Wednesday, February 18, 2004

கல்லுக்குள் ஈரம்

ஐந்து நாரைகள்....
புற்களின் மேல் குட்டி குட்டி
வெண் மேகங்களாய்.......
உள்ளங்கைகளின் செந்நிறத்தில்
அதன் அலகுகள் மின்ன....
ஒடிந்து விடுமோ அதன் கால்கள்
என அஞ்ச வைத்து
ஒய்யாரமாய் அது நகர்வதென்ன...
வட்ட விழி கிட்டே பார்த்து
வான் வழி அவை பறக்க,
சுட்டதென்னவோ அவந்தான்.
ஆனாலும் மகிழ்ச்சி அவனுள்
நம்மால் நான்கு தப்பியதே......

-பாரி

No comments: