Saturday, January 31, 2004

நான், திரு மற்றும் ஓர் சிறுமி

" அங்கிள்! நீவு left Right!" அன்புக் கட்டளை ஒன்று. "அங்கிள் 'மார்ச் ஆன்' கேளி!" சிறிதும் தாமதிக்காமல் இன்னொரு உத்தரவு. அதன் பின் "...ட்விங்கிள்..ட்விங்கிள்..." என்று ஓர் ரைம். நான் அதை சொல்ல முயலும் போதே " a d f e g k s y....." என்று Random-ஆக எழுத்துக்களை மழலையிட்டாள்.

எப்படி துரித கதி ஓட்டம் செல்ல வேண்டும் என்று திரு எனக்கு டெமோ செய்து காட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் இருந்த இடம் ஓர் பரந்த மைதானம். அச்சமயம் எனக்கு முன் அந்த சிறுமி ஓடி வந்து நின்றாள். அவளது அலை போன்ற ஆர்வம் எனது கவனத்தை அவள் பால் ஈர்த்தது. அவளிடம் இருந்த மலர்ச்சியான சக்தி எங்களது பயிற்சியை நிறுத்த செய்து அவளது விளையாட்டில் பங்கேற்க செய்தது. ஓர் நிறைவுடன் நாங்கள் அவளது சொற்களுக்கு கட்டுபடத் தொடங்கினோம்.

அவளது மொழி non-linear ஆக இருந்தது. லா. சா. ரா-வின் எழுத்து உள்ளுக்குள் உண்டாக்கும் சுழற்சியை உண்டாக்கியது அவள் மொழி. பழகிய தளத்தின் ஒரு தரிசனம் அவரது எழுத்து. ஆனால் அச்சிறுமியோ அவளது எண்ண வடிவமைப்பிற்கு முழு குறியீடாக இருந்தாள். சாரு-வின் "Zero-degree"(முற்பகுதி) முற்றிலும் தளம் இழக்கச் செய்யும் தன்மை உடையது. ஆனால் அவளோ எனக்கு தெரியாத ஓர் தளத்தை அறிமுகம் செய்தாள்.

எனது "நான்" அவளது தளத்தை புரிந்து கொள்வது எளிது என்றே வலுவாக கூறி அழுத்தியது. அவளது "அஜ்ஜி" தொலைவில் சென்று அமர்ந்து விட அங்கு செல்வது இக்குழந்தையின் நோக்கமாக இருக்கும் என்று என் "நான்" கூற, "அஜ்ஜி-யாந்த்ர கோகன்ன பா", என்று கூறி, அஜ்ஜி-(அதாவது பாட்டி) இருந்த இடத்தை நோக்கி அழைத்தேன். வலது கையின் கட்டை விரலை தாடையின் கீழ் வைத்து என்னுடன் காய் விட்டது. அச்சிறுமி என்னை நிராகரித்தது. எப்பொழுதும் போல் எனது "நான்"-க்கு ஓர் குத்து விழுந்தது. அக்கணத்தில் என்னுள் நிறைந்து இருந்தது அச்சிறுமியின் இனிமையான நினைவு மட்டும். எதை அறிய நான் எங்கு செல்வேன்?.

-பாரி

No comments: