Friday, November 28, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்.....

நம் வாழ்க்கை அமைப்பில், நாம் விரும்பாவிட்டாலும் நம்முடன் இருப்பவர்கள், "பிச்சைகாரர்கள்".
நம்மில் பலருக்கு பிச்சை எடுத்து வாழும் சில-பல நபர்களின் பரிச்சயம் உண்டாகி இருக்கும். சில வேளைகளில், அவர்களை சந்திக்காவிடில் "இன்ன்னிக்கு எங்கே காணம்?"என்ற எண்ணம் லேசாய் தோன்றி மறையும். அவ்வாறு எனக்கு சிறு வயதில் பரிச்சயமான இங்லீஷ் பிச்சைகாரரை பற்றி....

எங்க காம்பௌண்ட்ல, 11-வீடு இருக்கும். நண்டும், சிண்டுகளுமாய் 8- 10 வாண்டுக இருப்போம். (அதுல சிலருக்கு அது "அவே ப்ரம் ஹோம் க்ரவுண்ட்"). ஞாயிற்றுக் கிழமைகள்ள, வெய்யில வீணாக்காம விளையாடும் போதுதான், மேலே சொன்ன இங்லீஷ் பிச்சைகார அன்பர் வருவாரு. என்னமோ இங்கிலாந்து-ல இருந்து நேரா எங்க காம்பௌண்டிற்கு வர்ரவருன்னு நினைக்க வேண்டாம். ரொம்பபோன அவரோட பூர்வீகம், எங்க தெருவிலிருந்து ஒரு மூன்று தெரு தள்ளி இருக்கும். அவ்வளவுதான். மனுஷன் "சீனுக்கு"வந்த உடனே, அதாவது எதிர்காலத்தில் புகழ் பெற போகும் "லக்ஷ்மி புரம்" காம்பௌண்டின் (எங்க காம்பௌண்டின் திரு நாமம் தான்) நுழை வாயிலை மிதித்ததும், சொல்வாறு "டுடே சண்டே" என்று. இப்படி அவரு சொன்னதுதான் தாமதம் எங்களுக்கு குஷி பிறந்திடும். எங்கள்ல சிலதுக கான்வென்ட்ல் படிகிறதுக. அதுக "டெல் ஒன், டூ, த்ரி...."ந்னு ஆரம்பிக்குங்க. , அவரோட இங்கிலீசு கேட்க, அவருக்கு பின்னாடியெ பதினோறு வீட்டுக்கும் போவோம். சில சமயம் மக்க அடிக்கிற கடுப்புல, அவரு தன்னோட கைத்தடிய வைச்சு அடிக்க வரும் போது "கே-கொள்ளே"ன்னு சத்தம் போட்டு வீட்ல இருக்கிற பெரியவங்களுக்கு எங்கனால முடிஞ்ச அமைதிய கொடுப்போம். அவரு அப்போ என்ன பேசினாரோ தெரியாது. ஆனா, என்னய மாதிரி, நகராட்சி நடு நிலைப் பள்ளி-ல் (BG புரம்) படிச்ச மக்களுக்கு (வாண்டுகளுக்கு) அவர்தான் முதல் இங்லிஷ் வாத்தியாரு......................

No comments: