Tuesday, February 15, 2005

நான் உணர்ந்த நீ

மலர்கள் நிறைந்த சோலையை காட்டினேன்
வண்டுகளின் இருப்பே உன்னை உறுத்தியது
என்னுள் நந்தவனங்கள் அழிந்தன

மஞ்சள் மாலை மேகங்கள் காட்டினேன்
"ஓ!.. அதனால் என்ன?" என்றாய்
என் மனதில் தொடு வானம் இருண்டது

நட்சத்திரங்களின் ஒளிச் சமிஞ்ஞைகளை சுட்டினேன்
நீ மின்மினிகளில் உன்னை பார்த்தாய்
எனது கிரகத்தில் அடுப்பு அணைந்தது.

நான் இப்போது செயலற்று விலகுகிறேன்
இனியும் என்னுள் இருக்கும்
உன் இயற்கையை கொல்லலாகாது.

-பாலாஜி-பாரி

No comments: