உயிர்ப் பறவை
ஆழ் மனச் சச்சரவுகள்...
சிதறும் தருவாயில் மனக் குருவி...
..... விட்டு விடுதலையாகி,
அண்டப் பெரு வெளியில்
உற்சாகமாக உயரும் பொழுது
அண்ணாந்து பார்த்து
அமைதியாயின
ஆழ் மனச் சச்சரவுகள்...
விட்டு விடுதலையாகியது
மனக் குருவியா.....???
உயிர்ப் பறவையா.....???
-பாரி
(இந்திய அறிவியல் கழகத்தின் தமிழ் பேரவையின் இலக்கிய மலரான மின்னலில் வெளி வந்த கவிதை இது...)
No comments:
Post a Comment