Sunday, April 26, 2009

ஆரம்பிச்சுட்டாங்க தங்களோட ரௌடித்தனத்த காட்ட

நேத்து ஒரு செய்தி, தா. பாண்டியனோட தேர்தல் மனுவை நிறுத்தி வைச்சுட்டாங்களாம். இது எப்படி நடந்தது?. சரியா இவர் மனு தாக்கல் செஞ்ச சில நிமிட இடைவெளியில், முன்னாள் அதிமுக, இன்னாள் திமுக வக்கீலான ஜோதி, தேர்தல் அலுவுலரிடம் முறையிட்டு, தா.பா வின் விண்ணப்பத்தில் அவரது சொத்து விவரங்களில் பிழை உள்ளதாக கூறியிருக்கின்றார். அதனடிப்படையில், அரசு அலுவுலரான அந்த தேர்தல் அதிகாரி, தா.பா வின் விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன் மீதான முடிவு பின்பு அதாவது, திங்கள் அன்று தெரியும்.
http://thatstamil.oneindia.in/news/2009/04/25/tn-dpandians-nomination-withheld.html

எப்படிங்க கலைஞரே?, ம்ம்... உங்க வழியிலான ஆட்டத்த ஆரம்பிச்சுட்டீங்க. தா. பா., நிச்சயம் பாராளுமன்றம் போவாரு. ஆனா, உங்க முகத்துல கரிய பூச நீங்களே கரிய அரைச்சு கொடுத்துட்டீங்க...

சரி நீங்கதான் இப்படி ஆடறீங்கனா, உள்துறை அமைச்சரான் பனியா பிரதிநிதி, சிதம்பரம், தன்னோட பவர காட்டறாராம். காங்கிரசுக்கு எதிரா பிரச்சாரம் செய்யும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களின் குழுமத்தை சார்ந்த ஒரு 50 பேர கைது செஞ்சு இருக்கீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? காற்றை சிறைப் பிடிக்க முடியுமா? அல்லது, உங்க தலைவியோட ஆசி-யோட நடக்கின்ற போர, ஆதரிச்சு பேசறது முடியிலன்னு தெரிஞ்சு போய் குழம்பிப்போய் நீங்க அடியாள் கோதாவுல இறங்கிட்டீங்களா?. நல்லது தான். பூனைகள் எவ்வளவு நாள்தான் பைக்குள்ளேயே இருக்கும்.

இன்னும் 17 நாள்-ல போலீஸ், உளவுத்துறை, கையில இருக்கும் மீடியா, ன்னு பல வழிகள்-ல ஆடப்போறீங்க. நீங்க உங்க கைய உயர்த்தினா, மக்கள் "கை" இருக்குற இடம் தெரியாத மாதிரி ஓட்டுப் போடுவாங்க.

http://blog.tamilsasi.com/2009/04/software-professionals-arrested-in.html

No comments: