Saturday, September 11, 2004

அமிக்டாலா மூளையர்கள்!!

இதயம் சுமப்போர் போல் அல்லாது, தலையில் கபாலம் பிரித்து உள்ளிருக்கும் அமிக்டாலா பகுதியை மறு ஈடு செய்து, முன்,பின் மூளையை களைந்து அதை கையிலெடுத்து, ஈட்டி போன்ற அமைப்பின் முன் செருகிக் கொண்டு அவன் "ததிங்கிணத்தோம், தத்தரிகிடதித்தோம், தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிடதித்தோம்... தட்டாவது வீச்சாவது... அனைத்தும் வெறும் பேச்சு..என் நடை என் உள்ளப்பாடு ஐயா!!" என எதிரே உள்ளவன் உணரும் வகையில் குதித்து களித்தும், களித்து குதித்தும் சென்றான். மரங்கள் அசைந்தன. மலர்கள் சிரித்தன. ஒரே ஆரவார எக்காளம் அவனுக்கு... "ஹே.... " என்று கூக்குரலிட்டவாறே ஓடித்திரிந்தான். அவனும் பாதையில் முன்னேறியவாறே இருந்தான்.

மலைகள் நிறைந்த பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒருவித கிறக்கம் தரும் தேனை நீங்கள் பருகியதுண்டா?. அதன் சுவை இனிப்பு. ஆனால் அதன் நறுமணம் தன்னைச் சுரந்த மலர்களின் நினைவினை பொதித்துக் கொண்டிருக்கும். (NT,Jens,balu,srika Thanks guys!!)

இதன் கிறக்கத்தையும் உள்வாங்கி "ஆடினா நான் ஆடினா அது ஆட்டம் மக்கா" என்று கைகொண்ட வாத்தியத்தை தனது சீராக மற்றவருக்கு மாறாக முழங்கி கொண்டே அவளும் இறங்கினாள். வந்தான் என் காதலன், வாழ்வில் அவனில்லை எனில் சாதலின் என ஒலித்தவாறே வந்தாள் அவளும் ஒய்யாரமாக. அவளது வழியில் காட்டு மலர்களும், கானக்குயில்களும் அவளுடன் அன்பு மொழி பேசின; ஓயாமல் அவளும் அவைகளிடம்.

இதை நன்றாக உணர்ந்து, எந்த ஒரு திட்டமும் இன்றி, போகும் வழியில் இறைந்த மலர்களை சுமந்தவாறே அந்த ஓடையும் அவள் துணையாக சென்றது.

-தொடரும்

பாரி
(குறிப்பு: அமிக்டாலா- உணர்வுகள் உருவாக காரணமாக இருக்கும் மூளையின் ஒரு பகுதி)

No comments: