Wednesday, November 26, 2003

உயிர்ப் பறவை

ஆழ் மனச் சச்சரவுகள்...
சிதறும் தருவாயில் மனக் குருவி...
..... விட்டு விடுதலையாகி,
அண்டப் பெரு வெளியில்
உற்சாகமாக உயரும் பொழுது
அண்ணாந்து பார்த்து
அமைதியாயின
ஆழ் மனச் சச்சரவுகள்...
விட்டு விடுதலையாகியது

மனக் குருவியா.....???
உயிர்ப் பறவையா.....???

-பாரி

(இந்திய அறிவியல் கழகத்தின் தமிழ் பேரவையின் இலக்கிய மலரான மின்னலில் வெளி வந்த கவிதை இது...)

No comments: