நேற்று கனத்த கோடை மழை. அத்தருணத்தில் சாலையின் இரு புறங்களில் இருக்கும் செம்மண்ணுடன் எனது இதயமும் கரைந்தது. அப்போது தோன்றிய மிகச்சிறிய தற்காலிக ஓடைகளில், வசந்த காலத்தை அறிவித்த மலர்கள் பயணித்து கொண்டிருந்தன, சில இலைகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு. இக்காட்சியை இயற்கை அவ்வப்போது படம் பிடித்து கொண்டிருந்தது வெட்டும் மின்னலின் துணை கொண்டு. மழையின் நீண்ட கால்கள் வீசிய திசை சார்பற்ற குளிர்ந்த காற்றுக்கு ஏற்றவாறு அழகிய நடனம் புரிந்தது.
அன்புடன்
பாரி
No comments:
Post a Comment