வாறு நீ பதில் சமைப்பாய்??

-பாரி

No comments: