Wednesday, April 16, 2014

இன்றைய பத்து நிமிடங்கள் -1

 
வளாகத்தில் தேர்வுகள் நடை பெறும் காலமிது. சில நாட்களாக நாய் பாதத்தை சுவற்றில் ஆங்காங்கே அம்புக்குறியுடன்  ஒட்டி சற்றே ஒய்வு எடுக்க விரும்பினால் தொடரவும் என்ற குறிப்புடன் மாணவர்களுக்கு அழைப்பு இருந்தது. 

அந்த அழைப்புக்கு அழையா பார்வையளானாக சென்றேன். ஒரு வகுப்பில் சில மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சற்றே நெருங்கி பார்க்கையில் உள்ளே இரண்டு நாய்களும் அதன் உரிமையாளர்களும் இருந்ததை அறிந்தென். 

அப்புறம் நிதானமாக அந்த நிகழ்வு குறித்து இருந்த சுவரொட்டியை படித்தேன். படிக்கிற புள்ளைக கொஞ்ச நேரம் நாய்களுடன் விளையாடி  ரிலாக்ஸ் பண்ண வளாகத்தின் மாணவ அமைப்பு செய்த ஏற்பாடு என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

இந்த சில வரிகளை எழுத 15 நிமிடம் ஆகியது. எ.ப -1

பாலாஜி-பாரி 


1 comment:

தங்கமணி said...

மகிழ்ச்சி. மீளக்காண்பதில்; மீளக்காண் பதில்.