Thursday, February 19, 2004

அறிவுக் களஞ்சியம் www.thamizham.net

இன்று ஒரு இணைய தளத்தை நண்பர் தங்கமணி சுட்டிக்காட்ட நான் பார்த்தேன். அதில் ஓர் ஆசிரியரின் சீரிய பணியை கண்டு வியந்தேன். இவர் தற்கால தமிழ் இலக்கியத்தின் ஓர் கருவூலம். இவரை பற்றி நம் வலைபதிவர்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. ஆகையால் இந்த உடனடி செய்தி.
திரு. நடேசன் அவர்கள், பொள்ளாச்சியில் இருந்து கொண்டு இந்த அருமையான தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது நூலகத்தில் இருக்கும் சிற்றிதழ்-களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மேலும் போற்றத் தக்கது. அவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஓர் தீவிரம். அனைவரையும் நாம் போற்றுவோமாக.
இவர்களின் பணி ஓர் கூட்டு முயற்சியாய் நடை பெறுகின்றது. பல அரிய புத்தகங்களும், தமிழ் சார்ந்த பல தகவல்களும் சுவாரசியம் கொள்ள செய்கின்றன. இவர்கள் இதை மின் ஊடகத்தில் மாற்றவும் முயற்சி செய்கின்றனர். இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அன்புடன்
-பாரி

No comments: