ஒரு நாடுவிட்டு மறுநாட்டிற்கு செல்லும் போது, நமக்கு புதிய நாட்டின் மக்களின் பண்பாடு, மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்கொள்வது மிகவும் சுவையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம். மற்ற ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது, கனடாவில், பல் வகை நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களிடையே பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள், தங்களது தாய் நாட்டை சார்ந்து இருந்தாலும், இங்குள்ள இயற்கை நிகழ்வுகள் காரணமாக அவர்கள் அதில் சில மாறுதல்களை செய்து வாழ்வதை பார்க்க நல்ல அனுபவமாக இருக்கும்.
மேலும் கனடாவின் மக்கள் என்று யாரை சொல்லலாம் என்றால், சிவப்பிந்தியர்களையும், இன்னுயிட்-களையும் சொல்லலாம்.
எனது பல்கலை கழக நண்பர் ஒருவர் இந்திய உணவு வகைகள் மேல் நாட்டம் கொண்டவர். திரு. பாடில் என்பது அவர் பெயர். அல்ஜீரிய நாட்டுக் காரர். அவருக்கு இந்திய உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிய ஆர்வம். ஆகையால் அவரையும், எனது நண்பரும் வீட்டின் உரிமையாளருமான திரு குல்வந்த் என்ப்வரையும் அழைத்தேன். மாலை உணவு செய்து சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தோம்.
திரு பாடில் தனது அனுபவங்களை சொல்ல துவங்கினார்.
அவருக்கு ஒரு நண்பர். அவர் ஓண்டாரியாவில் வசிப்பவர். அந்த நண்பர் ஒரு முறை பணி நிமித்தமாக வட கனடா செல்ல வேண்டி இருந்தது. அவர் சென்ற பகுதியில் இன்னுயிட்ஸ் வாழ்ந்து வருகின்றார்கள். இரு வாரங்கள் அங்கிருந்து விட்டு, திரும்பி வந்தவர், உடனே யாரிடமும் எதுவும் சொல்லாமல், மறுபடியும் வடகனடா சென்று, ஒரு ஆறுமாதம் வாழ்ந்தார். பின்பு அங்கிருந்து வந்து, தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று, இந்த் ஆண்டுடன் 22 வருடங்களாகி விட்டது என்று பாடில் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. தொடர்ந்து திரு பாடில் கூறினார் , "அவர் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் என்னை அங்கு ஒரு பள்ளியில் பாடம் கற்பிக்க அழைத்தார். அப்போது எனக்கு தெரிந்து இருக்கவில்லை எத்தகைய அனுபவம் எனக்கு காத்திருக்கிறதென்று. நான் அங்கு சென்றேன். ஒரு ஆறு மாதம் இருந்தேன்", என்று சொல்லிவிட்டு அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றி சொல்லத் துவங்கினார்.
இன்னுயிட்ஸ் மக்கள் சமூகமாக வாழ்வதையும் அவர்களது நேர்மையான சிந்தனைகளையும், எளிய வாழ்க்கை முறைகளையும் பற்றி சொன்னார்.
அவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தல், வேட்டையாடுதல். அனைவரிடமும் துப்பாக்கிகள் உண்டு. அவர்கள் தாங்கள் வேட்டையாடிய பொருட்களையும், சீல் மற்றும் மீன்களையும் ஒரு ஊருக்கு பொதுவான இடத்தில் சேமித்து வைத்து விடுவார்கள். அந்த ஊர் மக்கள் தங்களுக்கு அன்றன்றைய தேவைக்கானதை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வார்கள் "இலவசமாக". பாடிலிடம் கூட அவர்கள் இது உங்களுக்கும் சேர்த்துதான் என்று சொன்னதை அவரால் ஏற்க முடியாமல் பின்பு அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதையும் சொன்னார்.
அவர்களுக்குள் சண்டைகள் வரும், மற்ற எல்லா சமூகத்தினரையும் போல. ஆனால், அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதில்லை இச்சண்டைகளில். கத்தியால் கொலை கூட செய்வர். ஆனாலும், விசாரணையின் போது, "ஆமாம் கொலை செஞ்சேன்" என்று உரத்து கூறிவிடுவர்.
இவர்கள் சமூகத்தில் குழந்தைகளின் போக்கு சுவாரசியமானது. ஒரு ஐந்து வயது சிறுவன், தனது குளிர் உடுப்பை கழற்றி வைத்துவிட்டு, பனியில் சுருக்கி கொண்டு கிடந்துள்ளான். பாடில் அதை பார்த்துவிட்டு பதறி போய், அருகேயிருந்த பெரியவரிடம் சுட்டிக்காட்டி அவனை எழுப்ப சொன்னாராம். அந்த பெரியவர், "அட போப்பா! அவன் எதாவது வம்பு பண்ணிட்டிருப்பான்" என்று சொன்னாராம். இவர் மேலும் மேலும் வலியுறுத்தவே, அவர் அவனை எழுப்பியுள்ளார். உடனே அச்சிறுவன் தலையை மட்டும் திருப்பி, "ஹாய்" என்றானாம் சிரித்தவாறே. உடனே அப்பெரியவர் சிரித்துக் கொண்டே, "அவன் இந்த பனிக்கு பழகறான்" என்று கூறி சென்றுவிட்டாராம். நம்ம ஆளு முகத்தில் ஈயாடவில்லை(கிளிசே :P )
அவர்களுக்கு கல்வியின்பாற் நாட்டமும் இல்லை. வெறுப்பும் இல்லை. இது சுவையன்றோ?. இவர் முதன் முதலில் வகுப்புக்கு செல்கின்றார் பாடம் எடுக்க. வகுப்பில் யாரையும் காணவில்லை. ஆனால் சத்தம் மட்டும் வருகின்றது. என்னடா என்று பார்த்தால், குழந்தைகள் டெஸ்க்-கின் அடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனராம். இவருக்கு ஒரே சிரிப்பு இதைக் கண்டு. அவர்களை ஒருவாறு ஒன்று சேர்த்து டெஸ்க்கில் உட்காரவைத்து பாடம் எடுக்கும் போது, மிட்டாய்களை கொடுத்து ஆர்வத்தை வரவழைத்த கதையையும் சொன்னார்.
இதை கேட்டு கொண்டிருந்த திரு. குல்வந்த், " இந்த இடத்திலிருந்து இன்னும் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு சுற்றுலாவாக சில மாணவர்களை எங்கள் பள்ளி அழைத்திருந்தது. அவர்கள் வந்தார்கள். சுற்றி பார்த்தார்கள். மகிழ்ந்தார்கள். அவர்கள் திரும்பும் போது, அவர்களிடம் நாங்கள் கேட்டோம், உங்களுக்கு ஆச்சரியமும் சந்தோசத்தையும் அளித்த பொருள் என்ன? என்று." அதற்கு அவர்கள் அனைவருமே ஒரு சேர அளித்த பதில் "மரம்". அவர்கள் இதற்கு முன் மரங்களை பார்த்ததில்லையாம். அவர்கள் இருக்கும் இடங்களில் கிடையாதாம்.!!
மேலும் ஆங்கில மொழி பேராசிரியர் என்ற வகையில் அவர் கூறியது " நாற்பது வருடங்கள் முன்பு வரை அவர்களது மொழியில் நான், எனது என்ற வார்த்தைகளே கிடையாது". இது என்னை திகைப்புறச் செய்தது.
இதை குறித்து நான் மேலும் படிக்க முயல்கையில், சமூக அறிவியலாளர் ஒருவர், ஒரு இன்னுயிட்டிடம், பேச்சு வாக்கில் கேட்டாராம், " என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க?" என்று. அதற்கு அந்த இன்னுயிட் நண்பர், " நான் ஏன் யோசிக்கனும்? எங்ககிட்டே தேவையான மாமிச உணவு இருக்கே" என்று மிக இயல்பாக கூறினாராம். இது ஸென் கதை மாதிரி இருக்கு. இல்லையா?.
அப்புறம், என் நண்பன் ஒரு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த செய்தியை சொன்னான்.
அக்காலத்தில் இன்னுயிட்களில் வயதானவர்கள் தாங்கள் சமூகத்திற்கு பாரம் என்று நினைத்துவிட்டால் தங்களது ஆடைகளை களைந்து விட்டு, வடக்கு நோக்கி யாரிடம் எதுவும் கூறாமல் நடக்கத் துவங்கி விடுவர் என்று.
இயற்கை நமக்கு பாடங்களை கற்பித்தவாறே உள்ளது.
Monday, August 06, 2007
ஒரு புத்தகம்-shogun
பொதுவாக நான் ஒரு பரந்த வாசிப்பனுபவம் கொண்டவன் கிடையாது. ஆனாலும் அவ்வப்போது என் கண்களில் சில சுவாரசியமான புத்தகங்கள் படத்தான் செய்கின்றன. தேர்ந்த உண்மையான உள்ளொளியுடன் எழுதப் படுகின்ற புத்தகங்கள், நமக்கு பல நாள் வாழ்ந்த அனுபவங்களை கொடுப்பதில் தவறுவதில்லை. இவ்வகையில் நான் சீரிய புத்தகங்களை சான்றோர்களாக கருதுகின்றேன். கல்வெட்டுகள், சுவடிகள், செவி வழி ஞானம் என்று பல வகைகளில் நமக்கு அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்று புதினங்கள் சில நம்மில் பலருக்கு அறிமுகமானவைகளே. இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால், 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' என்ற இந்த இரு புத்தகங்களையும் சொல்லலாம். இவை தவிர 'வால்காவிலிருந்து கங்கை வரை' சமுக நிகழ்வுகளுக்கு பின் புலமாக இருந்த சில காரணிகளை தோலுரிப்பதால் இந்நூலை அவ்வகை புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்று எனக் கொள்கின்றேன். இந்த பதிவில் வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புதினத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தலைப் படுகின்றேன்.
புத்தகத்தின் தலைப்பு: ஷோகன்
வெளியான ஆண்டு: 1975
ஆசிரியர் : ஜேம்ஸ் க்ளெவல்
வெளியீடு :Atheneum, NewYork
இந்தப் புதினம், 1600-க்கு மேற்பட்ட ஆண்டுகளில் ஜப்பான் எவ்வாறு இருந்தது என்பதை நமக்கு காட்டுகின்றது. அங்கு நிலவிய அரசியல், சமூக,மத சூழ்நிலைகளை நமக்கு ஒரு ஐரோப்பிய மாலுமியின் மூலம் அறிமுகப் படுத்துகின்றார், திரு. ஜேம்ஸ் க்ளெவல். இந் நூலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் 1560-1600 வரையான காலகட்டத்தில் ஐரோப்பாவின் அரசியல் நிலை பற்றிய சிறு குறிப்பை க்ளெவலின் கண்கள் மூலம் பார்ப்போம்.
கத்தோலிக்க ஸ்பெயினுடன் நாற்பது வருடத்திற்கும் மேலாக போர்முறை எதிர்ப்பை காட்டி வருகின்றது புரொட்டஸ்டன்ட் நெதர்லாந்து. நெதர்லாந்து சட்டரீதியாக ஸ்பெயின் பேரரசின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. இங்கிலாந்து ரோமன் கிறித்துவ சம்பிரதாயங்களில் இருந்து ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் விடுபட்ட முதல் நாடு என்பதால், இருபது வருடங்களாக ஸ்பெயினுடன் அறிவிக்கப்பட்ட போரில் ஈடுபட்டுள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் கடைசி பத்தாண்டுகளாக இங்கிலாந்து, நெதர்லாந்துடன் இணைந்து செயல்படுகின்றது.
மேலும் போப் கிளிமண்ட் VII 'ஸாராகோசா ஒப்பந்தத்தில்' (1529) கையெழுத்திட்டு, உலகின் கிழக்கு பாகாங்களை போர்த்துகீசியருக்கும், மேலை பாகங்களை ஸ்பானியர்களுக்கும் பிரித்து விடுகின்றார். போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் ரோமன் கத்தோலிக்க சர்ச்-சை ஏற்றுக் கொண்டவர்கள்.
இந்த நிலையில் கதை துவங்குகின்றது.
ஒரு இங்கிலாந்து மாலுமி, நெதர்லாந்து கப்பலை செலுத்தி கொண்டு தென் அமெரிக்கா அடைவதும் அங்கிருந்து அவர் ஜப்பானுக்கு செல்வதும் ஒரு அற்புத தன்னம்பிக்கை முயற்சி. இதில் மாலுமி எவ்வாறு திடசித்தனாக இருப்பதும், தனது குழுவினருக்காக போராடுவது நன்றாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த மாலுமியின் பெயர், Blackthrone. இவர், ஜப்பானிய வாழ்க்கை முறைகளை பின்பற்றி அதில் உள்ள சிறப்பம்சங்களை உள்வாங்குவது, பல மன அதிர்வுக்குள் நிகழ்கின்றது. இந்த மாலுமிக்கு அன்ஜின்-சான் என்ற பெயர் ஜப்பானியர்களால் இடப்படுகின்றது. இதற்கு கேப்டன்
என்று பொருள். இவர் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பே, அங்கு போர்த்துகீசர்களால் ரோமன் கத்தோலிக் சர்ச் நிறுவப்பட்டிருக்கின்றது. இதன் பாதிரியாக அல்விட்டோ என்பவர் உள்ளார். இவர் ஜப்பானில் சர்ச்களை வளர்ப்பதில் பேரார்வம் கொண்டு அங்குள்ள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக்க கடுமையாக முயல்கின்றார்.
ஜப்பான் அக்கால கட்டத்தில் பல மாகாணங்களாக பிரிந்து இருக்கின்றது. 1542 களில் டைக்கோ என்பவர், தனது போர்திறம் மூலம், அனைத்து மாகாணங்களையும் இணைத்து ஒரு அவையை உண்டாக்குகிறார். அந்த அவைக்கு கவுன்சில் ஓஃப் ரீஜென்ட்ஸ் என்று பெயரிடப்படுகின்றது.டைக்கோ அதன் தலைவராக பிரகடனப்படுத்தி கொள்கிறார். டைக்கோ-விற்கு வாரிசாக ஒரு சிறுவன் இருக்கும் தருவாயில் அவர் மரணமுறுகின்றார். அச்சிறுவன் வளர்ந்து பொறுப்பேற்கும் வரை, டோரோனாகா -வை தலைவனாக அந்த கவுன்சில் அரசியல் மற்றும் அதிகாரத்தின் காரணமாக ஏற்றுக் கொள்கின்றது. டோரோனாக டைக்கோவின் வட்டத்திலேயே என்றும் இருந்தவர் என்பதும் ஒரு காரணம். ஆனாலும் மாகாணங்களின் தலைவர்களுக்கு கவுன்சிலின் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றது.
இச்சூழலில் தான் பிளாக்த்ரோன் ஜப்பானுக்குள் நுழைகின்றார். அவரது கலம் புயலில் சிக்கி கரையைத் தட்டுகின்றது. பின்பு டோரோனாகா -வை சந்திக்கின்றார். இவரை பயன்படுத்தி, தனது இராஜ தந்திரம் மூலம் டோரோனாகா எவ்வாறு காயை நகர்த்துகின்றார் என்பது சுவாரசியமானது.
சில மாகாண தலைவர்கள் ரோமன் சர்ச்சி-ற்கு ஆதரவாக உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு சர்ச்-சை விட அதன் மூலம் கிடைக்கும் கறுப்புக் கப்பல் வணிகத்தின் மீது அதிக நாட்டம்.
இவ்வாறு ஒரு பெரிய அளவில் அரசியல் நிகழ்வுகளும், அதில் உள்ள சிக்கல்களும், அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் முறைகளும் மிகவும் திடுக்கிட வைக்கும்.
இப்புதினத்தில் எனக்கு மிகுந்த சுவாரசியமான சில விசயங்களை உங்களுக்கு தருகின்றேன்.
1. Rutters: இது ஒரு மாலுமியின் உயிர் மூச்சு. இது ஒரு சிறு புத்தகம். இதில் ஒரு மாலுமி தான் புதிதாக பயணம் மேற்கொள்ளும் வழிகளில் காணும் நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். துறைமுகங்களுக்கும், முனைகளுக்கும் உண்டான காந்த முள்ளின் அளவைகள் இருக்கும். மேலும், அவர்கள் காணும் கடலின் நிறமும், ஒலியும், கடற்படுகைகளும் குறிக்கப்பட்டு இருக்கும். காற்றின் போக்கும் அவைகளின் திசைகளும் இருக்கும். மேலும் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதான் செய்திகளும் உண்டு. ஒரு பாதுகாப்பான கடற்பயணத்திற்கு தேவையான அனைத்து குறிப்பும் எனக் கொள்ளலாம்.
இதை கைபற்ற பல வழிகளில் பல முயற்சிகள் நிகழும். இதில் போலிகளும் உண்டு. ஒரு தேர்ந்த மாலுமியால் மட்டுமே போலியையும், உண்மையையும் பிரித்து அறிய முடியும். இதை எவ்வாறு பிளாக்த்ரோன் பயன்படுத்துகிறார் என்பது சுவாரசியம்.
2. டைக்கோவின் இறப்புக் கவிதை:
" நான் ஒரு பனித்துளி யென பிறந்தேன்
பனித்துளியாக மறைகின்றேன்
ஓசாகா கோட்டையும் மேலும் யான் புரிந்த மற்றவைகளும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவே"
இதை படித்தவுடன், பாரதி சொன்ன பாடல் நினைவுக்கு வந்தது.
"உலகெ லாமொர் பெருங்கன வஃதுள்ளே
..........................................
........................
மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங்கன வாகும்." (சுயசரிதை : முன்னுரை: பாடல் 3)
இதை பற்றி மேல் விவரங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்
3. ஜப்பானியர்களின் ஜாதீய முறைகள், அவர்களுக்கு இருக்கும் "கர்மா" (விதி என்ற பொருளில்) நம்பிக்கை அவர்களது சமூகத்தை ஆதிக்க சமூகமாக பார்க்கத் தூண்டுகின்றது. மேலும் அவர்கள் பெண்களுக்கு இட்டிருக்கும் நியதிகள் இக்கூற்றை உறுதி செய்கின்றது.
இவற்றையெல்லாம் மீறி, இப்புத்தகம் படிக்க சுவாரசியமானது என்பது நிஜம்.
புத்தகத்தின் தலைப்பு: ஷோகன்
வெளியான ஆண்டு: 1975
ஆசிரியர் : ஜேம்ஸ் க்ளெவல்
வெளியீடு :Atheneum, NewYork
இந்தப் புதினம், 1600-க்கு மேற்பட்ட ஆண்டுகளில் ஜப்பான் எவ்வாறு இருந்தது என்பதை நமக்கு காட்டுகின்றது. அங்கு நிலவிய அரசியல், சமூக,மத சூழ்நிலைகளை நமக்கு ஒரு ஐரோப்பிய மாலுமியின் மூலம் அறிமுகப் படுத்துகின்றார், திரு. ஜேம்ஸ் க்ளெவல். இந் நூலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் 1560-1600 வரையான காலகட்டத்தில் ஐரோப்பாவின் அரசியல் நிலை பற்றிய சிறு குறிப்பை க்ளெவலின் கண்கள் மூலம் பார்ப்போம்.
கத்தோலிக்க ஸ்பெயினுடன் நாற்பது வருடத்திற்கும் மேலாக போர்முறை எதிர்ப்பை காட்டி வருகின்றது புரொட்டஸ்டன்ட் நெதர்லாந்து. நெதர்லாந்து சட்டரீதியாக ஸ்பெயின் பேரரசின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. இங்கிலாந்து ரோமன் கிறித்துவ சம்பிரதாயங்களில் இருந்து ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் விடுபட்ட முதல் நாடு என்பதால், இருபது வருடங்களாக ஸ்பெயினுடன் அறிவிக்கப்பட்ட போரில் ஈடுபட்டுள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் கடைசி பத்தாண்டுகளாக இங்கிலாந்து, நெதர்லாந்துடன் இணைந்து செயல்படுகின்றது.
மேலும் போப் கிளிமண்ட் VII 'ஸாராகோசா ஒப்பந்தத்தில்' (1529) கையெழுத்திட்டு, உலகின் கிழக்கு பாகாங்களை போர்த்துகீசியருக்கும், மேலை பாகங்களை ஸ்பானியர்களுக்கும் பிரித்து விடுகின்றார். போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் ரோமன் கத்தோலிக்க சர்ச்-சை ஏற்றுக் கொண்டவர்கள்.
இந்த நிலையில் கதை துவங்குகின்றது.
ஒரு இங்கிலாந்து மாலுமி, நெதர்லாந்து கப்பலை செலுத்தி கொண்டு தென் அமெரிக்கா அடைவதும் அங்கிருந்து அவர் ஜப்பானுக்கு செல்வதும் ஒரு அற்புத தன்னம்பிக்கை முயற்சி. இதில் மாலுமி எவ்வாறு திடசித்தனாக இருப்பதும், தனது குழுவினருக்காக போராடுவது நன்றாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த மாலுமியின் பெயர், Blackthrone. இவர், ஜப்பானிய வாழ்க்கை முறைகளை பின்பற்றி அதில் உள்ள சிறப்பம்சங்களை உள்வாங்குவது, பல மன அதிர்வுக்குள் நிகழ்கின்றது. இந்த மாலுமிக்கு அன்ஜின்-சான் என்ற பெயர் ஜப்பானியர்களால் இடப்படுகின்றது. இதற்கு கேப்டன்
என்று பொருள். இவர் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பே, அங்கு போர்த்துகீசர்களால் ரோமன் கத்தோலிக் சர்ச் நிறுவப்பட்டிருக்கின்றது. இதன் பாதிரியாக அல்விட்டோ என்பவர் உள்ளார். இவர் ஜப்பானில் சர்ச்களை வளர்ப்பதில் பேரார்வம் கொண்டு அங்குள்ள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக்க கடுமையாக முயல்கின்றார்.
ஜப்பான் அக்கால கட்டத்தில் பல மாகாணங்களாக பிரிந்து இருக்கின்றது. 1542 களில் டைக்கோ என்பவர், தனது போர்திறம் மூலம், அனைத்து மாகாணங்களையும் இணைத்து ஒரு அவையை உண்டாக்குகிறார். அந்த அவைக்கு கவுன்சில் ஓஃப் ரீஜென்ட்ஸ் என்று பெயரிடப்படுகின்றது.டைக்கோ அதன் தலைவராக பிரகடனப்படுத்தி கொள்கிறார். டைக்கோ-விற்கு வாரிசாக ஒரு சிறுவன் இருக்கும் தருவாயில் அவர் மரணமுறுகின்றார். அச்சிறுவன் வளர்ந்து பொறுப்பேற்கும் வரை, டோரோனாகா -வை தலைவனாக அந்த கவுன்சில் அரசியல் மற்றும் அதிகாரத்தின் காரணமாக ஏற்றுக் கொள்கின்றது. டோரோனாக டைக்கோவின் வட்டத்திலேயே என்றும் இருந்தவர் என்பதும் ஒரு காரணம். ஆனாலும் மாகாணங்களின் தலைவர்களுக்கு கவுன்சிலின் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றது.
இச்சூழலில் தான் பிளாக்த்ரோன் ஜப்பானுக்குள் நுழைகின்றார். அவரது கலம் புயலில் சிக்கி கரையைத் தட்டுகின்றது. பின்பு டோரோனாகா -வை சந்திக்கின்றார். இவரை பயன்படுத்தி, தனது இராஜ தந்திரம் மூலம் டோரோனாகா எவ்வாறு காயை நகர்த்துகின்றார் என்பது சுவாரசியமானது.
சில மாகாண தலைவர்கள் ரோமன் சர்ச்சி-ற்கு ஆதரவாக உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு சர்ச்-சை விட அதன் மூலம் கிடைக்கும் கறுப்புக் கப்பல் வணிகத்தின் மீது அதிக நாட்டம்.
இவ்வாறு ஒரு பெரிய அளவில் அரசியல் நிகழ்வுகளும், அதில் உள்ள சிக்கல்களும், அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் முறைகளும் மிகவும் திடுக்கிட வைக்கும்.
இப்புதினத்தில் எனக்கு மிகுந்த சுவாரசியமான சில விசயங்களை உங்களுக்கு தருகின்றேன்.
1. Rutters: இது ஒரு மாலுமியின் உயிர் மூச்சு. இது ஒரு சிறு புத்தகம். இதில் ஒரு மாலுமி தான் புதிதாக பயணம் மேற்கொள்ளும் வழிகளில் காணும் நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். துறைமுகங்களுக்கும், முனைகளுக்கும் உண்டான காந்த முள்ளின் அளவைகள் இருக்கும். மேலும், அவர்கள் காணும் கடலின் நிறமும், ஒலியும், கடற்படுகைகளும் குறிக்கப்பட்டு இருக்கும். காற்றின் போக்கும் அவைகளின் திசைகளும் இருக்கும். மேலும் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதான் செய்திகளும் உண்டு. ஒரு பாதுகாப்பான கடற்பயணத்திற்கு தேவையான அனைத்து குறிப்பும் எனக் கொள்ளலாம்.
இதை கைபற்ற பல வழிகளில் பல முயற்சிகள் நிகழும். இதில் போலிகளும் உண்டு. ஒரு தேர்ந்த மாலுமியால் மட்டுமே போலியையும், உண்மையையும் பிரித்து அறிய முடியும். இதை எவ்வாறு பிளாக்த்ரோன் பயன்படுத்துகிறார் என்பது சுவாரசியம்.
2. டைக்கோவின் இறப்புக் கவிதை:
" நான் ஒரு பனித்துளி யென பிறந்தேன்
பனித்துளியாக மறைகின்றேன்
ஓசாகா கோட்டையும் மேலும் யான் புரிந்த மற்றவைகளும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவே"
இதை படித்தவுடன், பாரதி சொன்ன பாடல் நினைவுக்கு வந்தது.
"உலகெ லாமொர் பெருங்கன வஃதுள்ளே
..........................................
........................
மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங்கன வாகும்." (சுயசரிதை : முன்னுரை: பாடல் 3)
இதை பற்றி மேல் விவரங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்
3. ஜப்பானியர்களின் ஜாதீய முறைகள், அவர்களுக்கு இருக்கும் "கர்மா" (விதி என்ற பொருளில்) நம்பிக்கை அவர்களது சமூகத்தை ஆதிக்க சமூகமாக பார்க்கத் தூண்டுகின்றது. மேலும் அவர்கள் பெண்களுக்கு இட்டிருக்கும் நியதிகள் இக்கூற்றை உறுதி செய்கின்றது.
இவற்றையெல்லாம் மீறி, இப்புத்தகம் படிக்க சுவாரசியமானது என்பது நிஜம்.
கனவுகளைத் தேடி
கதிரவனின் வெண் மஞ்சளில்
எனது கனவுகள் செதுக்கப்படுகின்றது.
எண்ணங்களே வாழ்க்கையாகி
சிந்தனை சிலைவடிக்கும்
கனவுச் சிற்பி ஆகினேன்.
மிதக்கும் கம்பளங்களாகிப் போன
இக்கனவுலகு
இயல்நிலையை தொடும் கணம்,
மனச் சூறாவளியில்
அலை எழுப்ப,
நானும் நீங்களும் எப்போதும்
எதிரெதிர் கரைகளிலேயே!
-பாலாஜி-பாரி
எனது கனவுகள் செதுக்கப்படுகின்றது.
எண்ணங்களே வாழ்க்கையாகி
சிந்தனை சிலைவடிக்கும்
கனவுச் சிற்பி ஆகினேன்.
மிதக்கும் கம்பளங்களாகிப் போன
இக்கனவுலகு
இயல்நிலையை தொடும் கணம்,
மனச் சூறாவளியில்
அலை எழுப்ப,
நானும் நீங்களும் எப்போதும்
எதிரெதிர் கரைகளிலேயே!
-பாலாஜி-பாரி
பாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்!! -2
மிக மிக அமைதியான குரலில், தோழமையுடன் பேசும் பத்மா, இன்று நம்மிடையே, தனது ஆராய்ச்சி காலங்களில் உலகத்தின் பெரும் கவனம் பெற்ற மனித மரபணு திட்டத்தை பற்றி பகிர்ந்து கொள்கின்றார். கார்னலில் இரு வருடங்கள் உதவி பேராசிரியாராக பணி புரிந்து, பின்பு அதில் வளர்ச்சிக்கு இருந்த தடைகளாலும், மற்ற காரணங்களாலும், அப்பணியை உதறிவிட்டு மீண்டும் பல்கலைகழகம் சென்று MBA பட்டம் பெற்றார். அதன் பின் மைக்ரோசாஃப்ட் உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு அது தனது எண்ணத்திற்கு நிறைவை தரவில்லை என்று உணர்ந்தார். ஆகையால் அவர் மீண்டும் பல்கலைகழகம் சென்று பொது சுகாதாரத்தில் பட்டம் பெற்றார். தனக்கு முன்பே அனுவபமிருக்கும் மருத்துவ அறிவியற் துறையும், தனது "கட்டென்பதறியோம்" என்ற உளப்பாங்கினால் கற்ற மேலாண்மை கல்வியையும் amalgam செய்து தனது சிறு வயது எண்ணமான ” இது போல கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவாவது மருத்துவராக வேண்டும்” என்ற பொறியை இன்று தன்னளவில் பூர்த்தி செய்யும் விதமாக மருத்துவ திட்ட இயக்குநராக இருக்கின்றார். தான் பெற்ற இந்த தகுதிகள் இன்று அவரை ஒரு முழுமை ஆக்கி உள்ளதாக நினைக்கின்றார். மேலே குறிப்பிட்டது உங்களுக்கு அவரை பற்றிய ஒரு பின் புலத்திற்காகவே. "உண்மை சுதந்திரம் வேண்டி நின்றார் வேறேதும் கொள்வாரோ " என்ற வரியின் நினைவு எனக்கு தவிர்க்க முடியவில்லை.
இனி அவருடன்.....
6. ஒரு இந்திய கிராமத்து பெண் அறிவியல் துறையில் பிரகாசிக்க இப்போதைய சூழலில் இயலுமா?
"நிச்சயமாக முடியும். திடமான மனமும், முயற்சியும் இருந்தால். அசைவறு மதி வேண்டும் !! "
7. சிறிது நாட்களுக்கு முன் ஹார்வேட் பல்கலைகழகத்தில் ஒரு பேராசிரியர் தனது எண்ணத்திற்கு அறிவியலை துணைக்கு அழைத்து கடும் கண்டனத்திற்கு ஆளானார். இது குறித்து ரவி ஸ்ரீரிநிவாஸ் ஒரு பதிவு இட்டார். அப்பேராசிரியரின் கூற்றை நீங்களும் உங்கள் பதிவில் சுட்டி இருந்தீர்கள். இத்தகைய சூழலில், ஒரு பெண் அறிவியலாளராக புகழ்பெற்ற கார்னல் பல்கலைகழகத்தில் பணியாற்றிய நீங்கள், அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள்? ஒரு பெண் அறிவியலாளரை இந்த சமூகம் எப்படி பார்க்கின்றது?
கார்னெலில் பெண் விஞ்ஞானிகளுக்கு பாலியல் தொந்திரவுகளும் உண்டு, சிறப்பான ஆராய்சி project களும் கிடப்பதில்லை. ஒரே நேரத்தில் இரு மாணவரிடையே ஒரே project தந்து போட்டியை வளர்ப்பது உண்டு. பெண்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற கருத்தும் உண்டு. ஆனால், என் துறை தலைவர் என்னை வேறு படுத்தியதில்லை. ஆனால் எனக்கு திருமணம் என்று சொல்லி விடுப்பு அனுமதி கேட்க எண்ணியபோது, நான் திருமணம் செய்து கொண்டு ஆய்வகத்தை விட்டு விடமாட்டேன் தானே என்று எனக்கு முன்னதாக பேசியதை கேட்டவுடன், இப்போதைக்கு திருமணமாவதை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து ஊருக்கு சென்றேன். திருமணம் ஆனதும் 6 மாதம் வரை யாருக்கும் எனக்கு திருமணமானதே தெரியாது. அர்விந்தும் அப்போது கலிபோர்னியாவில் இருந்ததால் பிரச்சினை இல்லை. circadian variation of HLA gene பிரச்சினையில் வேலை பார்த்த போது, இரவு பகல் பாராது ஆய்வகத்தில் இருக்கும் போது, சக ஆராய்சியாளர்கள் இரவில் நான் என்னுடைய அறைக்கு வரும் போது, எனக்கு துணையாக வருவதும் உண்டு. கார்னெலின் தற்போதைய dean தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரே பெண் ஆராய்ச்சி மாணவிகளுக்காக ஒரு கழகமும் ஏற்படுத்தியிருந்தார்.
ஆராய்ச்சி செய்கிற பெண்கள் நல்ல மனைவியாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது என்று எண்ணுகிறேன். எனக்கு திருமணம் செய்ய எண்ணி என் பெற்றோர்கள் சிலரிடம் பேசிய போது, படித்த சில ஆண்களே, இரவில் வெகு நேரம் கழித்து வரும் பெண்ணின் நடத்தையில் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும் என்று கேட்டிருக்கிறார்கள். என் சகோதரிக்கு திருமணம் ஆவதும் தடங்கி கொண்டே இருந்தது. வெளிப்படையாகவே சிலர் என் சகோதரியிடம் உனக்கோ திருமணம் ஆக போவதில்லை நீ ஏன் 50 வயதுள்ளவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் சொன்னதுண்டு. ஆராய்சி செய்யும் பெண்களின் குழந்தைகளைக்கூட ஒரு பூத கண்ணாடி கொண்டு குறைகளை தேடி, அதிகம் படித்த பெண் குடும்பத்தை கவனிப்பதில்லை என்றும் குறை கூறுகிறார்கள். கணவனின் ஒத்துழிப்பு இல்லாமல் திண்டாடும் பெண்களில் எனக்கு தெரிந்தே 3 பேர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளார்கள். கலந்துரையாடும் கூட்டங்களுக்கு சில முறை செல்ல முடிவதில்லை, மேலும் grant கிடைத்துவிட்டாலோ இவள் யாருடனுன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருப்பாள் என்றும் நாகூசாமல் பேசுவாரும் உண்டு.
can you adjust என்று கேட்பவரும், இதனால் என்ன தவறு? என்று சொல்பவரும் அதிகம். பொதுவாகவே வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரச்சினைகள் உண்டு என்றாலும், இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பவர்களுக்கு இவை அதிகம். ஒரு கார்த்திகை அன்று நான் புதிதாக க்ளோன் செய்த ஜீனை சரிபார்க்க வேலை செய்ய வேண்டி விடியற்காலமே கிளம்பி போய்விட, வீட்டில் இருந்த என் கணவரின் பெற்றோரிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அமெரிக்காவில் மத சம்பந்தமாக விடுப்பு எடுக்க முடியும் என்றும், நான் வேண்டுமென்றே வேலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதும் ஒரு கதை. பெரும்பாலோருக்கு ஆராய்ச்சியின் காலமும், அதன் முடிவுகளும் நம் கையில் இல்லை என்பது புரிவதில்லை. இது கணினியில் வேலை பார்பது போல சட்டென்று சேமித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப முடியாது. அதுவும் ஒரு ஜீன் க்ளோன் செய்தால், அதை வளர்த்து அதன் தன்மையை அறிந்து, அதை சரிபார்த்து என பலவும் தொடர் நிகழ்வுகளாகும்.
8. ஹ்யூமன் ஜீனோம் ப்ரோஜக்ட் பற்றி சற்று விவரமாக கூற இயலுமா? குறிப்பாக இந்த திட்டத்தின் நோக்கம், அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் கடைசியாக அதனால் தோன்றிய உலக அரசியல் நிலைப்பாடுகள் பற்றி கூற இயலுமா?
பதின்மூன்று வருடங்களாக நடந்து 2003இல் நிறைவு பெற்ற மனித ஜீனோம் முயற்சி, தற்போது தீவிரவாதத்தை தடுக்க பண் உதவி பெறுவது போல நிறைய பொருட்செலவு செய்து நடத்தப் பட்ட ஒரு ஆராய்ச்சி. இதில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு காரணம்
1.25000 ஜீன்களை க்ளோன் செய்து அதன் மில்லியன் DNA வடிவை காண்பதும், அதன் மூலம் ஒருவரின் மூலக கூற்றை(genetic make up) அறிவதும் அதன் மூலம் பிறப்பின் மூலம் வரும் நோய்களை தடுக்க முடியுமா என்பன போன்ற ஆய்வுகளை செய்ய திட்டம்
2. இதன் மூலம் கிடைக்கும் செய்தியை தனியார் நிறுவனத்திடம் தந்துவிடல் போன்றவை காரணம்.
இதனால் அடிப்படையிலேயே நோய்களை கண்டறிய முடியும், தடுக்க முடியும் ஒருவருக்கு நோய் வர சாத்தியக்கூறு உண்டா என்பது போல பல நன்மைகள் உண்டு.
இந்த போட்டியில் நான் முந்தி நீ முந்தி என்று வேலை செய்ய அதன் பளுவும் அதனுடன் சேர்ந்த சில தில்லுமுல்லுகளும், அதன் பின் தொடர் ஆராய்ச்சிக்கு பண உதவி தருவதில் பாரபட்சமும் இருந்தது ஒரு பக்கம் என்றால் சில நேரடி அபாயங்களும் உள்ளன என்பது தெரிய வந்தது.
அவை கீழே:
அ. ஒருவருக்கு நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பது தெரிய வந்தால் அவரின் காப்பீடு உரிமை, உடல் நல காப்பீட்டி மாத கட்டணம் உயரும் சாத்தியம், இராணுவம் பள்ளி, விளையாட்டு துறை இவற்றில் பலவித உரிமை பிரச்சினைகள் வரக்கூடும்
ஆ. ஆசியா, சீனா போன்ற இடங்களிலிருந்து வருபவருக்கு இன வாத உரிமை மீறல்கள், ஆப்பிரிக்க இனத்தவருக்கான உரிமை பாதிப்புக்கள் வரலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில இனத்தை சேர்ந்தவர்களை அவர்களின் மூலக் கூற்றின் அடிப்படையில் கொடுமை படுத்தவும் வாய்ப்பு உண்டு. இன்னார் இந்த துறையில் தான் பிரகாசிக முடியும் என்பது வரை பாகுபாடு வரக்கூடும்.
இ. திருமணத்தின் போது மூலக்கூறு அடிப்படை மூலம் பிரச்சினைகள் வரக்கூடும்
பெர்றோர்களின் மூலக் கூறு செய்தி பிள்ளைகளின் மனநலத்தை பாதிப்பது முதல், கருவில் உள்ள குழந்தையை பரிசோதிப்பதன் அபாயத்தை சரியாக மருத்துவர் எடுத்து சொல்வார்களா, பெண்களுக்கு இதி முடிவெடுக்க உரிமை உண்டா என்பது போல மனநிலை பிரச்சினைகளும் வரும்.
ஈ. அப்படியே நோய்களை தீர்க்க முடிந்தாலும் எத்தனை மக்களுக்கு இது பொருளாதார வகையில் முடியும் என்பதும் கேள்விக்குறி
உ. இதை உரிமை கொண்டாடுபவர் யார்? (ownership of DNA database), காப்புரிமை பிரச்சினைகள்...
இதுபோன்ற முயற்சிகள், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை அதிகமாக்கிவிடுமா
ஊ. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை தவறாக தங்கள் சொந்த இலாபம் கருதி உப்யோகிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் .
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(இதில் இவர் சொன்னதின் நேர்மறையான செய்திகள் வெளிப்படை. ஆனாலும் அது எவ்வாறு திரிக்கப் படும் என்ற அபாயத்தையும் முன் வைக்கின்றார் - பாரி)
9.நீங்கள் கூறிய படி, இப்போது திருப்தி தரும் வகையிலான பணியை செய்து வருகின்றீர்கள். மக்களோடு இணைந்து மக்களுக்காக திட்டங்கள் இடும் இப்பணியில் உங்களின் மருத்துவ அறிவியல் அனுபவமும் உங்களுக்கு நன்கு கைகொடுக்கும். இதை குறித்து நீங்கள் பதிவில் குறிப்பிடாத சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?
வட கரோலினா மாநிலத்திலிருந்து ஒரு ஆராய்ச்சி மாணவி எங்கள் துறைக்கு வந்திருந்தார். இவருக்கு இந்திய பெண்கள் சிலருடன் அவர்களின் உடல் நலம் பற்றி பேச வேண்டும் என்றும் ஒருவருக்கு 30$ சன்மானமும் தருவதாக சொல்லியிருந்தார். நானும் எங்களிடம் சிகிச்சைக்காக வந்த சில பெண்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றோம். எல்லா பெண்களும் தங்கள் பிள்ளைகளின் வீட்டில் தங்கியிருப்பவர்கள். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். சிலர் மார்பக புற்று நோயிலிருந்து குணமானவர்கள். ஆனலும் நான் இவர்களை சந்தித்தது அவர்கள் வேலை செய்யும் வீட்டில். வயதான இந்த பெண்கள் மணிக்கு 2.50$ க்கு குழந்தைகளை பார்த்து கொள்வதிலிருந்து சமைப்பது வரை பல வேலைகளை செய்கிறார்கள். எத்தனை கொடுமை! ஆணுக்கு கிடைக்கும் வேலை ஓய்வு போல இந்த பெண்களுக்கு ஏன் இல்லை? அதிலும் ஒரு (எசமானப்) பெண்ணும் அவர் கணவனும் இந்த பேட்டிக்கு எத்தனை நேரமாகும் என வினவ நான் ஒரு மணி ஆகும் என்று கூற, அவர்கள் அந்த பெண்ணிடம் மாலை பணம் தரும்போது அந்த ஒரு மனிக்கான $2.50 குறைத்து கொண்டு தருவதாக கூறியதை என்ன என்று சொல்வது?
இன்னொரு பெண் வீட்டில் காலையில் சமைத்து பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிறைய திருமணமாகாத ஆண்களுக்கு சப்பாத்தி இட்டு தரும் பணியை செய்கிறார். 10 சப்பாத்திக்கு இவருக்கு கிடைக்கும் ஊதியம்1:50$. இதன் பின் மாலையில் தன்னுடைய பேரக்குழந்தைகளோடு இன்னும் சில குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இந்த ஊதியத்தை இவர் கையில் கொடுப்பது கூட இல்லை. இலவச மருந்துகளும் சிகிச்சைகளும் பெற்று வாழும் இவர்களை தன்னை சார்ந்திருப்பதாக சொல்லி வரி சலுகை பெற இந்த பிள்ளைகள் தயங்குவதில்லை. பரிசு காசோலையாக சன்மானம் வந்தால் அதை மாற்றி தன்னிடம் தரமாட்டர்கள் என்று சொல்லி அதை பணமாக தருமாறு சொல்லி என்னிடம் கேட்ட வயதான கணவனையும் தன் மனைவிக்கு தேவையான ஓய்வை தர கூட வேலை செய்யும் கணவனையும் பார்த்த போது முதுமை இவ்வளவு கொடுமையானதா என்று தோன்றியது.
மத்திய அரசு நடத்திய ஒரு கலந்துரைடாலில் முதலில் எனக்கு எதுவும் தெரியாது என்று அதிகம் பேசாத சிலர், கூட்டம் ஆரம்பித்தபின் என்னுடைய திட்டங்களை பாராட்டியதும், அதன் தொடர்பாக மகளிர், தாய் சேய் நல திடக்குழு, குழந்தைகள் நல குழு ஆகியவற்றில் நியுஜெர்ஸியில் என்னை சேர்த்துகொண்டது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அங்கீகாரம் (Nj State minimum standard commitee). திறமைக்கான இந்த மரியாதை இந்தியாவில் எனக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. (இது திறமை மற்றும் மனிதத்திற்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள் :) -பாரி)
10. இத்தகைய திட்டங்கள் இந்தியாவில் நடைபெற இயலுமா?. அவ்வாறு செய்ய இந்தியாவில் அரசு சாரா நிறுவனங்கள் பல முயன்று வருகின்றன. அவர்களுக்கு உங்களால் உதவ இயலுமா? அதாவது திட்டங்கள் வகுப்பது என்ற நிலையில் மட்டும்.
அரசியல் கலப்பில்லாவிடில் முடியும். திட்டங்கள் வகுக்க உதவி செய்யவும் முடியும் அது சரியாக பயன்படுத்தப்படும் வரை.
இனி அவருடன்.....
6. ஒரு இந்திய கிராமத்து பெண் அறிவியல் துறையில் பிரகாசிக்க இப்போதைய சூழலில் இயலுமா?
"நிச்சயமாக முடியும். திடமான மனமும், முயற்சியும் இருந்தால். அசைவறு மதி வேண்டும் !! "
7. சிறிது நாட்களுக்கு முன் ஹார்வேட் பல்கலைகழகத்தில் ஒரு பேராசிரியர் தனது எண்ணத்திற்கு அறிவியலை துணைக்கு அழைத்து கடும் கண்டனத்திற்கு ஆளானார். இது குறித்து ரவி ஸ்ரீரிநிவாஸ் ஒரு பதிவு இட்டார். அப்பேராசிரியரின் கூற்றை நீங்களும் உங்கள் பதிவில் சுட்டி இருந்தீர்கள். இத்தகைய சூழலில், ஒரு பெண் அறிவியலாளராக புகழ்பெற்ற கார்னல் பல்கலைகழகத்தில் பணியாற்றிய நீங்கள், அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள்? ஒரு பெண் அறிவியலாளரை இந்த சமூகம் எப்படி பார்க்கின்றது?
கார்னெலில் பெண் விஞ்ஞானிகளுக்கு பாலியல் தொந்திரவுகளும் உண்டு, சிறப்பான ஆராய்சி project களும் கிடப்பதில்லை. ஒரே நேரத்தில் இரு மாணவரிடையே ஒரே project தந்து போட்டியை வளர்ப்பது உண்டு. பெண்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற கருத்தும் உண்டு. ஆனால், என் துறை தலைவர் என்னை வேறு படுத்தியதில்லை. ஆனால் எனக்கு திருமணம் என்று சொல்லி விடுப்பு அனுமதி கேட்க எண்ணியபோது, நான் திருமணம் செய்து கொண்டு ஆய்வகத்தை விட்டு விடமாட்டேன் தானே என்று எனக்கு முன்னதாக பேசியதை கேட்டவுடன், இப்போதைக்கு திருமணமாவதை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து ஊருக்கு சென்றேன். திருமணம் ஆனதும் 6 மாதம் வரை யாருக்கும் எனக்கு திருமணமானதே தெரியாது. அர்விந்தும் அப்போது கலிபோர்னியாவில் இருந்ததால் பிரச்சினை இல்லை. circadian variation of HLA gene பிரச்சினையில் வேலை பார்த்த போது, இரவு பகல் பாராது ஆய்வகத்தில் இருக்கும் போது, சக ஆராய்சியாளர்கள் இரவில் நான் என்னுடைய அறைக்கு வரும் போது, எனக்கு துணையாக வருவதும் உண்டு. கார்னெலின் தற்போதைய dean தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரே பெண் ஆராய்ச்சி மாணவிகளுக்காக ஒரு கழகமும் ஏற்படுத்தியிருந்தார்.
ஆராய்ச்சி செய்கிற பெண்கள் நல்ல மனைவியாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது என்று எண்ணுகிறேன். எனக்கு திருமணம் செய்ய எண்ணி என் பெற்றோர்கள் சிலரிடம் பேசிய போது, படித்த சில ஆண்களே, இரவில் வெகு நேரம் கழித்து வரும் பெண்ணின் நடத்தையில் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும் என்று கேட்டிருக்கிறார்கள். என் சகோதரிக்கு திருமணம் ஆவதும் தடங்கி கொண்டே இருந்தது. வெளிப்படையாகவே சிலர் என் சகோதரியிடம் உனக்கோ திருமணம் ஆக போவதில்லை நீ ஏன் 50 வயதுள்ளவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் சொன்னதுண்டு. ஆராய்சி செய்யும் பெண்களின் குழந்தைகளைக்கூட ஒரு பூத கண்ணாடி கொண்டு குறைகளை தேடி, அதிகம் படித்த பெண் குடும்பத்தை கவனிப்பதில்லை என்றும் குறை கூறுகிறார்கள். கணவனின் ஒத்துழிப்பு இல்லாமல் திண்டாடும் பெண்களில் எனக்கு தெரிந்தே 3 பேர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளார்கள். கலந்துரையாடும் கூட்டங்களுக்கு சில முறை செல்ல முடிவதில்லை, மேலும் grant கிடைத்துவிட்டாலோ இவள் யாருடனுன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருப்பாள் என்றும் நாகூசாமல் பேசுவாரும் உண்டு.
can you adjust என்று கேட்பவரும், இதனால் என்ன தவறு? என்று சொல்பவரும் அதிகம். பொதுவாகவே வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரச்சினைகள் உண்டு என்றாலும், இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பவர்களுக்கு இவை அதிகம். ஒரு கார்த்திகை அன்று நான் புதிதாக க்ளோன் செய்த ஜீனை சரிபார்க்க வேலை செய்ய வேண்டி விடியற்காலமே கிளம்பி போய்விட, வீட்டில் இருந்த என் கணவரின் பெற்றோரிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அமெரிக்காவில் மத சம்பந்தமாக விடுப்பு எடுக்க முடியும் என்றும், நான் வேண்டுமென்றே வேலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதும் ஒரு கதை. பெரும்பாலோருக்கு ஆராய்ச்சியின் காலமும், அதன் முடிவுகளும் நம் கையில் இல்லை என்பது புரிவதில்லை. இது கணினியில் வேலை பார்பது போல சட்டென்று சேமித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப முடியாது. அதுவும் ஒரு ஜீன் க்ளோன் செய்தால், அதை வளர்த்து அதன் தன்மையை அறிந்து, அதை சரிபார்த்து என பலவும் தொடர் நிகழ்வுகளாகும்.
8. ஹ்யூமன் ஜீனோம் ப்ரோஜக்ட் பற்றி சற்று விவரமாக கூற இயலுமா? குறிப்பாக இந்த திட்டத்தின் நோக்கம், அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் கடைசியாக அதனால் தோன்றிய உலக அரசியல் நிலைப்பாடுகள் பற்றி கூற இயலுமா?
பதின்மூன்று வருடங்களாக நடந்து 2003இல் நிறைவு பெற்ற மனித ஜீனோம் முயற்சி, தற்போது தீவிரவாதத்தை தடுக்க பண் உதவி பெறுவது போல நிறைய பொருட்செலவு செய்து நடத்தப் பட்ட ஒரு ஆராய்ச்சி. இதில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு காரணம்
1.25000 ஜீன்களை க்ளோன் செய்து அதன் மில்லியன் DNA வடிவை காண்பதும், அதன் மூலம் ஒருவரின் மூலக கூற்றை(genetic make up) அறிவதும் அதன் மூலம் பிறப்பின் மூலம் வரும் நோய்களை தடுக்க முடியுமா என்பன போன்ற ஆய்வுகளை செய்ய திட்டம்
2. இதன் மூலம் கிடைக்கும் செய்தியை தனியார் நிறுவனத்திடம் தந்துவிடல் போன்றவை காரணம்.
இதனால் அடிப்படையிலேயே நோய்களை கண்டறிய முடியும், தடுக்க முடியும் ஒருவருக்கு நோய் வர சாத்தியக்கூறு உண்டா என்பது போல பல நன்மைகள் உண்டு.
இந்த போட்டியில் நான் முந்தி நீ முந்தி என்று வேலை செய்ய அதன் பளுவும் அதனுடன் சேர்ந்த சில தில்லுமுல்லுகளும், அதன் பின் தொடர் ஆராய்ச்சிக்கு பண உதவி தருவதில் பாரபட்சமும் இருந்தது ஒரு பக்கம் என்றால் சில நேரடி அபாயங்களும் உள்ளன என்பது தெரிய வந்தது.
அவை கீழே:
அ. ஒருவருக்கு நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பது தெரிய வந்தால் அவரின் காப்பீடு உரிமை, உடல் நல காப்பீட்டி மாத கட்டணம் உயரும் சாத்தியம், இராணுவம் பள்ளி, விளையாட்டு துறை இவற்றில் பலவித உரிமை பிரச்சினைகள் வரக்கூடும்
ஆ. ஆசியா, சீனா போன்ற இடங்களிலிருந்து வருபவருக்கு இன வாத உரிமை மீறல்கள், ஆப்பிரிக்க இனத்தவருக்கான உரிமை பாதிப்புக்கள் வரலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில இனத்தை சேர்ந்தவர்களை அவர்களின் மூலக் கூற்றின் அடிப்படையில் கொடுமை படுத்தவும் வாய்ப்பு உண்டு. இன்னார் இந்த துறையில் தான் பிரகாசிக முடியும் என்பது வரை பாகுபாடு வரக்கூடும்.
இ. திருமணத்தின் போது மூலக்கூறு அடிப்படை மூலம் பிரச்சினைகள் வரக்கூடும்
பெர்றோர்களின் மூலக் கூறு செய்தி பிள்ளைகளின் மனநலத்தை பாதிப்பது முதல், கருவில் உள்ள குழந்தையை பரிசோதிப்பதன் அபாயத்தை சரியாக மருத்துவர் எடுத்து சொல்வார்களா, பெண்களுக்கு இதி முடிவெடுக்க உரிமை உண்டா என்பது போல மனநிலை பிரச்சினைகளும் வரும்.
ஈ. அப்படியே நோய்களை தீர்க்க முடிந்தாலும் எத்தனை மக்களுக்கு இது பொருளாதார வகையில் முடியும் என்பதும் கேள்விக்குறி
உ. இதை உரிமை கொண்டாடுபவர் யார்? (ownership of DNA database), காப்புரிமை பிரச்சினைகள்...
இதுபோன்ற முயற்சிகள், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை அதிகமாக்கிவிடுமா
ஊ. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை தவறாக தங்கள் சொந்த இலாபம் கருதி உப்யோகிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் .
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(இதில் இவர் சொன்னதின் நேர்மறையான செய்திகள் வெளிப்படை. ஆனாலும் அது எவ்வாறு திரிக்கப் படும் என்ற அபாயத்தையும் முன் வைக்கின்றார் - பாரி)
9.நீங்கள் கூறிய படி, இப்போது திருப்தி தரும் வகையிலான பணியை செய்து வருகின்றீர்கள். மக்களோடு இணைந்து மக்களுக்காக திட்டங்கள் இடும் இப்பணியில் உங்களின் மருத்துவ அறிவியல் அனுபவமும் உங்களுக்கு நன்கு கைகொடுக்கும். இதை குறித்து நீங்கள் பதிவில் குறிப்பிடாத சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?
வட கரோலினா மாநிலத்திலிருந்து ஒரு ஆராய்ச்சி மாணவி எங்கள் துறைக்கு வந்திருந்தார். இவருக்கு இந்திய பெண்கள் சிலருடன் அவர்களின் உடல் நலம் பற்றி பேச வேண்டும் என்றும் ஒருவருக்கு 30$ சன்மானமும் தருவதாக சொல்லியிருந்தார். நானும் எங்களிடம் சிகிச்சைக்காக வந்த சில பெண்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றோம். எல்லா பெண்களும் தங்கள் பிள்ளைகளின் வீட்டில் தங்கியிருப்பவர்கள். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். சிலர் மார்பக புற்று நோயிலிருந்து குணமானவர்கள். ஆனலும் நான் இவர்களை சந்தித்தது அவர்கள் வேலை செய்யும் வீட்டில். வயதான இந்த பெண்கள் மணிக்கு 2.50$ க்கு குழந்தைகளை பார்த்து கொள்வதிலிருந்து சமைப்பது வரை பல வேலைகளை செய்கிறார்கள். எத்தனை கொடுமை! ஆணுக்கு கிடைக்கும் வேலை ஓய்வு போல இந்த பெண்களுக்கு ஏன் இல்லை? அதிலும் ஒரு (எசமானப்) பெண்ணும் அவர் கணவனும் இந்த பேட்டிக்கு எத்தனை நேரமாகும் என வினவ நான் ஒரு மணி ஆகும் என்று கூற, அவர்கள் அந்த பெண்ணிடம் மாலை பணம் தரும்போது அந்த ஒரு மனிக்கான $2.50 குறைத்து கொண்டு தருவதாக கூறியதை என்ன என்று சொல்வது?
இன்னொரு பெண் வீட்டில் காலையில் சமைத்து பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிறைய திருமணமாகாத ஆண்களுக்கு சப்பாத்தி இட்டு தரும் பணியை செய்கிறார். 10 சப்பாத்திக்கு இவருக்கு கிடைக்கும் ஊதியம்1:50$. இதன் பின் மாலையில் தன்னுடைய பேரக்குழந்தைகளோடு இன்னும் சில குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இந்த ஊதியத்தை இவர் கையில் கொடுப்பது கூட இல்லை. இலவச மருந்துகளும் சிகிச்சைகளும் பெற்று வாழும் இவர்களை தன்னை சார்ந்திருப்பதாக சொல்லி வரி சலுகை பெற இந்த பிள்ளைகள் தயங்குவதில்லை. பரிசு காசோலையாக சன்மானம் வந்தால் அதை மாற்றி தன்னிடம் தரமாட்டர்கள் என்று சொல்லி அதை பணமாக தருமாறு சொல்லி என்னிடம் கேட்ட வயதான கணவனையும் தன் மனைவிக்கு தேவையான ஓய்வை தர கூட வேலை செய்யும் கணவனையும் பார்த்த போது முதுமை இவ்வளவு கொடுமையானதா என்று தோன்றியது.
மத்திய அரசு நடத்திய ஒரு கலந்துரைடாலில் முதலில் எனக்கு எதுவும் தெரியாது என்று அதிகம் பேசாத சிலர், கூட்டம் ஆரம்பித்தபின் என்னுடைய திட்டங்களை பாராட்டியதும், அதன் தொடர்பாக மகளிர், தாய் சேய் நல திடக்குழு, குழந்தைகள் நல குழு ஆகியவற்றில் நியுஜெர்ஸியில் என்னை சேர்த்துகொண்டது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அங்கீகாரம் (Nj State minimum standard commitee). திறமைக்கான இந்த மரியாதை இந்தியாவில் எனக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. (இது திறமை மற்றும் மனிதத்திற்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள் :) -பாரி)
10. இத்தகைய திட்டங்கள் இந்தியாவில் நடைபெற இயலுமா?. அவ்வாறு செய்ய இந்தியாவில் அரசு சாரா நிறுவனங்கள் பல முயன்று வருகின்றன. அவர்களுக்கு உங்களால் உதவ இயலுமா? அதாவது திட்டங்கள் வகுப்பது என்ற நிலையில் மட்டும்.
அரசியல் கலப்பில்லாவிடில் முடியும். திட்டங்கள் வகுக்க உதவி செய்யவும் முடியும் அது சரியாக பயன்படுத்தப்படும் வரை.
பாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்!!
அன்பு நண்பர்களே! பாரதி உயிருடன் இருந்தால், இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான். " பாரடா, நான் கொண்ட கனவை மெய்பித்தவளை. சக்தி கனலடா இவள்!" என்று கர்ஜித்திருப்பான் பெருமை பொங்க. என்னுள் ஒரு பெரும் சக்தியாக தோற்றம் எடுத்தது இவர் கூறிய பதில்கள். நமக்கு பாரதியின் கூற்றான மனதில் உறுதி வேண்டும் என்ற சொற்றொடருக்கு உண்மை பொருள் விளக்கினார் தனது மிக எளிய பதிவின் மூலம். இப்பொழுது "அசைவறு மதி வேண்டும்" என்பதற்கு புது பொலிவு சேர்க்கின்றார். பல நேரங்களில் நாம் take it for granted-ஆக எடுத்துக் கொள்ளும் வரிகளில், வாழ்க்கையின் பொருளை நிறுத்தி, நமக்கு களைப்பை தீர்க்க வருகின்றார், திருமதி. பத்மா அர்விந்த்.
இவர் தற்போது பொது நல ஆரோக்கிய திட்ட அமைப்பாளராக பணி புரிந்து வருகின்றார். இது இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணிக்கு நிகரானது. இவர் தனது உழைப்பையும், பாஸிட்டிவ்வான (நேர்மறையான) உளப்பாங்கையும் ஆற்றலின் தோற்றமாகக் கொண்டு, ஒரு விதையாக தோன்றி விருட்சமாக வளர்ந்தவர் . இவரது பதிவை பார்க்கும் எவரும் "அட" என்று எண்ணும் வகையில் ஒரு வரியை எழுதி வைத்துள்ளார். அது: ``I enjoy planning activities and design strategic plans for poor people``.
இனி இவருடன் ...
1. நீங்க பிறந்து வளர்ந்த சூழ்நிலை, உங்கள் பால்ய கால படிப்பார்வம் மற்றும் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் பற்றி கூறுங்களேன்.
ஒரு கீழ் நிலை நடுத்தர குடும்பத்தில், 5 சகோதர, சகோதரிகளுடன் பிறந்தேன். கோப்பையில் குடித்தால் சீக்கிரமே ஆகிவிடும் என்று கஞ்சியை தட்டில் ஊற்றி மெதுவாய் பருகி பசிதீர்த்துக்கொள்வோம். கிடைப்பது ஒரு மிட்டாய் என்றாலும் 8ஆல் வகுந்து உண்போம். பொருளுக்கு பஞ்சம் என்றாலும் அன்புக்கு பஞ்சமில்லை. எல்லோருமே நன்றாக படித்ததால், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செல்லப் பிள்ளை. வீட்டில் சர்க்காவும் ராட்டினமும் கொண்டு அம்மா நூல் நூற்று சட்டைகள் செய்வதுண்டு.
அப்போதெல்லாம் திருக்குறள், திருப்பாவை திருவெண்பாவை ஒப்பித்தல் போட்டிகள் வரும். நாங்கள் அனைவரும் பங்கு கொண்டு அந்த அந்த வகுப்புக்கு வரிசையில் பரிசு பெறுவது உண்டு. போக போக மற்றவர்கள் ஆர்வம் குறைந்துவிட, நான் மட்டும் தொடர்ந்து பங்கு பெறுவேன். திடீரென ஒரு தலைப்பு கொடுத்தாலும் பேசுவதில் எனக்கு தகுதி உண்டு என்பதால் என் பள்ளியின் சார்பாக பல ஊர்களுக்கும் சென்று பேச்சு போட்டிகள், பட்டி மன்றங்கள் இவற்றில் கலந்து கொள்வதும் உண்டு. கந்தர் கலிவெண்பா போன்றவை படித்து எழுத்து தேர்விலும் முதல் பரிசு பெற்றால் தொடர்ந்து ஒரு ஊதிய தொகை வரும். இது என் பெற்றோருக்கு உதவும் என்பதும் நான் தமிழ் படிக்க ஒரு காரணம். ஆனாலும் சில காலத்திற்கு பிறகு கட்டாயமாக ஆங்கில புத்தகங்களே படிக்க வீட்டில் ஊக்குவித்தனர்.
விளையாட நேரம் ஒதுக்குவதைக் காட்டிலும் படிப்பதும், யார் எழுதிய புத்தகமானாலும் தேடி படிப்பதும் பொழுது போக்காக இருந்தது. மற்ற குழந்தைகளுக்கும் விட்டு பாடங்களில் உதவுவதும், tutuion நடத்துவதும் மேலும் படிக்க ஆர்வம் வர காரணம்.
2. அறிவியல் துறையில் உங்களுக்கு ஈடுபாடு வருவதற்கு எத்தகைய சூழ்நிலை காரணமாக இருந்தது?
வறுமை. இலக்கியம் படிக்க ஆர்வம் இருந்தும் படித்தால் வேலை கிடைப்பது சிரமம், அறிவியல் படித்தால் உடனே எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைக்கும் என்று என் சகோதரர்கள் சொன்னதும், என் அக்கா தான் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசுவதும், என் அண்ணன் ஐ.ஐ.டியில் தன் அனுபவங்கள் பற்றி சொல்வதும் இதற்கும் மேலாக அவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது அவர்களுக்கு கிடைக்கும் நல்ல கவனிப்பும் காரணம். ஒருமுறை என் அம்மா கடுமையாக நோய்வாய்பட, காசில்லாமல் கவனிக்க யாருமின்றி, உறவினரும் கைவிட்ட நிலையில், ஒரு மருத்துவர் எங்கள் வேண்டுகோள் கேட்டு வீட்டிற்கு இரவில் வந்து கவனித்தபோது நான் சொல்லிக் கொள்வேன் " இது போல கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவாவது மருத்துவராக வேண்டும்" என்று.
3. உங்கள் மேற்படிப்பு குறித்து சில விவரங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?
என் அண்னனும் அக்காவும் மேற் படிப்பு படித்து கொண்டிருந்ததால் மற்ற நால்வரும் இளநிலை படித்து வேலை தேடிக்கொள்ளவேண்டும் என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார். ஆசிரியை வேலை பார்த்தாலே போதும் என்பதும் எப்படியாவது என் அக்காவிற்கு திருமணம் முடிக்க பொருள்சேர்க்க வேண்டும் என்றும் திடமாக இருந்தார். ஆனால் ஒவ்வொருவரும் 'நுழைவுதேர்வு தானே! இடம் கிடைக்கும் என்று என்ன நம்பிக்கை?" "முயற்சி செய்து பார்க்கிறேனே!" என்று சொல்லி அனுமதி வாங்குவோம். இதன் படி ஜிப்மரில் மருத்துவ துறையில் உயிர்வேதியில் படிக்க சேர்ந்தேன். நுழைவுத்தேர்வில் 10000 (கிட்டதட்ட) பேரில் தேர்வு செயப்பட்ட 500 பேரில் ஒருத்தியாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். வந்திருந்த 500 பேர்களில் ஐவருக்குத்தான் இடம் என்பதால் எனக்கு கிடைக்காது என்று தந்தை நம்பியிருக்க, வந்த அனைவரும் கான்வென்ட் ஆங்கிலத்தில் பேச, நான் தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உரையாட, நம்பிக்கை அற்று ஊருக்கு திரும்பிவிட்டோம். ஆச்சரியமாக முதலிடம் பெற்று தேர்ந்தேன். உதவிதொகையும் பிர்லாவிடமிருந்தும் உதவிதொகையும் கிடக்க அது ஆசிரியை வேலையைவிட அதிக ஊதியம் என்பதால் படிக்க அனுமதி கிடைத்தது. அப்போது முதன் முதலில் இறந்த ஒரு மனிதனின் உடலை அறுத்து படிக்கும் போது சக மாணவர்களும், ஆசிரியர்களும் கேவலமாக பெண் உறுப்புகளை பேசுவதும், அறுவை சிகிச்சை போது தவறாக பேசுவதையும் கண்கூடாக பார்த்து மனித மனத்தின் வக்கிரங்களை அறிந்து கொண்டேன்.
அதன் பின் AIIMS ல் காசநோய்க்கான எதிர்ப்பு சக்தியில் ஆராய்சி செய்ய அனுமதி கிடத்தது. என் சகோதரன் புது தில்லியில் வேலை பார்த்தால், அவனுக்கும் உதவியாக இருக்கும் stipendஉம் சம்பளத்தைவிட அதிகம் (அர்விந்த் கண் மருத்துவ மனியில் விரிவுரையாளர் வேலை) என்றும் தில்லி சென்றேன்.
வேலைக்கான ஊதியத்தைவிட, உதவிதொகை அதிகம் என்றே நாங்கள் அனைவரும் மேற்படிப்பு படிக்க அனுமதி பெற்றோம்.
என் மூத்த சகோதரிக்கே திருமணமாகாத நிலையில் நானும் வீட்டில் இருந்தால் என்ன செய்வது என்பதும், இவை அனைத்திற்கும் மேலாக எங்களுக்கு உறுதுணையாக என் அம்மா இருந்ததும் (அப்பாவிற்கு தெரியாமல் விண்ணப்ப படிவங்களை அனுப்ப,... அப்பா படிப்பதற்கு எதிரி இல்லை என்றாலும் நண்பர்களின் விமரிசனத்தையும் தன்னுடைய உறவினர்கள் எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவைத்ததையும் அவரால் தாங்க முடியவில்லை) மனம் தளரும் போதெல்லாம் மருந்தாக இருந்தது.
4. நீங்கள் எப்போது சமூகத்தை ஒரு விமர்சனக் கண்ணோடு பார்க்க துவங்கினீர்கள்? அதை குறித்த ஏதேனும் சம்பவங்கள் சொல்ல இயலுமா?
எனக்கு 4 வயதாக ஒருக்கும் போது எதிர்வீட்டு aunty கையில் குழந்தையுடன் மழையில் வெளியேற்றப் பட்ட போது எதனால் என்று அம்மாவிடம் கேட்க, பெண்குழந்தை பிறந்ததால் என்று சொன்னார். புரியாவிட்டாலும் நானும் பெண் தானே அவர்வீட்டு பாப்பாவிற்கு என்ன குறை என கேட்டது நினைவிருக்கிறது.எங்கள் வீட்டில் இரவை கழித்த அந்த பெண் மறு நாள் பாலிடால் குடித்து இறந்தது என்னை பாதித்தது.
என் 2வது வகுப்பு ஆசிரியை கோமளா அனுராதா திருமணம் தடை பட்டு கொண்டே போக, வருத்தப் பட்டு இறந்ததும் அர்த்தம் புரியாத வயதில் ஆழ்மனதில் காயமாகிப் போனது. பள்ளி விடுமுறை என அனைவரும் சந்தோஷிக்க எனக்கு மட்டும் வெறுப்பாகிப் போனது.
5வது படிக்கும் போது என் தோழி மேகலாவிற்கு திடீரென திருமண்ம் ஆக, நண்பர்கள் கேலி செய்ய, பூச்சி மருந்தை குடித்து இறந்து போனாள். அவளை மாலையுடன் பார்த்ததும் மனதில் படிந்திருக்கிறது.
சேரிகளில் வசிக்கும் சிலரை தண்ணீர்கூட தராமல் கேவலமாக பேசுவதும், வயதில் எத்தனை பெரியவராக இருந்தாலும் பெயர் சொல்லி அழைப்பதும் எனக்கு பிடித்ததில்லை. இவர்களுக்கு என் அம்மா வீட்டில் எழுத படிக்க சொல்லி தருவார். ஒரு பெண் சிங்கப்பூரில் வேலை பார்த்த தன் கணவரிடமிருந்து வரும் கடிதங்களை அடுத்தவரை விட்டு படிக்க சொல்வதும், அவர்கள் அந்த பெண்ணின் கணவர் அனுப்பும் பணத்தில் ஏமாற்றுவதை பார்த்த என் அம்மா வீட்டிலேயே இலவசமாக படிப்பு சொல்லி தருவார். அந்த பெண்களின் சந்தோஷம் சொல்லி மாளாது. இது எனக்கு பிடித்திருந்தது. ( :) பாரி)
நானும் சிறு சேமிப்பு, குடும்ப கட்டு பாடு என்றெல்லாம் வீடு வீடாய் சென்று பேச ஆரம்பித்த போது எனக்கு 7 வயது. சிறுமியாக இருந்து கொண்டு குடும்ப கட்டு பாடு பற்றி பேசும் போது கேலி செய்தவர் உண்டு. ஆனாலும் என்னை அலட்சியப்படுத்தியவர் இல்லை.
ஏழைகளை அவமதிப்பவர் இந்தியாவில் அதிகம். இன்னமும் ஒரு பொறியியல் வல்லுனருக்கு கிடைக்கும் மரியாதை ஒரு செருப்பு தைப்பவருக்கு இல்லை. இத்தனைக்கும் யாரும் யாரையும் சார்ந்திருக்காமல் இல்லாவிட்டாலும் அவமரியாதை அதிகம். நானும் என் அண்ணனும் என் தந்தையின் நண்பரின் வீட்டிற்கு அவரே அழைத்ததால் போன போது அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு சிறுவன் "நாங்களே இன்னும் சாப்பிடைல்லை அதுக்குல்ளேயே வந்தாச்சா, போ! போ!!" என்று விரட்டியதும், பாத்திரங்களை அடகு வைக்க போகுமிடத்தில் கேவலமாக பார்ப்பதும் பேசுவதும் என்று தேவையில்லாமல் காரணமில்லாமல் மனதை காயப்படுத்துவது அதிகம். இந்தியாவில் இந்த மனப்பான்மை அதிகம். தன்னிடம் வேலை பார்க்காதவராக இருந்தாலும், தனக்கே சம்பந்தம் இல்லதவராக இருப்பினும் ஏழை என்றால் ஏதோ அடிமைகள் போல் நடத்துவதும், அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை புரிந்து கொள்ள மறுப்பதும் ஏனென்று தெரியவில்லை.
5. இந்தியாவில் அறிவியல் துறையும், அதில் பெண்களின் பங்கும், அவர்களது நிலை குறித்தும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?
பெண் விஞ்ஞானிகளுக்கு அதிக நேரம் ஆய்வகத்தில் வேலைசெய்துகொண்டு வீட்டையும் கவனிக்க முடியாது என்ற பரவலான கருத்து உள்ளது. மேலும் ICMR, DST போன்ற இடங்களில் பொருளாதார உதவி தொகை (grant) கிடப்பது கடினம். இதில் நிறைய அரசியல் கலந்திருக்கிறது. என்னுடைய முதல் grant கிடைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். சக ஆராய்சியாளர்களும் இரவில் வேலை செய்யும் போது, எனக்கு உன் மீது காம உணர்ச்சி வந்துவிட்டது என்று சொல்லி தொல்லை கொடுப்பதும், ஆரய்சிக்கு கிடைக்க வேண்டிய அனுமதி கிடைப்பதற்காக தடங்கல்கள் செய்வதும் உண்டு. இதையும் மீறி நிறைய பெண் விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சில குறைவான பெண் விஞ்ஞானிகள் ஆண்களின் சபலத்தை பயன் படுத்தி அவர்களை வேலை செய்ய சொல்வதும் உண்டு!!
அறிவியல் துறை (மருத்துவ) இந்தியாவில் முன்னேற வேண்டுமானால் அதற்கு உரிய அங்கீகாரம் வேண்டும். ஒரு வேதி பொருள், அல்லது ரேடியோ கதிவீசு kit வரும் போது அதன் தன்மையை புரிந்து கொண்டு சுங்க அதிகரிகள் அதனை உடனே தந்து விட வேண்டும். அதற்கும் லஞ்சம் எதிர்பார்த்து தேக்கி வைத்தால் அதன் வீரியம் கெட்டு விடும். இதற்கும் மேலாக, மனித திசுக்கள், இரத்தம் ஆகியவற்றில் ஆராய்சி செய்ய தேவையான உரிமைகள் பெறவும், மனிதர்களின் confidentiality பாதுகாக்கவும் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
சமீபத்தில் பாஸ்டனில் இந்தியாவிலிருந்து வந்திருந்த சில விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் போது இன்னமும் நிலை மாறவில்லை என்பது தெரிந்தது.
அரசு அங்கீகாரத்தோடு national biotechnology board அமெரிக்காவிற்கு பயிற்சி பெற அனுப்ப தேர்ந்தெடுக்கும் விஞ்ஞானிகளில் அரசியல் கலப்பு உண்டு. புது தில்லியில் ஆராய்ச்சி கழகத்திலிருந்து வருபவருக்கு உடனே அனுமதி கிடப்பதும், தென்னக கல்லூரிகளிலிருந்து வருபவருக்கு அனுமதி கிடைக்காததும் சகஜம். cloningஇல் தேர்சி பெற 6 மாத சம்பளத்தோடு, பயண செலவுகளும் தந்து NIH வந்த ஒருவர் ஊர் திரும்பியபோது இதெல்லாம் எனக்கு புரியாது. நான் நன்றாக ஊர் சுற்றி பார்த்தேன் என்று சொன்னதை கேட்டிருக்கிறேன். AIIMSல் இருந்த பெருவாரியான ஆராய்சி மாணவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல உதவி தொகையும் அனுமதியும் விரைவாக பெறுவதும், அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் உள்ள மாணவிக்கு அனுமதி கிடைக்காமல் இருப்பதும் நானே கேட்ட சில புகார்கள். இந்த நிலை மாறி, தகுதி அடிப்படையில் எல்லருக்கும் பயிற்சி தர வேண்டும் , அறிவியலில் அரசியல் கலப்பு கூடாது.
இதன் இரண்டாம் பாகம் நாளை......
இவர் தற்போது பொது நல ஆரோக்கிய திட்ட அமைப்பாளராக பணி புரிந்து வருகின்றார். இது இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணிக்கு நிகரானது. இவர் தனது உழைப்பையும், பாஸிட்டிவ்வான (நேர்மறையான) உளப்பாங்கையும் ஆற்றலின் தோற்றமாகக் கொண்டு, ஒரு விதையாக தோன்றி விருட்சமாக வளர்ந்தவர் . இவரது பதிவை பார்க்கும் எவரும் "அட" என்று எண்ணும் வகையில் ஒரு வரியை எழுதி வைத்துள்ளார். அது: ``I enjoy planning activities and design strategic plans for poor people``.
இனி இவருடன் ...
1. நீங்க பிறந்து வளர்ந்த சூழ்நிலை, உங்கள் பால்ய கால படிப்பார்வம் மற்றும் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் பற்றி கூறுங்களேன்.
ஒரு கீழ் நிலை நடுத்தர குடும்பத்தில், 5 சகோதர, சகோதரிகளுடன் பிறந்தேன். கோப்பையில் குடித்தால் சீக்கிரமே ஆகிவிடும் என்று கஞ்சியை தட்டில் ஊற்றி மெதுவாய் பருகி பசிதீர்த்துக்கொள்வோம். கிடைப்பது ஒரு மிட்டாய் என்றாலும் 8ஆல் வகுந்து உண்போம். பொருளுக்கு பஞ்சம் என்றாலும் அன்புக்கு பஞ்சமில்லை. எல்லோருமே நன்றாக படித்ததால், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செல்லப் பிள்ளை. வீட்டில் சர்க்காவும் ராட்டினமும் கொண்டு அம்மா நூல் நூற்று சட்டைகள் செய்வதுண்டு.
அப்போதெல்லாம் திருக்குறள், திருப்பாவை திருவெண்பாவை ஒப்பித்தல் போட்டிகள் வரும். நாங்கள் அனைவரும் பங்கு கொண்டு அந்த அந்த வகுப்புக்கு வரிசையில் பரிசு பெறுவது உண்டு. போக போக மற்றவர்கள் ஆர்வம் குறைந்துவிட, நான் மட்டும் தொடர்ந்து பங்கு பெறுவேன். திடீரென ஒரு தலைப்பு கொடுத்தாலும் பேசுவதில் எனக்கு தகுதி உண்டு என்பதால் என் பள்ளியின் சார்பாக பல ஊர்களுக்கும் சென்று பேச்சு போட்டிகள், பட்டி மன்றங்கள் இவற்றில் கலந்து கொள்வதும் உண்டு. கந்தர் கலிவெண்பா போன்றவை படித்து எழுத்து தேர்விலும் முதல் பரிசு பெற்றால் தொடர்ந்து ஒரு ஊதிய தொகை வரும். இது என் பெற்றோருக்கு உதவும் என்பதும் நான் தமிழ் படிக்க ஒரு காரணம். ஆனாலும் சில காலத்திற்கு பிறகு கட்டாயமாக ஆங்கில புத்தகங்களே படிக்க வீட்டில் ஊக்குவித்தனர்.
விளையாட நேரம் ஒதுக்குவதைக் காட்டிலும் படிப்பதும், யார் எழுதிய புத்தகமானாலும் தேடி படிப்பதும் பொழுது போக்காக இருந்தது. மற்ற குழந்தைகளுக்கும் விட்டு பாடங்களில் உதவுவதும், tutuion நடத்துவதும் மேலும் படிக்க ஆர்வம் வர காரணம்.
2. அறிவியல் துறையில் உங்களுக்கு ஈடுபாடு வருவதற்கு எத்தகைய சூழ்நிலை காரணமாக இருந்தது?
வறுமை. இலக்கியம் படிக்க ஆர்வம் இருந்தும் படித்தால் வேலை கிடைப்பது சிரமம், அறிவியல் படித்தால் உடனே எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைக்கும் என்று என் சகோதரர்கள் சொன்னதும், என் அக்கா தான் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசுவதும், என் அண்ணன் ஐ.ஐ.டியில் தன் அனுபவங்கள் பற்றி சொல்வதும் இதற்கும் மேலாக அவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது அவர்களுக்கு கிடைக்கும் நல்ல கவனிப்பும் காரணம். ஒருமுறை என் அம்மா கடுமையாக நோய்வாய்பட, காசில்லாமல் கவனிக்க யாருமின்றி, உறவினரும் கைவிட்ட நிலையில், ஒரு மருத்துவர் எங்கள் வேண்டுகோள் கேட்டு வீட்டிற்கு இரவில் வந்து கவனித்தபோது நான் சொல்லிக் கொள்வேன் " இது போல கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவாவது மருத்துவராக வேண்டும்" என்று.
3. உங்கள் மேற்படிப்பு குறித்து சில விவரங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?
என் அண்னனும் அக்காவும் மேற் படிப்பு படித்து கொண்டிருந்ததால் மற்ற நால்வரும் இளநிலை படித்து வேலை தேடிக்கொள்ளவேண்டும் என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார். ஆசிரியை வேலை பார்த்தாலே போதும் என்பதும் எப்படியாவது என் அக்காவிற்கு திருமணம் முடிக்க பொருள்சேர்க்க வேண்டும் என்றும் திடமாக இருந்தார். ஆனால் ஒவ்வொருவரும் 'நுழைவுதேர்வு தானே! இடம் கிடைக்கும் என்று என்ன நம்பிக்கை?" "முயற்சி செய்து பார்க்கிறேனே!" என்று சொல்லி அனுமதி வாங்குவோம். இதன் படி ஜிப்மரில் மருத்துவ துறையில் உயிர்வேதியில் படிக்க சேர்ந்தேன். நுழைவுத்தேர்வில் 10000 (கிட்டதட்ட) பேரில் தேர்வு செயப்பட்ட 500 பேரில் ஒருத்தியாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். வந்திருந்த 500 பேர்களில் ஐவருக்குத்தான் இடம் என்பதால் எனக்கு கிடைக்காது என்று தந்தை நம்பியிருக்க, வந்த அனைவரும் கான்வென்ட் ஆங்கிலத்தில் பேச, நான் தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உரையாட, நம்பிக்கை அற்று ஊருக்கு திரும்பிவிட்டோம். ஆச்சரியமாக முதலிடம் பெற்று தேர்ந்தேன். உதவிதொகையும் பிர்லாவிடமிருந்தும் உதவிதொகையும் கிடக்க அது ஆசிரியை வேலையைவிட அதிக ஊதியம் என்பதால் படிக்க அனுமதி கிடைத்தது. அப்போது முதன் முதலில் இறந்த ஒரு மனிதனின் உடலை அறுத்து படிக்கும் போது சக மாணவர்களும், ஆசிரியர்களும் கேவலமாக பெண் உறுப்புகளை பேசுவதும், அறுவை சிகிச்சை போது தவறாக பேசுவதையும் கண்கூடாக பார்த்து மனித மனத்தின் வக்கிரங்களை அறிந்து கொண்டேன்.
அதன் பின் AIIMS ல் காசநோய்க்கான எதிர்ப்பு சக்தியில் ஆராய்சி செய்ய அனுமதி கிடத்தது. என் சகோதரன் புது தில்லியில் வேலை பார்த்தால், அவனுக்கும் உதவியாக இருக்கும் stipendஉம் சம்பளத்தைவிட அதிகம் (அர்விந்த் கண் மருத்துவ மனியில் விரிவுரையாளர் வேலை) என்றும் தில்லி சென்றேன்.
வேலைக்கான ஊதியத்தைவிட, உதவிதொகை அதிகம் என்றே நாங்கள் அனைவரும் மேற்படிப்பு படிக்க அனுமதி பெற்றோம்.
என் மூத்த சகோதரிக்கே திருமணமாகாத நிலையில் நானும் வீட்டில் இருந்தால் என்ன செய்வது என்பதும், இவை அனைத்திற்கும் மேலாக எங்களுக்கு உறுதுணையாக என் அம்மா இருந்ததும் (அப்பாவிற்கு தெரியாமல் விண்ணப்ப படிவங்களை அனுப்ப,... அப்பா படிப்பதற்கு எதிரி இல்லை என்றாலும் நண்பர்களின் விமரிசனத்தையும் தன்னுடைய உறவினர்கள் எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவைத்ததையும் அவரால் தாங்க முடியவில்லை) மனம் தளரும் போதெல்லாம் மருந்தாக இருந்தது.
4. நீங்கள் எப்போது சமூகத்தை ஒரு விமர்சனக் கண்ணோடு பார்க்க துவங்கினீர்கள்? அதை குறித்த ஏதேனும் சம்பவங்கள் சொல்ல இயலுமா?
எனக்கு 4 வயதாக ஒருக்கும் போது எதிர்வீட்டு aunty கையில் குழந்தையுடன் மழையில் வெளியேற்றப் பட்ட போது எதனால் என்று அம்மாவிடம் கேட்க, பெண்குழந்தை பிறந்ததால் என்று சொன்னார். புரியாவிட்டாலும் நானும் பெண் தானே அவர்வீட்டு பாப்பாவிற்கு என்ன குறை என கேட்டது நினைவிருக்கிறது.எங்கள் வீட்டில் இரவை கழித்த அந்த பெண் மறு நாள் பாலிடால் குடித்து இறந்தது என்னை பாதித்தது.
என் 2வது வகுப்பு ஆசிரியை கோமளா அனுராதா திருமணம் தடை பட்டு கொண்டே போக, வருத்தப் பட்டு இறந்ததும் அர்த்தம் புரியாத வயதில் ஆழ்மனதில் காயமாகிப் போனது. பள்ளி விடுமுறை என அனைவரும் சந்தோஷிக்க எனக்கு மட்டும் வெறுப்பாகிப் போனது.
5வது படிக்கும் போது என் தோழி மேகலாவிற்கு திடீரென திருமண்ம் ஆக, நண்பர்கள் கேலி செய்ய, பூச்சி மருந்தை குடித்து இறந்து போனாள். அவளை மாலையுடன் பார்த்ததும் மனதில் படிந்திருக்கிறது.
சேரிகளில் வசிக்கும் சிலரை தண்ணீர்கூட தராமல் கேவலமாக பேசுவதும், வயதில் எத்தனை பெரியவராக இருந்தாலும் பெயர் சொல்லி அழைப்பதும் எனக்கு பிடித்ததில்லை. இவர்களுக்கு என் அம்மா வீட்டில் எழுத படிக்க சொல்லி தருவார். ஒரு பெண் சிங்கப்பூரில் வேலை பார்த்த தன் கணவரிடமிருந்து வரும் கடிதங்களை அடுத்தவரை விட்டு படிக்க சொல்வதும், அவர்கள் அந்த பெண்ணின் கணவர் அனுப்பும் பணத்தில் ஏமாற்றுவதை பார்த்த என் அம்மா வீட்டிலேயே இலவசமாக படிப்பு சொல்லி தருவார். அந்த பெண்களின் சந்தோஷம் சொல்லி மாளாது. இது எனக்கு பிடித்திருந்தது. ( :) பாரி)
நானும் சிறு சேமிப்பு, குடும்ப கட்டு பாடு என்றெல்லாம் வீடு வீடாய் சென்று பேச ஆரம்பித்த போது எனக்கு 7 வயது. சிறுமியாக இருந்து கொண்டு குடும்ப கட்டு பாடு பற்றி பேசும் போது கேலி செய்தவர் உண்டு. ஆனாலும் என்னை அலட்சியப்படுத்தியவர் இல்லை.
ஏழைகளை அவமதிப்பவர் இந்தியாவில் அதிகம். இன்னமும் ஒரு பொறியியல் வல்லுனருக்கு கிடைக்கும் மரியாதை ஒரு செருப்பு தைப்பவருக்கு இல்லை. இத்தனைக்கும் யாரும் யாரையும் சார்ந்திருக்காமல் இல்லாவிட்டாலும் அவமரியாதை அதிகம். நானும் என் அண்ணனும் என் தந்தையின் நண்பரின் வீட்டிற்கு அவரே அழைத்ததால் போன போது அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு சிறுவன் "நாங்களே இன்னும் சாப்பிடைல்லை அதுக்குல்ளேயே வந்தாச்சா, போ! போ!!" என்று விரட்டியதும், பாத்திரங்களை அடகு வைக்க போகுமிடத்தில் கேவலமாக பார்ப்பதும் பேசுவதும் என்று தேவையில்லாமல் காரணமில்லாமல் மனதை காயப்படுத்துவது அதிகம். இந்தியாவில் இந்த மனப்பான்மை அதிகம். தன்னிடம் வேலை பார்க்காதவராக இருந்தாலும், தனக்கே சம்பந்தம் இல்லதவராக இருப்பினும் ஏழை என்றால் ஏதோ அடிமைகள் போல் நடத்துவதும், அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை புரிந்து கொள்ள மறுப்பதும் ஏனென்று தெரியவில்லை.
5. இந்தியாவில் அறிவியல் துறையும், அதில் பெண்களின் பங்கும், அவர்களது நிலை குறித்தும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?
பெண் விஞ்ஞானிகளுக்கு அதிக நேரம் ஆய்வகத்தில் வேலைசெய்துகொண்டு வீட்டையும் கவனிக்க முடியாது என்ற பரவலான கருத்து உள்ளது. மேலும் ICMR, DST போன்ற இடங்களில் பொருளாதார உதவி தொகை (grant) கிடப்பது கடினம். இதில் நிறைய அரசியல் கலந்திருக்கிறது. என்னுடைய முதல் grant கிடைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். சக ஆராய்சியாளர்களும் இரவில் வேலை செய்யும் போது, எனக்கு உன் மீது காம உணர்ச்சி வந்துவிட்டது என்று சொல்லி தொல்லை கொடுப்பதும், ஆரய்சிக்கு கிடைக்க வேண்டிய அனுமதி கிடைப்பதற்காக தடங்கல்கள் செய்வதும் உண்டு. இதையும் மீறி நிறைய பெண் விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சில குறைவான பெண் விஞ்ஞானிகள் ஆண்களின் சபலத்தை பயன் படுத்தி அவர்களை வேலை செய்ய சொல்வதும் உண்டு!!
அறிவியல் துறை (மருத்துவ) இந்தியாவில் முன்னேற வேண்டுமானால் அதற்கு உரிய அங்கீகாரம் வேண்டும். ஒரு வேதி பொருள், அல்லது ரேடியோ கதிவீசு kit வரும் போது அதன் தன்மையை புரிந்து கொண்டு சுங்க அதிகரிகள் அதனை உடனே தந்து விட வேண்டும். அதற்கும் லஞ்சம் எதிர்பார்த்து தேக்கி வைத்தால் அதன் வீரியம் கெட்டு விடும். இதற்கும் மேலாக, மனித திசுக்கள், இரத்தம் ஆகியவற்றில் ஆராய்சி செய்ய தேவையான உரிமைகள் பெறவும், மனிதர்களின் confidentiality பாதுகாக்கவும் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
சமீபத்தில் பாஸ்டனில் இந்தியாவிலிருந்து வந்திருந்த சில விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் போது இன்னமும் நிலை மாறவில்லை என்பது தெரிந்தது.
அரசு அங்கீகாரத்தோடு national biotechnology board அமெரிக்காவிற்கு பயிற்சி பெற அனுப்ப தேர்ந்தெடுக்கும் விஞ்ஞானிகளில் அரசியல் கலப்பு உண்டு. புது தில்லியில் ஆராய்ச்சி கழகத்திலிருந்து வருபவருக்கு உடனே அனுமதி கிடப்பதும், தென்னக கல்லூரிகளிலிருந்து வருபவருக்கு அனுமதி கிடைக்காததும் சகஜம். cloningஇல் தேர்சி பெற 6 மாத சம்பளத்தோடு, பயண செலவுகளும் தந்து NIH வந்த ஒருவர் ஊர் திரும்பியபோது இதெல்லாம் எனக்கு புரியாது. நான் நன்றாக ஊர் சுற்றி பார்த்தேன் என்று சொன்னதை கேட்டிருக்கிறேன். AIIMSல் இருந்த பெருவாரியான ஆராய்சி மாணவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல உதவி தொகையும் அனுமதியும் விரைவாக பெறுவதும், அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் உள்ள மாணவிக்கு அனுமதி கிடைக்காமல் இருப்பதும் நானே கேட்ட சில புகார்கள். இந்த நிலை மாறி, தகுதி அடிப்படையில் எல்லருக்கும் பயிற்சி தர வேண்டும் , அறிவியலில் அரசியல் கலப்பு கூடாது.
இதன் இரண்டாம் பாகம் நாளை......
காலங்கள் மாறும்...கோலங்கள் மாறும்...
அடுத்த வரியை நீங்க ஞாபகப்படுத்திட்டு, ஏதோ கனமா எழுதப் போறான்னு நினைச்சா, சாரி, மக்கா, சாரி.
பெங்களூர்ல இருந்தப்போ, இந்த மாதிரியான மாற்றங்கள் மிக அழகா, மனசை தொடர மாதிரி இருக்கும். இந்த ஊர்லயும் அப்படி இருக்கும்னு சொல்றாங்க.
இப்போ என் கவனத்தில் இருக்கின்ற சில விசயங்கள சொல்றேன்.
வீதிகளின் இருபுறமும் இருக்கும் குட்டி பனி சுவர்கள் கரைய தொடங்கி விட்டன. அம்மலைகளின் அடியில் இருக்கும் பழுப்பு நிற புற்கள் "அப்பாடா!" என்று ஒரு சுமையை இறக்கி வைத்து வெளியே தலை காட்டுகின்றன.
காற்று தன் கனத்தை குறைத்து கொண்டுள்ளது இதமாக.
பறவைகள் சில வந்து உற்சாகம் கொடுக்கின்றன. காலை பொழுதில், "ப்ளிங்" என்று சத்தமிட்டபடி
சீ கல்-கள் பறக்கும் அவைகள் ஒரு அற்புதம். தங்களது உடலின் மேல் ஒரு கருமையான சாம்பல் நிறத்தையும், அவற்றின் அடியில் தூய்மையான வெள்ளை நிறத்துடனும் பறப்பதை பார்ப்பது சுகம். Feynman-னின் தந்தை பறவைகளின் சிறகை பற்றி அவருக்கு சொல்லும் போது அதில் இருக்கும் ஒரு மெல்லிய மெழுகு போன்ற ஒரு பூச்சை பற்றி குறிப்பிடுவார். இவைகளின் தூய்மை அக்கூற்றை நினைவு படுத்துகின்றன.
எங்கு போனாலும் இருக்கும் காக்கைகள். அவைகள் மனிதர்களை சுற்றி வாழும் என்பது இங்கு சிறிது மகிழ்ச்சியை தருகின்றது. புறாக்களும் அவ்வாறே.
இவற்றை தவிர எனது வீட்டில் சாளரத்திற்கு அருகில் வசிக்கும் சில குருவி போன்ற பறவைகள் அவ்வப்போது ஹலோ சொல்லும்!!
இன்று காலையில் சில பறவைகள் கீச் கீச் சென்று சப்தம் எழுப்பி, தங்கள் வருகையை தெரிவித்தன. அவைகளை காண முடியவில்லை.
மழை பெய்கின்றது. வானொலியில் ஏப்ரல் மழை என்று கூறுகின்றனர். இந்த மழைதான் பனி சுவர்களை கரைக்கின்றதோ என உணர்வு வருகின்றது.
இப்போதெல்லாம் டெம்ப்ரேச்சர் பாஸிட்டிவில் உள்ளது. 2 லிருந்து 7 வரை.
வசந்தம் வருகின்றது.
பெங்களூர்ல இருந்தப்போ, இந்த மாதிரியான மாற்றங்கள் மிக அழகா, மனசை தொடர மாதிரி இருக்கும். இந்த ஊர்லயும் அப்படி இருக்கும்னு சொல்றாங்க.
இப்போ என் கவனத்தில் இருக்கின்ற சில விசயங்கள சொல்றேன்.
வீதிகளின் இருபுறமும் இருக்கும் குட்டி பனி சுவர்கள் கரைய தொடங்கி விட்டன. அம்மலைகளின் அடியில் இருக்கும் பழுப்பு நிற புற்கள் "அப்பாடா!" என்று ஒரு சுமையை இறக்கி வைத்து வெளியே தலை காட்டுகின்றன.
காற்று தன் கனத்தை குறைத்து கொண்டுள்ளது இதமாக.
பறவைகள் சில வந்து உற்சாகம் கொடுக்கின்றன. காலை பொழுதில், "ப்ளிங்" என்று சத்தமிட்டபடி
சீ கல்-கள் பறக்கும் அவைகள் ஒரு அற்புதம். தங்களது உடலின் மேல் ஒரு கருமையான சாம்பல் நிறத்தையும், அவற்றின் அடியில் தூய்மையான வெள்ளை நிறத்துடனும் பறப்பதை பார்ப்பது சுகம். Feynman-னின் தந்தை பறவைகளின் சிறகை பற்றி அவருக்கு சொல்லும் போது அதில் இருக்கும் ஒரு மெல்லிய மெழுகு போன்ற ஒரு பூச்சை பற்றி குறிப்பிடுவார். இவைகளின் தூய்மை அக்கூற்றை நினைவு படுத்துகின்றன.
எங்கு போனாலும் இருக்கும் காக்கைகள். அவைகள் மனிதர்களை சுற்றி வாழும் என்பது இங்கு சிறிது மகிழ்ச்சியை தருகின்றது. புறாக்களும் அவ்வாறே.
இவற்றை தவிர எனது வீட்டில் சாளரத்திற்கு அருகில் வசிக்கும் சில குருவி போன்ற பறவைகள் அவ்வப்போது ஹலோ சொல்லும்!!
இன்று காலையில் சில பறவைகள் கீச் கீச் சென்று சப்தம் எழுப்பி, தங்கள் வருகையை தெரிவித்தன. அவைகளை காண முடியவில்லை.
மழை பெய்கின்றது. வானொலியில் ஏப்ரல் மழை என்று கூறுகின்றனர். இந்த மழைதான் பனி சுவர்களை கரைக்கின்றதோ என உணர்வு வருகின்றது.
இப்போதெல்லாம் டெம்ப்ரேச்சர் பாஸிட்டிவில் உள்ளது. 2 லிருந்து 7 வரை.
வசந்தம் வருகின்றது.
நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 6 தபால்காரர்(கள்)
எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரை மக்களின் வாழ்வோடு பின்னி பிணைஞ்சவருனு நான் பார்க்கிற ஒரு நபர் இந்த தபால்காரர். நாங்க வாண்டுகளா இருக்கும் போது எங்க காம்பௌண்ட்க்கு ரெகுலரா வருவதால் கவனத்தை ஈர்த்த நபர் இவரு. பதினோரு வீட்ல ஏதாவது ஒரு வீட்டிற்காவது தபால் இருக்கும். ஐயங்கார் மாமி, எங்க அம்மா-ட்ட,``ஏண்டி ஜெயம், தபால்காரன் வந்துட்டானா?``ன்னு கேட்பார். அப்படி கேட்டால், NGM காலேஜ்ல மேலாளரா வேலை செய்யும் அவரோட கணவருக்கு மதிய சாப்பாடு எடுத்து செல்ல, அந்தோணி என்பவர் சீக்கிரம் வந்துருவார்னு அர்த்தம். இப்படி தபால்காரர் வருவது அவருக்கு நேரத்தை உணர்த்தும் விசயமா இருந்துச்சு.
இந்த தபால்காரர்கள் சைக்கிள் அல்லது கால் நடையா நடந்து, ஒரு கற்றை காகிதங்களை கையில் வைத்துக் கொண்டு, மீதியை அவர்களின் உடலுறுப்பாகவே ஆன தோள் பையில் வைத்துக் கொண்டும் வருவது, பலருக்கு ஒரு வகை எதிர்ப்பார்ப்பையும், நிம்மதியையும் தருவதாக இருக்கும். எங்க ஏரியா தபால்காரர் பொதுவா, பாலா கோபால(BG) புரம் தெரு ஆரம்பித்து, பல்லடம் ரோட்டை ஒட்டிய சில இடங்களை சுற்றி விட்டு பின்பு எங்க தெருவுக்கு வருவார். எனது பெரியப்பாவிற்கு எப்போதும் ஒருவித பரபரப்பு உண்டு தகவலை முன் கூட்டி அறிவதில். ஆகையால் விடுமுறை நாட்களில் (postal holidays அற்ற மற்ற நாட்களில், குறிப்பா சனிக்கிழமைகளில்) என்னையும் சில வாண்டுகளையும் முன்னரே BGபுரத்திற்கு அனுப்பி தபால்காரரிடம் தபாலை பெற்று வரச் சொல்லுவார். அப்போது நாங்க வண்டிய எடுத்துகிட்டு (பஸ் தான்...) சும்மா டிர்ர்ர்ர்ன்னு கிளம்பினா, கிருஷ்ண மூர்த்தி டாக்டர் கிளினிக் பக்கத்துல அவர பிடிச்சுடுவோம். அவருக்கு மூடு நல்லா இருந்தா உடனே பார்த்து தருவாரு. இல்லாட்டி ``அதுதான் வரிசையா வரேன்ல.. போய் அய்யன்கிட்ட சொல்லு``ன்னு முடுக்கி விடுவார். அவரு தபால கையில குடுத்துட்டார்னா வர்ற சந்தோஷம் இருக்கே யப்பா....
இவர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம். இது ரொம்ப பாஸிட்டிவ்வான ஒரு தன்மைன்னு இன்றைக்கு தோன்றுகின்றது. எப்போ போய் இவங்ககிட்ட தபால் இருக்கான்னு கேட்டாலும், அன்றைய நாள்ல நமக்கு தபால் இல்லைன்னா, ஒரு வித கடமை கலந்த மனோபாவத்துடன், ``நாளைக்குதான்`` ந்னு சொல்லுவாங்க. தபால் இல்லைன்னு மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்ல மாட்டாங்க. இதுவே எங்களுக்கு பழகி போய்,``என்னங்க தபால் இருக்கா, இல்ல நாளைக்கு தானான்னு`` கேட்க ஆரம்பிச்சிட்டோம்.
இவர்கள் அணியும் சீருடை பல சமயங்களில் வண்ணங்கள் மாற்றப்பட்டு, சமீப காலங்களில் காக்கி நிறத்தில் இருக்கின்றது. எனக்கு தெரிந்து இவர்கள் ஒரு வித சாம்பல் கலந்த நீல நிறம், மர நிறம், என பல நிறங்களில் காட்சி தந்துள்ளனர். மேலும் ஒரே பீட்டில் நீண்ட நாள் வந்தவராயின் ஒரு சினேக மனோபாவத்தையும் இவர்கள் நமக்கு தருவார்கள். என்னோட அன்பு ராஜூ அண்ணாவிற்கு இண்டர்வியூ கடிதம் வரும்னா அதை முன்னரே தபால் காரரிடம் சொல்லிவைத்து தபால் நிலையத்திலேயே அதை வாங்கிக்கிற சலுகைகளையும் அவங்க தந்தாங்க.
நாங்க பழனிக்கு மாறினப்பிறகு, இங்கும் தபால்காரர்களது தன்மைகளின் பல ஒற்றுமைகளை பார்த்தேன். நாங்க இருக்கிறது தெற்குரத வீதி. அப்பா பெயர் திரு. சுப்பிரமணியன். வடக்குரதவீதியிலும், இன்னொரு திரு. சுப்பிரமணியன். இன்னொரு ஒற்றுமை (தபால் காரருக்கு கொடுமை) என்னன்னா, இவரும் வாத்தியார். தெருவின் பெயர் சரியாக இல்லாத, குறிப்பா ரதவீதி -ன்னு மட்டும் இருக்கிற கடிதங்கள் சிலது ரெண்டு இடத்திலும் பாடாய் படும். ஆனாலும் இந்த தபால்காரர் இருக்காரே, மிகச் சரியாக இதை கொண்டு சேர்த்துடுவார்.
நான் பெங்களூர் வந்த பிறகு, இன்ஸ்டிட்யூட்டில் என்னை அடையாளம் கண்டு கையில் கடிதத்தை கொடுக்கும் அளவிற்கு அவர்கள் நட்பு பாராட்டினார்கள்.`` ஏனு பாலாஜி சாரே``-ன்னு அவங்க கூப்பிடறதுல இருக்குற வாஞ்சை மற்ற எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை. இவர்கள் நமக்கு முக்கிய செய்தி தொடர்பாளர்களாக இருக்கின்றனர். இந்த ஈ-மெயில் யுகத்திலும் இவர்களது சேவை மிக்க அவசியமானது. இவர்கள் மழை வெய்யில் என்று எந்த காலநிலையிலும் தங்களை கரைத்துக்கொண்டு நமக்கு செய்யும் சேவைக்கு ஈடு ஏதுமில்லை.மேலும் கிராமங்களில் இவர்களது சேவை பலதரப்பட்டது. சிலருக்கு படித்துக்காட்ட வேண்டும். சிலருக்கு பதில் எழுதிதர வேண்டும். போர் முகத்தில் இருக்கும் தனது மகனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து இருக்கும் மூதாட்டிக்கு ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கும். இவ்வாறு பல ..ம் கள்.
இவர்களின் தொழிற்சார்ந்த சகோதரர்கள் தான் தந்தி பட்டுவாடா செய்யும் நபர்கள். இரவு பகல், என்றில்லாமல் எந்த வித செய்தியையும் ஒரு ப்ரோஃபசனல் மனோபாவத்துடன் செய்யும் இந்த நபர்களும் நமது நன்றிக்குரியவர்கள்.
இப்படி பட்ட இந்த நபர்களுக்கு அரசாங்கம் தரும் சம்பளம் மிகவும் சொற்பமே. இந்த அருமையான நண்பர்கள், விழா காலங்களில் ஒரு பேப்பர் எடுத்துக் கொண்டு உங்களால் ஆனதை கொடுங்கள் என நம் முன் நிற்கும் போது, நாம் தான் உண்மையில் வெட்கம் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன்
பாலாஜி-பாரி
இந்த தபால்காரர்கள் சைக்கிள் அல்லது கால் நடையா நடந்து, ஒரு கற்றை காகிதங்களை கையில் வைத்துக் கொண்டு, மீதியை அவர்களின் உடலுறுப்பாகவே ஆன தோள் பையில் வைத்துக் கொண்டும் வருவது, பலருக்கு ஒரு வகை எதிர்ப்பார்ப்பையும், நிம்மதியையும் தருவதாக இருக்கும். எங்க ஏரியா தபால்காரர் பொதுவா, பாலா கோபால(BG) புரம் தெரு ஆரம்பித்து, பல்லடம் ரோட்டை ஒட்டிய சில இடங்களை சுற்றி விட்டு பின்பு எங்க தெருவுக்கு வருவார். எனது பெரியப்பாவிற்கு எப்போதும் ஒருவித பரபரப்பு உண்டு தகவலை முன் கூட்டி அறிவதில். ஆகையால் விடுமுறை நாட்களில் (postal holidays அற்ற மற்ற நாட்களில், குறிப்பா சனிக்கிழமைகளில்) என்னையும் சில வாண்டுகளையும் முன்னரே BGபுரத்திற்கு அனுப்பி தபால்காரரிடம் தபாலை பெற்று வரச் சொல்லுவார். அப்போது நாங்க வண்டிய எடுத்துகிட்டு (பஸ் தான்...) சும்மா டிர்ர்ர்ர்ன்னு கிளம்பினா, கிருஷ்ண மூர்த்தி டாக்டர் கிளினிக் பக்கத்துல அவர பிடிச்சுடுவோம். அவருக்கு மூடு நல்லா இருந்தா உடனே பார்த்து தருவாரு. இல்லாட்டி ``அதுதான் வரிசையா வரேன்ல.. போய் அய்யன்கிட்ட சொல்லு``ன்னு முடுக்கி விடுவார். அவரு தபால கையில குடுத்துட்டார்னா வர்ற சந்தோஷம் இருக்கே யப்பா....
இவர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம். இது ரொம்ப பாஸிட்டிவ்வான ஒரு தன்மைன்னு இன்றைக்கு தோன்றுகின்றது. எப்போ போய் இவங்ககிட்ட தபால் இருக்கான்னு கேட்டாலும், அன்றைய நாள்ல நமக்கு தபால் இல்லைன்னா, ஒரு வித கடமை கலந்த மனோபாவத்துடன், ``நாளைக்குதான்`` ந்னு சொல்லுவாங்க. தபால் இல்லைன்னு மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்ல மாட்டாங்க. இதுவே எங்களுக்கு பழகி போய்,``என்னங்க தபால் இருக்கா, இல்ல நாளைக்கு தானான்னு`` கேட்க ஆரம்பிச்சிட்டோம்.
இவர்கள் அணியும் சீருடை பல சமயங்களில் வண்ணங்கள் மாற்றப்பட்டு, சமீப காலங்களில் காக்கி நிறத்தில் இருக்கின்றது. எனக்கு தெரிந்து இவர்கள் ஒரு வித சாம்பல் கலந்த நீல நிறம், மர நிறம், என பல நிறங்களில் காட்சி தந்துள்ளனர். மேலும் ஒரே பீட்டில் நீண்ட நாள் வந்தவராயின் ஒரு சினேக மனோபாவத்தையும் இவர்கள் நமக்கு தருவார்கள். என்னோட அன்பு ராஜூ அண்ணாவிற்கு இண்டர்வியூ கடிதம் வரும்னா அதை முன்னரே தபால் காரரிடம் சொல்லிவைத்து தபால் நிலையத்திலேயே அதை வாங்கிக்கிற சலுகைகளையும் அவங்க தந்தாங்க.
நாங்க பழனிக்கு மாறினப்பிறகு, இங்கும் தபால்காரர்களது தன்மைகளின் பல ஒற்றுமைகளை பார்த்தேன். நாங்க இருக்கிறது தெற்குரத வீதி. அப்பா பெயர் திரு. சுப்பிரமணியன். வடக்குரதவீதியிலும், இன்னொரு திரு. சுப்பிரமணியன். இன்னொரு ஒற்றுமை (தபால் காரருக்கு கொடுமை) என்னன்னா, இவரும் வாத்தியார். தெருவின் பெயர் சரியாக இல்லாத, குறிப்பா ரதவீதி -ன்னு மட்டும் இருக்கிற கடிதங்கள் சிலது ரெண்டு இடத்திலும் பாடாய் படும். ஆனாலும் இந்த தபால்காரர் இருக்காரே, மிகச் சரியாக இதை கொண்டு சேர்த்துடுவார்.
நான் பெங்களூர் வந்த பிறகு, இன்ஸ்டிட்யூட்டில் என்னை அடையாளம் கண்டு கையில் கடிதத்தை கொடுக்கும் அளவிற்கு அவர்கள் நட்பு பாராட்டினார்கள்.`` ஏனு பாலாஜி சாரே``-ன்னு அவங்க கூப்பிடறதுல இருக்குற வாஞ்சை மற்ற எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை. இவர்கள் நமக்கு முக்கிய செய்தி தொடர்பாளர்களாக இருக்கின்றனர். இந்த ஈ-மெயில் யுகத்திலும் இவர்களது சேவை மிக்க அவசியமானது. இவர்கள் மழை வெய்யில் என்று எந்த காலநிலையிலும் தங்களை கரைத்துக்கொண்டு நமக்கு செய்யும் சேவைக்கு ஈடு ஏதுமில்லை.மேலும் கிராமங்களில் இவர்களது சேவை பலதரப்பட்டது. சிலருக்கு படித்துக்காட்ட வேண்டும். சிலருக்கு பதில் எழுதிதர வேண்டும். போர் முகத்தில் இருக்கும் தனது மகனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து இருக்கும் மூதாட்டிக்கு ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கும். இவ்வாறு பல ..ம் கள்.
இவர்களின் தொழிற்சார்ந்த சகோதரர்கள் தான் தந்தி பட்டுவாடா செய்யும் நபர்கள். இரவு பகல், என்றில்லாமல் எந்த வித செய்தியையும் ஒரு ப்ரோஃபசனல் மனோபாவத்துடன் செய்யும் இந்த நபர்களும் நமது நன்றிக்குரியவர்கள்.
இப்படி பட்ட இந்த நபர்களுக்கு அரசாங்கம் தரும் சம்பளம் மிகவும் சொற்பமே. இந்த அருமையான நண்பர்கள், விழா காலங்களில் ஒரு பேப்பர் எடுத்துக் கொண்டு உங்களால் ஆனதை கொடுங்கள் என நம் முன் நிற்கும் போது, நாம் தான் உண்மையில் வெட்கம் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன்
பாலாஜி-பாரி
Labels:
நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்
அணு என்ற கருத்துருவாக்கம் -2
அனைத்திலும் அவற்றுக்கு உண்டான ஒரு பிரத்யேக அழகுண்டு. ஆனால் அனைவருமே அவற்றை பார்ப்பதில்லை
-கான்பூசியஸ்
நாம் அணு என்பதை பற்றி பேசுவதற்கு முன், ஏன் இப்படியான தலைப்பு என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
உறுமி மேளம் என்றால், மேலுள்ள படத்தை பார்த்து இது தான் உறுமி மேளம் என்று கூறிவிடலாம். மேலதிகமாக இது ஒரு தாள வாத்தியம் என்பதும், இதன் வடிவம் பற்றிய தகவல்களும், இதனை செய்யும் முறையும், உண்டாக்கும் ஒலியும், உறுமி மேளம் என்பதற்கான ஒரு புரிதலை உண்டாக்கும்.
ஆனால் அணுவை பற்றி இவ்வளவு எளிதாக ஏதும் சொல்லிவிட இயலவில்லை. ஏனெனில், முற்காலத்தில் இதை பார்க்க இயலாத நிலை மட்டுமே இருந்தது. இதன் வடிவம் பற்றி கருத்துகள் மட்டுமே சொல்லப்பட்டன. இக்கருத்துக்களுக்கு எந்த வித நிரூபணங்களும் இல்லை. ஆகவே எனக்கு இத்தலைப்பை தவிர வேறேதும் மிக பொருத்தமானதாக தெரியவில்லை. இன்று வரை அணு என்ற கருத்துருவாக்கத்தின் மூலமும் வேர்களும் அறிவியலின் வராலாற்றை ஆராயும் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிராகவே இருக்கின்றன.
ஆனால், அக்கால அறிஞர்கள்/தத்துவவாதிகள் அணு என்ற ஒன்று உள்ளது என்பதை அவதானித்து இருந்தனர். சென்ற பதிவு அவர்கள் அவ்வாறு உணர தலைபட்டதற்கு எத்தகைய சிந்தனை கோர்வை காரணமாக இருந்தது என்பதை முன் வைத்தது. இந்த பதிவு டிமாக்ரிடஸிற்கு முன்பே இந்தியதுணைக் கண்டத்தில் தோன்றிய அலுக்யா என்ற ஒரு சிந்தனையாளரை அறிமுகம் செய்கின்றது. இவர் கனடா என்றும் அழைக்கப்பட்டார். கனடா என்றால் அணு-உண்ணி என்று பொருள்.
இவர் கிமு 7-ஆம் நூற்றாண்டில் ஒரு சிந்தனா சாலையும், சமயப் பள்ளியையும் நிறுவினார். இவைகளின் மையக்கரு அணுவை சார்ந்தே இருந்தது. இவரது கருத்துப்படி அறிவு என்பது ஆறுவகையான நேர்மறை பிரிவுகளின் மூலம் பெறக்கூடியது. அவையாவன பொருள், தரம், செயற்பாடு, பொதுத்தன்மை, குறிப்பானதன்மை, தெரிந்தறிதல். இதில் பொருள் என்பது ஒன்பது வகையான வெளிப்பாட்டுத் தன்மை உடையது. இவற்றில் ஐந்து பருபொருள் அடிப்படைகளிலும் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஈதர்**), மேலும் நான்கு அரூபமானவையாகவும் (நேரம், வெளி, சுயம், மனம்) உள்ளன. இவற்றில் பருபொருள் அடிப்படையில் அமைந்தவை அனைத்தும் அணுக்களால் ஆனவை. இயற்கையில் நமக்கு கிடைக்கும் மீச்சிறு துகள் ஆறு அணுக்களால் ஆனவை என்றும், இவைகள் சூரிய ஒளிக்கற்றையில் சோடி,சோடியாக (கடவுள் அல்லது மற்ற காரணங்களால்) இருப்பதாகவும், அவர் கூறினார்.
இக்கருத்துக்கள் இன்றைய தேதியில் ஒரு விளையாட்டு போல தோன்றினாலும், தன் ஆய்வுக்கான கருவை தெளிவாக வரையறுத்து பின்பு அவற்றை பிரித்து பட்டியலிட்ட தன்மைக்காகவேனும் அவரது முயற்சியை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேலும் கனடா, அணுவை பற்றி, நாம் உணர்தல் மூலம் தெரிந்து கொள்வதைவிட அவதானிப்பதன் மூலமே தெரிந்து கொள்கின்றோம் என்பதிலும் தெளிவாக இருந்தார். அவர் இந்த அவதானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டும் கொடுத்திருந்தார். பருபொருட்களை கணக்கிலடங்கா (சுழிக்கு ஒப்ப) பங்காக பிரித்து கொண்டே போனால், ஒரு மலைக்கும், ஒரு கடுகிற்கும் எந்தவொரு வேறுபாடும் இருக்காது. ஏனெனில் சுழியும் சுழியும் ஒன்றே எனக் கூறினார்.
இதை பற்றி பொனமரோவ் கூறும் போது: டிமாக்ரிடஸ் கனடாவின் தத்துவங்கள் பற்றி அறிந்திருந்தாரா?. இது சாத்தியமே ஏனெனில் டெமாக்ரிடஸ் ஒரு பயணவிரும்பி. அவர் பயணித்த இடங்கள் பல. ஆகையால் இந்தியாவிற்கும் பயணத்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் கனடாவின் கருத்தே தொன்மையானதாக இருக்கக் கூடும்.
இத்தகைய மாபெரும் சிந்தனையாளர்கள் வாழ்ந்த சூழல் கிழக்கும் மேற்கும்!! ஆனாலும், அவர்களது கருத்து, அவர்களது பார்வை சந்திக்கும் புள்ளிகள் மிகவும் சுவாரசியமானது இல்லையா?
சரி. மேலும் இத்தகைய கருத்துக்கள் எவ்வெவ்வாறு உருமாற்றம் பெற்றன என்பதை வரும் பதிவுகளில் அறிய முயற்சிப்போம்.
-தொடரும்
** ஈதர் பற்றி அவர் எந்த வகையில் சொல்லி இருப்பார் என்பது எனக்கு புதிராகவே உள்ளது. இதை பற்றி மேலும் தகவல் கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.
-கான்பூசியஸ்
நாம் அணு என்பதை பற்றி பேசுவதற்கு முன், ஏன் இப்படியான தலைப்பு என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
உறுமி மேளம் என்றால், மேலுள்ள படத்தை பார்த்து இது தான் உறுமி மேளம் என்று கூறிவிடலாம். மேலதிகமாக இது ஒரு தாள வாத்தியம் என்பதும், இதன் வடிவம் பற்றிய தகவல்களும், இதனை செய்யும் முறையும், உண்டாக்கும் ஒலியும், உறுமி மேளம் என்பதற்கான ஒரு புரிதலை உண்டாக்கும்.
ஆனால் அணுவை பற்றி இவ்வளவு எளிதாக ஏதும் சொல்லிவிட இயலவில்லை. ஏனெனில், முற்காலத்தில் இதை பார்க்க இயலாத நிலை மட்டுமே இருந்தது. இதன் வடிவம் பற்றி கருத்துகள் மட்டுமே சொல்லப்பட்டன. இக்கருத்துக்களுக்கு எந்த வித நிரூபணங்களும் இல்லை. ஆகவே எனக்கு இத்தலைப்பை தவிர வேறேதும் மிக பொருத்தமானதாக தெரியவில்லை. இன்று வரை அணு என்ற கருத்துருவாக்கத்தின் மூலமும் வேர்களும் அறிவியலின் வராலாற்றை ஆராயும் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிராகவே இருக்கின்றன.
ஆனால், அக்கால அறிஞர்கள்/தத்துவவாதிகள் அணு என்ற ஒன்று உள்ளது என்பதை அவதானித்து இருந்தனர். சென்ற பதிவு அவர்கள் அவ்வாறு உணர தலைபட்டதற்கு எத்தகைய சிந்தனை கோர்வை காரணமாக இருந்தது என்பதை முன் வைத்தது. இந்த பதிவு டிமாக்ரிடஸிற்கு முன்பே இந்தியதுணைக் கண்டத்தில் தோன்றிய அலுக்யா என்ற ஒரு சிந்தனையாளரை அறிமுகம் செய்கின்றது. இவர் கனடா என்றும் அழைக்கப்பட்டார். கனடா என்றால் அணு-உண்ணி என்று பொருள்.
இவர் கிமு 7-ஆம் நூற்றாண்டில் ஒரு சிந்தனா சாலையும், சமயப் பள்ளியையும் நிறுவினார். இவைகளின் மையக்கரு அணுவை சார்ந்தே இருந்தது. இவரது கருத்துப்படி அறிவு என்பது ஆறுவகையான நேர்மறை பிரிவுகளின் மூலம் பெறக்கூடியது. அவையாவன பொருள், தரம், செயற்பாடு, பொதுத்தன்மை, குறிப்பானதன்மை, தெரிந்தறிதல். இதில் பொருள் என்பது ஒன்பது வகையான வெளிப்பாட்டுத் தன்மை உடையது. இவற்றில் ஐந்து பருபொருள் அடிப்படைகளிலும் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஈதர்**), மேலும் நான்கு அரூபமானவையாகவும் (நேரம், வெளி, சுயம், மனம்) உள்ளன. இவற்றில் பருபொருள் அடிப்படையில் அமைந்தவை அனைத்தும் அணுக்களால் ஆனவை. இயற்கையில் நமக்கு கிடைக்கும் மீச்சிறு துகள் ஆறு அணுக்களால் ஆனவை என்றும், இவைகள் சூரிய ஒளிக்கற்றையில் சோடி,சோடியாக (கடவுள் அல்லது மற்ற காரணங்களால்) இருப்பதாகவும், அவர் கூறினார்.
இக்கருத்துக்கள் இன்றைய தேதியில் ஒரு விளையாட்டு போல தோன்றினாலும், தன் ஆய்வுக்கான கருவை தெளிவாக வரையறுத்து பின்பு அவற்றை பிரித்து பட்டியலிட்ட தன்மைக்காகவேனும் அவரது முயற்சியை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேலும் கனடா, அணுவை பற்றி, நாம் உணர்தல் மூலம் தெரிந்து கொள்வதைவிட அவதானிப்பதன் மூலமே தெரிந்து கொள்கின்றோம் என்பதிலும் தெளிவாக இருந்தார். அவர் இந்த அவதானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டும் கொடுத்திருந்தார். பருபொருட்களை கணக்கிலடங்கா (சுழிக்கு ஒப்ப) பங்காக பிரித்து கொண்டே போனால், ஒரு மலைக்கும், ஒரு கடுகிற்கும் எந்தவொரு வேறுபாடும் இருக்காது. ஏனெனில் சுழியும் சுழியும் ஒன்றே எனக் கூறினார்.
இதை பற்றி பொனமரோவ் கூறும் போது: டிமாக்ரிடஸ் கனடாவின் தத்துவங்கள் பற்றி அறிந்திருந்தாரா?. இது சாத்தியமே ஏனெனில் டெமாக்ரிடஸ் ஒரு பயணவிரும்பி. அவர் பயணித்த இடங்கள் பல. ஆகையால் இந்தியாவிற்கும் பயணத்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் கனடாவின் கருத்தே தொன்மையானதாக இருக்கக் கூடும்.
இத்தகைய மாபெரும் சிந்தனையாளர்கள் வாழ்ந்த சூழல் கிழக்கும் மேற்கும்!! ஆனாலும், அவர்களது கருத்து, அவர்களது பார்வை சந்திக்கும் புள்ளிகள் மிகவும் சுவாரசியமானது இல்லையா?
சரி. மேலும் இத்தகைய கருத்துக்கள் எவ்வெவ்வாறு உருமாற்றம் பெற்றன என்பதை வரும் பதிவுகளில் அறிய முயற்சிப்போம்.
-தொடரும்
** ஈதர் பற்றி அவர் எந்த வகையில் சொல்லி இருப்பார் என்பது எனக்கு புதிராகவே உள்ளது. இதை பற்றி மேலும் தகவல் கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.
அணு என்ற கருத்துருவாக்கம் -1
அணுக்களை பற்றி பேச, கவிதை போன்ற மொழி நடையே மிக்க வசதியாக உள்ளது. - நேய்ல்(ஸ்) போர் (1885-1962 AD )
அணு என்ற வார்த்தை நம்மில் பலர் பல இடங்களில் கேட்டிருப்போம். சித்தர் பாடல்களில் கூட இதை பற்றிய குறிப்புள்ளதாக அறிகின்றேன். ஆங்கிலத்தில் atom என்று அழைக்கப்படும்.
அணு என்ற வார்த்தை எதை குறிகின்றது?. இது குறித்தான சிந்தனை யாரால் எப்போது முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது?
இக்கேள்விக்கான பதில் நோக்கி நாம் கால இயந்திரத்தை பின்னோக்கி செலுத்தினால்……
நாம் அடைந்த இடம்: மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் த்ராசியன் கடற்கரை.
கால இயந்திரத்தின் மானிட்டரில் நாம் பார்க்கும் கால அளவை: 460 - 370 B C
ஒரு மிதமான வெய்யில் இருக்கும் நற்காலை பொழுது. கடலை ஒட்டிய ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டிருக்கின்றான் டிமாக்ரிடஸ். அவன் கைகளில் ஒரு ஆப்பிள். தன் முன் இருக்கும் பரந்து விரிந்த ஆகாயமும், அதனை மௌனமாக தொட்டு விளையாடும் ஆழமான கடலும் அவனுள் ஒரு மோனத்தை உருவக்குகின்றது. அப்பொழுது அவனுள் இருக்கும் ஆகாயத்திலிருந்து ஒரு மின்னல் கீற்று ஒரு சிந்தனையாக வெளிப்படுகின்றது. ” இந்த ஆப்பிளை நான் வெட்டினால், இரு அரை பகுதிகள் கொண்ட துண்டுகள் கிட்டும். அவைகளில் ஒரு பகுதியை நான் வெட்டினால் என்னிடம் நான்கில் இரு பகுதிகள் இருக்கும். இவ்வாறே நான் தொடர்ந்து வெட்டிக்கொண்டே போனால், என்னிடம் 1/8,1/16, 1/32, ..1/1024…..etc., என ஒரு ஆப்பிளின் சிற்சிறு துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமா? அல்லது, இந்த முயற்சியில் ஒரு கட்டத்தில் ஆப்பிளின் பண்பை இழந்த, தனித்தன்மையிலான மீச் சிறு துண்டுகள் மட்டுமே எஞ்சுமா?”
அவனது இக்கேள்வியில் ஒரு உண்மை பொதிந்து கிடந்தது. ஒரு பொருளை சிதைத்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் மேலும் பிளக்க இயல நிலை உண்டாகும் என்ற முடிவுக்கு வந்தான். அதை அவன் “பிளக்க இயலா துகள்” என பெயரிட்டான். கிரேக்கத்தில் அதனை
ατομοζ என்று அழைப்பர். ஆங்கிலத்தில் atom என்று பிற்காலத்தில் வழங்கலாயிற்று. இந்த தகவல்களை அவன் “Little world system” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளான்.
சரி. நாம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டு(ம்) வந்து விடுவோம்.
தற்கால அறிவியலில் டெமாக்ரிடஸ் அணு கருத்துருவாக்கத்தின் தந்தை என போற்றப்படுகின்றார்.
இவரை பற்றி சிறு குறிப்பு: அப்டேரா என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்த த்ராசியன் கடற்கரையில் இருந்தது. இவர் லூசிப்பஸின் சீடன் ஆவார். மேலும் இவர் சால்டியன் சான்றோர்களிடமும், பெர்சிய மாகி -இடமிருந்தும் பாடங்கள் பெற்றார். இவர் பெரிய நாடோடியாக இருந்துள்ளதால் பல தகவல் அறிந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இவரது நகரத்து மக்கள் இவரிடம் பெரு மதிப்பு வைத்திருந்ததாகவும், இவரது இறுதிச் ஊர்வலத்தில் பொது மக்கள் பெருந்திரளாக இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. ஓவியர்கள் இவரை உயரமான, குறுந்தாடியுடைய மனிதனாக சித்தரிக்கின்றனர்.
நான் மேலே குறிப்பிட்டதை நன்கு கவனித்தால் தெரியும் நான் சொன்னது முதன் முதலில் “பதிவு” செய்யப்பட்ட தகவல் என்று. நமக்கு அங்குமிங்குமாக கிடைக்கும் வராலாறு என்ன சொல்கின்றது என பார்ப்போம். டெமாக்ரிடஸ்-ன் ஆசானான லூசிப்பஸ்-க்கும் அணு கருத்துருவாக்கத்தில் பங்கு இருகின்றது என கூறப்படுகின்றது. பண்டைய இந்திய சிந்தனையாளர்களில் ஒருவரான கனடா என்பவரும் டெமாக்ரிடஸ்-க்கு முன்பே அணுக் கருத்துருவாக்கத்தில் கவனம் கொண்டார் என்றும் தெரிகின்றது. இதை பற்றி விவரமாக அடுத்த பகுதியில் பதிகின்றேன்.
-தொடரும்
இந்த கட்டுரை (தொடர்) L I Ponomarev அவர்களால் எழுதப்பட்ட The quantum dice என்ற புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்படுகின்றது. இப்புத்தகம் Mir publishers Moscow- ஆல் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனக்கு இந்த புத்தகம் ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது
பாலாஜி-பாரி
அணு என்ற வார்த்தை நம்மில் பலர் பல இடங்களில் கேட்டிருப்போம். சித்தர் பாடல்களில் கூட இதை பற்றிய குறிப்புள்ளதாக அறிகின்றேன். ஆங்கிலத்தில் atom என்று அழைக்கப்படும்.
அணு என்ற வார்த்தை எதை குறிகின்றது?. இது குறித்தான சிந்தனை யாரால் எப்போது முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது?
இக்கேள்விக்கான பதில் நோக்கி நாம் கால இயந்திரத்தை பின்னோக்கி செலுத்தினால்……
நாம் அடைந்த இடம்: மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் த்ராசியன் கடற்கரை.
கால இயந்திரத்தின் மானிட்டரில் நாம் பார்க்கும் கால அளவை: 460 - 370 B C
ஒரு மிதமான வெய்யில் இருக்கும் நற்காலை பொழுது. கடலை ஒட்டிய ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டிருக்கின்றான் டிமாக்ரிடஸ். அவன் கைகளில் ஒரு ஆப்பிள். தன் முன் இருக்கும் பரந்து விரிந்த ஆகாயமும், அதனை மௌனமாக தொட்டு விளையாடும் ஆழமான கடலும் அவனுள் ஒரு மோனத்தை உருவக்குகின்றது. அப்பொழுது அவனுள் இருக்கும் ஆகாயத்திலிருந்து ஒரு மின்னல் கீற்று ஒரு சிந்தனையாக வெளிப்படுகின்றது. ” இந்த ஆப்பிளை நான் வெட்டினால், இரு அரை பகுதிகள் கொண்ட துண்டுகள் கிட்டும். அவைகளில் ஒரு பகுதியை நான் வெட்டினால் என்னிடம் நான்கில் இரு பகுதிகள் இருக்கும். இவ்வாறே நான் தொடர்ந்து வெட்டிக்கொண்டே போனால், என்னிடம் 1/8,1/16, 1/32, ..1/1024…..etc., என ஒரு ஆப்பிளின் சிற்சிறு துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமா? அல்லது, இந்த முயற்சியில் ஒரு கட்டத்தில் ஆப்பிளின் பண்பை இழந்த, தனித்தன்மையிலான மீச் சிறு துண்டுகள் மட்டுமே எஞ்சுமா?”
அவனது இக்கேள்வியில் ஒரு உண்மை பொதிந்து கிடந்தது. ஒரு பொருளை சிதைத்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் மேலும் பிளக்க இயல நிலை உண்டாகும் என்ற முடிவுக்கு வந்தான். அதை அவன் “பிளக்க இயலா துகள்” என பெயரிட்டான். கிரேக்கத்தில் அதனை
ατομοζ என்று அழைப்பர். ஆங்கிலத்தில் atom என்று பிற்காலத்தில் வழங்கலாயிற்று. இந்த தகவல்களை அவன் “Little world system” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளான்.
சரி. நாம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டு(ம்) வந்து விடுவோம்.
தற்கால அறிவியலில் டெமாக்ரிடஸ் அணு கருத்துருவாக்கத்தின் தந்தை என போற்றப்படுகின்றார்.
இவரை பற்றி சிறு குறிப்பு: அப்டேரா என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்த த்ராசியன் கடற்கரையில் இருந்தது. இவர் லூசிப்பஸின் சீடன் ஆவார். மேலும் இவர் சால்டியன் சான்றோர்களிடமும், பெர்சிய மாகி -இடமிருந்தும் பாடங்கள் பெற்றார். இவர் பெரிய நாடோடியாக இருந்துள்ளதால் பல தகவல் அறிந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இவரது நகரத்து மக்கள் இவரிடம் பெரு மதிப்பு வைத்திருந்ததாகவும், இவரது இறுதிச் ஊர்வலத்தில் பொது மக்கள் பெருந்திரளாக இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. ஓவியர்கள் இவரை உயரமான, குறுந்தாடியுடைய மனிதனாக சித்தரிக்கின்றனர்.
நான் மேலே குறிப்பிட்டதை நன்கு கவனித்தால் தெரியும் நான் சொன்னது முதன் முதலில் “பதிவு” செய்யப்பட்ட தகவல் என்று. நமக்கு அங்குமிங்குமாக கிடைக்கும் வராலாறு என்ன சொல்கின்றது என பார்ப்போம். டெமாக்ரிடஸ்-ன் ஆசானான லூசிப்பஸ்-க்கும் அணு கருத்துருவாக்கத்தில் பங்கு இருகின்றது என கூறப்படுகின்றது. பண்டைய இந்திய சிந்தனையாளர்களில் ஒருவரான கனடா என்பவரும் டெமாக்ரிடஸ்-க்கு முன்பே அணுக் கருத்துருவாக்கத்தில் கவனம் கொண்டார் என்றும் தெரிகின்றது. இதை பற்றி விவரமாக அடுத்த பகுதியில் பதிகின்றேன்.
-தொடரும்
இந்த கட்டுரை (தொடர்) L I Ponomarev அவர்களால் எழுதப்பட்ட The quantum dice என்ற புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்படுகின்றது. இப்புத்தகம் Mir publishers Moscow- ஆல் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனக்கு இந்த புத்தகம் ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது
பாலாஜி-பாரி
Saturday, February 19, 2005
பணி இடமும், பனி இடமும் !!
அன்பு நண்பர்களுக்கு,
பாலாஜி-பாரி யின் வணக்கங்கள்.நான் கடைசியாக வலைப் பதிந்தது அக்டோபர் மாதம் என நினைக்கின்றேன். இப்பொழுது மீண்டும் வலை பதிய வந்துள்ளேன்.
இந்த கால இடைவெளியில் பல நிகழ்வுகள். என் பணியிடம் இப்போது பனி இடம். நான் கனடாவில் புதிய பணியை ஒப்புக் கொண்டுள்ளேன். இந்த இடம் மிகவும் அழகாகவும், பணி நிறைவை தருவதாகவும் உள்ளது. இங்கு வந்து மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. இங்குதான் முதன் முதலில் நேரடியாக பனியை பார்க்கின்றேன். நான் இப்போது இருப்பது கிழக்கு கடற்கரையில். இங்கு பனி விழுவது அதிகம், என்றாலும் அவ்வப்போது வந்து போகும் பனிப்புயலினால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்க நேரிடும். ஒரு நாள் விவரம் தெரியாமல் காலையில் கடமையாக தொழிலுக்கு கிளம்பி, பாதி வழியிலேயே மேலும் செல்ல இயலாமல் வீட்டிற்கு வந்து ரேடியோவை திருகினால், “ஐயா, இன்னிக்கு லீவுங்கையா” என்ற சேதி .
இங்கு வந்து இந்த காலவெளி ஓட்டத்தில் கலந்து இளைப்பாறும் சமயத்தில் இனி வலை பதியவும் இயலும் எனத் தோன்றுகின்றது. எனது பதிவு இதுகாறும் கூட்டாஞ்சோறு போல் இருந்தது. மதி அவர்களின் உதவியுடன் தனி தனி பண்டமாக இனி உங்களுக்கு வழங்க அவா. ஆதலினால் இந்த புதிய வீட்டிற்கு குடி புகுதல்.
முதலில் செய்ய வேண்டியது எப்போதோ தொடங்கிய ஒரு தொடர்கதையை முடித்து வைத்தல். பின்பு பார்த்த படங்கள் பற்றிய ஒரு பதிவு. அறிவியல் பதிவுகள் சில. இதெல்லாம் தாள்களில் எழுதப்பட்டு சிதறிக் கிடக்கின்றது. ஒவ்வொன்றாக அந்தந்த categories -ல் பதிய எண்ணம். பின்பு “நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்” என்ற தொடரையும் தூசி தட்டுகின்றேன்.
இனி மேல் நான் paari.weblogs.us என்ற இடத்தில் மட்டுமே வலை பதிய உள்ளேன். தாங்கள் மேலுள்ள சுட்டியில் எனது புது இடத்திற்கு வர முடியும்.
அன்புடன்
பாலாஜி-பாரி
பாலாஜி-பாரி யின் வணக்கங்கள்.நான் கடைசியாக வலைப் பதிந்தது அக்டோபர் மாதம் என நினைக்கின்றேன். இப்பொழுது மீண்டும் வலை பதிய வந்துள்ளேன்.
இந்த கால இடைவெளியில் பல நிகழ்வுகள். என் பணியிடம் இப்போது பனி இடம். நான் கனடாவில் புதிய பணியை ஒப்புக் கொண்டுள்ளேன். இந்த இடம் மிகவும் அழகாகவும், பணி நிறைவை தருவதாகவும் உள்ளது. இங்கு வந்து மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. இங்குதான் முதன் முதலில் நேரடியாக பனியை பார்க்கின்றேன். நான் இப்போது இருப்பது கிழக்கு கடற்கரையில். இங்கு பனி விழுவது அதிகம், என்றாலும் அவ்வப்போது வந்து போகும் பனிப்புயலினால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்க நேரிடும். ஒரு நாள் விவரம் தெரியாமல் காலையில் கடமையாக தொழிலுக்கு கிளம்பி, பாதி வழியிலேயே மேலும் செல்ல இயலாமல் வீட்டிற்கு வந்து ரேடியோவை திருகினால், “ஐயா, இன்னிக்கு லீவுங்கையா” என்ற சேதி .
இங்கு வந்து இந்த காலவெளி ஓட்டத்தில் கலந்து இளைப்பாறும் சமயத்தில் இனி வலை பதியவும் இயலும் எனத் தோன்றுகின்றது. எனது பதிவு இதுகாறும் கூட்டாஞ்சோறு போல் இருந்தது. மதி அவர்களின் உதவியுடன் தனி தனி பண்டமாக இனி உங்களுக்கு வழங்க அவா. ஆதலினால் இந்த புதிய வீட்டிற்கு குடி புகுதல்.
முதலில் செய்ய வேண்டியது எப்போதோ தொடங்கிய ஒரு தொடர்கதையை முடித்து வைத்தல். பின்பு பார்த்த படங்கள் பற்றிய ஒரு பதிவு. அறிவியல் பதிவுகள் சில. இதெல்லாம் தாள்களில் எழுதப்பட்டு சிதறிக் கிடக்கின்றது. ஒவ்வொன்றாக அந்தந்த categories -ல் பதிய எண்ணம். பின்பு “நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்” என்ற தொடரையும் தூசி தட்டுகின்றேன்.
இனி மேல் நான் paari.weblogs.us என்ற இடத்தில் மட்டுமே வலை பதிய உள்ளேன். தாங்கள் மேலுள்ள சுட்டியில் எனது புது இடத்திற்கு வர முடியும்.
அன்புடன்
பாலாஜி-பாரி
Tuesday, February 15, 2005
நான் உணர்ந்த நீ
மலர்கள் நிறைந்த சோலையை காட்டினேன்
வண்டுகளின் இருப்பே உன்னை உறுத்தியது
என்னுள் நந்தவனங்கள் அழிந்தன
மஞ்சள் மாலை மேகங்கள் காட்டினேன்
"ஓ!.. அதனால் என்ன?" என்றாய்
என் மனதில் தொடு வானம் இருண்டது
நட்சத்திரங்களின் ஒளிச் சமிஞ்ஞைகளை சுட்டினேன்
நீ மின்மினிகளில் உன்னை பார்த்தாய்
எனது கிரகத்தில் அடுப்பு அணைந்தது.
நான் இப்போது செயலற்று விலகுகிறேன்
இனியும் என்னுள் இருக்கும்
உன் இயற்கையை கொல்லலாகாது.
-பாலாஜி-பாரி
வண்டுகளின் இருப்பே உன்னை உறுத்தியது
என்னுள் நந்தவனங்கள் அழிந்தன
மஞ்சள் மாலை மேகங்கள் காட்டினேன்
"ஓ!.. அதனால் என்ன?" என்றாய்
என் மனதில் தொடு வானம் இருண்டது
நட்சத்திரங்களின் ஒளிச் சமிஞ்ஞைகளை சுட்டினேன்
நீ மின்மினிகளில் உன்னை பார்த்தாய்
எனது கிரகத்தில் அடுப்பு அணைந்தது.
நான் இப்போது செயலற்று விலகுகிறேன்
இனியும் என்னுள் இருக்கும்
உன் இயற்கையை கொல்லலாகாது.
-பாலாஜி-பாரி
Sunday, October 10, 2004
மூளை சுமப்பவர்களின் பயணம்!!
மூளையை அதன் இடத்தில் இருந்து விலக்கி, அமிக்டாலாவை ஊதி பெரிதாக நிரப்பி மூளை இருந்த இடத்தில் அதை மறு ஈடு செய்த நபர்கள் இவர்கள். இவர்களின் பாதை அனைத்தும் அவர்களது உணர்வால் நிரப்பப் பட்டிருந்தது. அவர்கள் சந்தோஷத்தையும் கொண்டாடினார்கள். துக்கத்தையும் கொண்டாடினார்கள். இவர்களும் பல இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி உணர்வால் மட்டுமே உந்தப்பட்டு சென்று கொண்டிருந்தனர்
ஒரு சமவெளியில் மாடுகளின் மேய்ச்சல் நிலத்தின் அங்கமாக இருந்த அச்சிறுவனின் கையில் ஒரு புல்லாங்குழல். சுற்றி இருந்த அந்த இடத்தின் வெற்றிடத்தை நிறைத்தது அவனது இலக்கணங்களுக்குள் வராத மன ஓசை. நுரையீரலில் தோன்றி அமிக்டாலாவின் அற்புதத்தில் கலந்து புல்லாங்குழலின் துளை வழியே வந்த இசை மாடுகளையும் மரங்களையும் அவன்பாற் வசப்படுத்தியது. இசை நன்று. இலக்கணங்கள் கட்டுமானம். புது இசை அவனது உணர்வு. கட்டுமானங்கள் உடைபட்டன. அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஆடிக்கொண்டு வந்த அவளையும் அவன் இசை கவர்ந்தது. அவள் நின்றாள். அவள் மயங்கினாள். அவள் குதூகலித்தாள். அச்சிறுவனிடம் " கண்ணனின் விந்தை நான் கண்டேன். சிறுவ என் பயணத்தில் இணைந்து கொள். நோக்கம் பயணத்தின் பாதையில் நாம் காண்போம். என்னில் இருந்த உணர்வின் பிரதிபலிப்பை உன் குழலின் வழியே அந்த பசுக்களை அடையக் காண்கின்றேன். அவைகள் நன்றிக்குரியன. நாம் செல்வோம்" என்றவாறே முந்தானையில் முடிந்த மூளையின் வெளிப்புற சாயலை அவனிடம் காட்டினாள். அவனும், குதித்து எழுந்து புதரில் நரிக்காக வைத்துவிட்ட அந்த மூளையை எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச மொழிக்கு ஊடாக அப்பாதையில் நடக்க துவங்கினான்.
சற்று தொலைவில் இவர்களைப் போல் பலர் எந்தவித கட்டுபாடுமற்று தங்கள் நிலையில் ஆழ்ந்த களிப்பும், பேருவகையும், நிகரற்ற சோகமும் தனதாக்கி கொண்டு இவர்கள் சென்ற திசையிலேயெ சென்று கொண்டிருந்தனர். ஓவென்று அழுது கொண்டும், ஹா... ஹா.... என்று சிரித்து கழித்தும்.
-தொடரும்
-பாரி
ஒரு சமவெளியில் மாடுகளின் மேய்ச்சல் நிலத்தின் அங்கமாக இருந்த அச்சிறுவனின் கையில் ஒரு புல்லாங்குழல். சுற்றி இருந்த அந்த இடத்தின் வெற்றிடத்தை நிறைத்தது அவனது இலக்கணங்களுக்குள் வராத மன ஓசை. நுரையீரலில் தோன்றி அமிக்டாலாவின் அற்புதத்தில் கலந்து புல்லாங்குழலின் துளை வழியே வந்த இசை மாடுகளையும் மரங்களையும் அவன்பாற் வசப்படுத்தியது. இசை நன்று. இலக்கணங்கள் கட்டுமானம். புது இசை அவனது உணர்வு. கட்டுமானங்கள் உடைபட்டன. அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஆடிக்கொண்டு வந்த அவளையும் அவன் இசை கவர்ந்தது. அவள் நின்றாள். அவள் மயங்கினாள். அவள் குதூகலித்தாள். அச்சிறுவனிடம் " கண்ணனின் விந்தை நான் கண்டேன். சிறுவ என் பயணத்தில் இணைந்து கொள். நோக்கம் பயணத்தின் பாதையில் நாம் காண்போம். என்னில் இருந்த உணர்வின் பிரதிபலிப்பை உன் குழலின் வழியே அந்த பசுக்களை அடையக் காண்கின்றேன். அவைகள் நன்றிக்குரியன. நாம் செல்வோம்" என்றவாறே முந்தானையில் முடிந்த மூளையின் வெளிப்புற சாயலை அவனிடம் காட்டினாள். அவனும், குதித்து எழுந்து புதரில் நரிக்காக வைத்துவிட்ட அந்த மூளையை எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச மொழிக்கு ஊடாக அப்பாதையில் நடக்க துவங்கினான்.
சற்று தொலைவில் இவர்களைப் போல் பலர் எந்தவித கட்டுபாடுமற்று தங்கள் நிலையில் ஆழ்ந்த களிப்பும், பேருவகையும், நிகரற்ற சோகமும் தனதாக்கி கொண்டு இவர்கள் சென்ற திசையிலேயெ சென்று கொண்டிருந்தனர். ஓவென்று அழுது கொண்டும், ஹா... ஹா.... என்று சிரித்து கழித்தும்.
-தொடரும்
-பாரி
Saturday, September 11, 2004
அமிக்டாலா மூளையர்கள்!!
இதயம் சுமப்போர் போல் அல்லாது, தலையில் கபாலம் பிரித்து உள்ளிருக்கும் அமிக்டாலா பகுதியை மறு ஈடு செய்து, முன்,பின் மூளையை களைந்து அதை கையிலெடுத்து, ஈட்டி போன்ற அமைப்பின் முன் செருகிக் கொண்டு அவன் "ததிங்கிணத்தோம், தத்தரிகிடதித்தோம், தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிடதித்தோம்... தட்டாவது வீச்சாவது... அனைத்தும் வெறும் பேச்சு..என் நடை என் உள்ளப்பாடு ஐயா!!" என எதிரே உள்ளவன் உணரும் வகையில் குதித்து களித்தும், களித்து குதித்தும் சென்றான். மரங்கள் அசைந்தன. மலர்கள் சிரித்தன. ஒரே ஆரவார எக்காளம் அவனுக்கு... "ஹே.... " என்று கூக்குரலிட்டவாறே ஓடித்திரிந்தான். அவனும் பாதையில் முன்னேறியவாறே இருந்தான்.
மலைகள் நிறைந்த பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒருவித கிறக்கம் தரும் தேனை நீங்கள் பருகியதுண்டா?. அதன் சுவை இனிப்பு. ஆனால் அதன் நறுமணம் தன்னைச் சுரந்த மலர்களின் நினைவினை பொதித்துக் கொண்டிருக்கும். (NT,Jens,balu,srika Thanks guys!!)
மலைகள் நிறைந்த பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒருவித கிறக்கம் தரும் தேனை நீங்கள் பருகியதுண்டா?. அதன் சுவை இனிப்பு. ஆனால் அதன் நறுமணம் தன்னைச் சுரந்த மலர்களின் நினைவினை பொதித்துக் கொண்டிருக்கும். (NT,Jens,balu,srika Thanks guys!!)
இதன் கிறக்கத்தையும் உள்வாங்கி "ஆடினா நான் ஆடினா அது ஆட்டம் மக்கா" என்று கைகொண்ட வாத்தியத்தை தனது சீராக மற்றவருக்கு மாறாக முழங்கி கொண்டே அவளும் இறங்கினாள். வந்தான் என் காதலன், வாழ்வில் அவனில்லை எனில் சாதலின் என ஒலித்தவாறே வந்தாள் அவளும் ஒய்யாரமாக. அவளது வழியில் காட்டு மலர்களும், கானக்குயில்களும் அவளுடன் அன்பு மொழி பேசின; ஓயாமல் அவளும் அவைகளிடம்.
இதை நன்றாக உணர்ந்து, எந்த ஒரு திட்டமும் இன்றி, போகும் வழியில் இறைந்த மலர்களை சுமந்தவாறே அந்த ஓடையும் அவள் துணையாக சென்றது.
-தொடரும்
பாரி
(குறிப்பு: அமிக்டாலா- உணர்வுகள் உருவாக காரணமாக இருக்கும் மூளையின் ஒரு பகுதி)
Sunday, September 05, 2004
இதயச் சுமையாளிகளின் சந்திப்பு
அப்பள்ளத்தாக்கில் இருந்த ஒரு மரத்தின் மீதமர்திருந்த சிறுவனின் கையில் ஒரு பொட்டலம். அதில் அவனது இதயம். அவன் தொணாத்திக் கொண்டு இருந்தான். அப்போது அம்மரத்தின் அருகிலே நின்று கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன், ஒரு சிறிய பென்சிலை கொண்டு பல எண்களை எழுதி அழித்துக் கொண்டே,அச்சிறுவனின் தொணத்தலை கேட்டான். சிறுவன் " நான் ஆசையுடன் சென்றேன் பல விசயங்களை கற்றுக் கொள்ள வகுப்பிற்கு. எனது மாமா பயிற்றுவித்த படிக்கும் முறைகளால், நான் மேலும் படித்த விசயங்களை மற்றவர்களிடம் குறிப்பாக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டபோது கிடைத்தவை பிரம்படிகள். அதுவும் உள்பாதத்தில். இதயம் நொறுங்கியது. ஆசை அழிந்தது. இதோ! என் கையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள என் இதயம்." கவனமாக தனது இதயத்தை கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன் எக்காளமாக கூறினான் "போ! போ!! இனி உன் அகராதியில் ஆசையும் இல்லை! இதயமும் இல்லை!!" பின்பு அலுத்துக் கொண்டு மேலும் மெதுவாக " என்னிடமும்தான்" எனக் கூறிக் கொண்டே, எண்களை கூட்டிக் கழித்து பெருக்கி தனது வாழ்க்கையை வாழ தன்னை தயாரித்துக் கொண்டான்.
அங்கே ஒரு பாறையின் மீதமர்ந்த மற்றொருவன், தன் துணையுடன் புணர்ந்த கொண்டிருந்த சமயத்தில் எவ்வாறு தன் துணை, படைகளின் குண்டுகளுக்கு பலியானாள் என்றும், இனி எப்போதுமே நிரப்பப்பட இயலாத ஒரு வெற்றிடத்தில் தன் ஸ்கலிதம் பாதியில் முடிந்து போனதை கூறி தன் இதயத்தை அவனது பொதியில் இருந்து வெளியில் காட்டினான். அதைக் கேட்ட அருகிலிருந்தவன், "சரி இப்போ என்ன?. என் விறைத்த குறியை சிதறச் செய்யவும் அவர்களால் ஆனது. இனி நம் குறிகள் நம் தலையில் தான்", என கூறிவிட்டு அமைதிகாத்தான் சற்றே படபடத்த தன் கையில் இருந்த இதயத்தை தாலாட்டிக் கொண்டே.
சிறிதும் கவலையின்றி, தனக்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டதையும், மற்றவர்கள் சூழ்ந்து தன்னையே அவர்கள் மறக்கடித்ததையும், இவைகளையே சித்தாந்தங்களாக கொண்டு அவர்கள் வாழ்ந்ததையும் அவள் கூறினாலும் பள்ளத்தாக்கை அடைய மேற்கொண்ட பெருமுயற்சிகள் வியர்வையை தந்து அவளது நிலையைக் காட்டியது. அவள் தான் சுமந்த இதயத்தின் சுமையை பொருட்படுத்தவில்லை.
இத்தகைய நிலையில் தங்கள் இதயத்தின் கைப்பிடியில் இருந்து விலகி வாழ்வது வாழ்க்கை என்று அவர்கள் நம்பச் செய்யப்பட்டார்கள். அத்தகையோர் அங்கே குழுமி இருந்தனர். அவர்கள் குழுமியதன் நோக்கம் என்னவென்று அவர்கள் அப்போது உணரவில்லை. அது ஓர் கூட்டம் என்று மட்டுமே உணர்ந்தனர்.
இருள்கறுப்புக் குதிரையில், தனது முடி அலை போல பரவ, காற்றை போல் அப்பள்ளத்தாக்கை அவள் அடைந்தாள். அவள் நம்மைப் போன்ற சாதாரன மனுசி. இதயத்தை தன் உடலின் ஒரு பாகமாக கொண்டவள். அங்கே அவள் கண்ட கூட்டம் அவளை நிலை குலையச் செய்தது. அவளுக்கு இதயத்தை சுமந்தபடி மக்கள் வாழ இயலுமா? என்ற கேள்வியும், அவர்கள் பேச்சை கேட்டு இவர்கள் அதைச் சுமந்தால் வாழ இயலாது என்பதையும் அறிந்து, தன்னில் ஓர் பிளவாக அவள் அங்கிருந்து சென்றாள். ஆனாலும் அவள் பட்ட அதிர்ச்சி அவளது உயிர் நிலை ஆட்டி வைத்தது.
அவள் தனது பாதையில் செல்ல யத்தனிக்கும் போது ஒரு பேரிரைச்சல் சில காத தூரங்களுக்கு அப்பாலிருந்து வருவதை கேட்டாள்.
-தொடரும்.
Monday, August 30, 2004
இதயத்தை சுமக்கின்றவர்கள்!!!
இது மற்றொரு ஜீவன். தன் இதயத்தை ஒரு கூடையில் சுமந்து கொண்டு அதை இடுப்பில் இட்டு காக்கை, கழுகுகளிடமிருந்து காப்பாற்ற ஒரு மெல்லிய துணியால் மூடி ஒரு ஒற்றையடி பாதையின் வழியாக முக்கிய வீதியை அடைந்தது.
அஜ்ஜீவனின் நடையிலும் தீவிரம். முகத்தில் ஒரு நிராசை. என்ன இது என்று சொல்ல இயலா ஒரு குறிப்பில்லாத முகத்தோற்றம்.
அந்த ஜீவனின் நடை முன்னோக்கியே இருந்தது. பையில் இதயத்தை சுமப்பவர், அந்த ஜீவனை சந்திக்க ஆவலானார். தனது துரித நடையில் நம்பிக்கை வைத்து, அடிகளை எட்டிப் போட்டார். அந்த ஜீவனின் கவனத்தை கவர தன்னால ஆன அனைத்தையும் செய்தார். ஒரு வழியாக அவரை எட்டினார். கூடையில் இதயம் சுமப்பவரை சற்று கடந்ததும், தலையை மட்டும் திருப்பி, எங்கே என்று கண்களால் வினவினார். ஆனாலும் இருவரின் நடையிலும் சற்றும் வேக குறைச்சல் இல்லை.
கூடையில் இதயம் சுமப்பவரோ, 'பாதைகள் பலவானாலும் போகும் இடம் ஒன்று' என்று கூற, கைப்பைக்காரர் அமைதியுற்றார்.
கூடையில் இதயம் சுமப்பவர் தான் கடந்து வந்த பாதைகளை நினைக்கும் பொழுது, சிறிது துணுக்குற்றார். தனது குழந்தை பருகிய அமிர்தம் சுரந்த முலைகளில் ரத்தம் சுரக்க துவங்கும் கணம் தனது இதயத்தை பிடுங்கி கூடையிலிட்டது நினைவுக்கு வர அவருக்கு வியர்வை பெருக்கெடுத்தது, இதயம் கூடையில் இருந்தாலும்.
பதின்ம வயதில் இருக்கும் தனது வாரிசை கிளம்பிய இடத்திலே மட்டும் விட்டு விட்டு, தனது இதயத்தை பிய்த்து கையில் வைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்த உடன் தன் பாச உணர்வுகள் மறக்கடிக்கப்பட்டது உறைத்தது. ஆனாலும் அது எந்த ஒரு வலியையும் தோற்றுவிக்கவில்லை. எதேச்சையாக கைகள் நிரடும் போது, காய்ந்த போன ரத்த துளிகள் மட்டும் மூளைக்கு செய்தியாகச் சென்றது.
அவர்கள் நடந்த போது உண்டான சரக் சரக் சப்தம் மட்டுமே அவர்களுக்கு ஒலித் துணையாக இருந்தது.
அவர்கள் சென்ற பாதை சில மலைகளுக்கு நடுவில் ஒரு பள்ளத்தாக்கை அடைந்தது. அப்பள்ளத்தாக்கு அவர்கள் வந்தது போன்ற பல பாதைகளின் சங்கமமாக இருந்தது. அப்போதுதான் கைப்பைக்காரர் அங்கே பல மனிதர்கள் பரவி இருந்ததைக் கண்டார். மரத்தின் நிழல்களில், பெரிய பாறைகளின் அடியில், சிறிய குகைகளில், இவ்வாறு பல இடங்களில். அனைவரிடத்திலும் ஒரு கைப்பையோ அல்லது கூடையோ அல்லது பாலிதீன் பைகளோ அல்லது கனச்துர, செவ்வக வடிவ டப்பாக்களோ இருந்த்தது.
மனத்தின் சார்புகளை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்தார்களா? அல்லது முடிவு செய்ய வைக்கப்பட்டார்களா?.
-தொடரும்
பாரி
Friday, August 27, 2004
இதயத்தை சுமக்கும் கணங்கள்...
குருதி வடிந்து கொண்டே இருக்கும் தனது இதயத்தை முதலில் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்கத் துவங்குகையில் அதன் ஆர்ப்பரிப்பு ஒரு இம்சையை கொடுத்தது. ஆகையால் அதனை ஒரு பையில் இட்டு, அதன் கைப்பிடி உதவியுடன் வசதியாக தூக்கி சென்றால் என்ன? என்ற எண்ணம் மேலிட, அவ்வெண்ணம் செயல் வடிவம் பெற்றது. அந்த இதயத்தின் ஆர்ப்பாரிப்புகள் தற்காலிகமாக அடக்கப்பட்டது.
பல கண்கவரும் வண்ணங்களை காட்டி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி அந்த கைப்பையில் இருக்கும் கருஞ்சிவப்பு இரத்தம் தோய்ந்த இதயத்தை காண்கின்றாள். உடனே தனக்கு கூறப்பட்ட ஆப்பிள் பழம் அவள் நினைவில் வர, " கைப்பையில் ஆப்பிள்! கைப்பையில் ஆப்பிள்" என்று உற்சாக குரல் எழுப்பினாள்.
தன் இதயம் வெளியில் பளபளப்பான கருஞ்சிவப்புடன் இருந்தாலும் அதை அறுத்துப் பார்த்தால் அதனுள்ளே எங்கும் வெண்மை படர்ந்து இருக்கும் என்ற எண்ணம் சட்டென்று தோன்றி மறைகின்றது. ஆனாலும் தனது நடையில் சற்றும் தளர்வில்லை.
ஒரு பூனையை ஒரு பையில் வைத்துக் கொண்டு சற்று தூரம் நடந்துள்ளீர்களா? அதுவும் ஒரு சுறுசுறுப்பான பூனையுடன்?. அப்பூனையை விட மென்மையான அதைவிட சுறுசுறுப்பான தனது இதயத்தை அப்பையில் சுமந்து செல்வது சற்று வேடிக்கையாகவே இருந்தது. ஆனாலும் ஆர்பாரித்த இதயம் பூனை போல் அல்லது அதைவிட சமர்த்தாக இருந்ததால் நடையை சற்று நிதானமாக்க நினைத்தாலும், நடையின் நோக்கம் நடையை தளரச் செய்யவில்லை.
அந்த கைப்பையில் இருந்த இதயம், ஒரு குழந்தை ஓவென்று அழுது பின் சமாதானமடைந்து, மறுபடியும் அழ ஆரம்பிப்பது போல மீண்டும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. தனது கைகளால் அதனை வருடி சமாதனமடையச் செய்த முயற்சி பலனற்றுப் போனது. குருதி ஊறும் இதயத்தின் ரத்தம் மட்டுமே உள்ளங்கையில் மிச்சம். ஆனாலும் தனது நடையில் தளர்வில்லை.
சந்தியா காலங்களில் மலர்ந்த சிறிய ஆரஞ்சு நிற தண்டுகள் கொண்ட அழகிய வெண்மையான இதழ்களுடன் அமைந்த பவளமல்லி மலர்களிலிருந்து கிளம்பிய நறுமணம் நாசியை வருடி சிலிர்க்கச் செய்தது. ஆனாலும் இதயத்திற்கு இதமோ இம்மணம் என தோன்றும் பொழுதே, இதயம் தனியாக தனது கைப்பையில் இருக்கின்றது என்ற நினைவு ஒரு வறண்ட புன்னகையாக வெளிப்பட்டது.
-தொடரும்.
(இது ஒரு தொடர் முயற்சி. இதன் முதல் அத்தியாயம் இப்போது நீங்கள் படித்தது. ஒவ்வொர் அத்தியாத்தின் தலைப்பு அப்பதிவின் தலைப்பாக அமையும். கடைசியில் இதை தொகுத்து ஓர் நாமகரணம் செய்வோம். -அன்புடன் -பாரி )
Thursday, August 12, 2004
அறிவார்ந்த அடிமைகள்
இப்போதெல்லாம் எனக்கு தோன்றுகின்ற சில விசயங்களை நான் பகிர்ந்து கொள்கின்றேன். இது எதற்கும் களிம்பல்ல.
ஒரு விசயம் நடக்கின்றது. அந்த விசயத்தை நீ பார் என்றால், அவர்கள் தங்களை அந்த விசயங்களோடு இணைத்து கொள்கின்றனர். தாங்களே அவ்விஷயம் என பாவித்து கொள்கின்றனர். இது எந்த வகை மனோபாவம் என்றால், ஆங்கிலேயனுக்கு கணக்கு எழுதி அதனால் தங்களுக்கு ஓர் பெருமையும், அடிவருடியதால் கிடைத்த எச்சில் பொட்டலங்களை அலுவுலகத்தை விட்டு வெளிவந்த பின் "பார்! என் கையில் பொட்டலம். நான் உங்களினும் மேலானவன்!!" என்று பாமர சனங்களை பயமுறுத்திய பச்சோந்தி மனோபாவம்.
இவர்களுக்கு போராட்டம் என்பது, பள்ளியில் டப்பா அடித்து மதிப்பெண் பெறுவது மட்டும்தான். தன்னைவிட பலம் வாய்ந்த தெரிந்தே தவறு செய்யும் அமைப்பை எதிர்ப்பதை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. தன்னை அடிமையாய் வைத்துள்ள ஓர் அமைப்பு எதை எதிர்க்கின்றதோ அதை அவர்களும் எதிர்ப்பர். ஏனென்றால் அதுதான் அவர்களது உளவியலுக்கும் இருப்புக்கும் பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். இவர்கள் அந்த அமைப்பினால் செய்யப்படும் சுரண்டல்களயும் துரோகத்தையும் இனி வருங்காலங்களில் வருந்தாமல் பாரம் சுமப்பர். அவ்வளவுதான் இவர்கள்.
இந்த இடத்தில்தான், நான் மேலும் சில விசயங்களை கூற விரும்புகின்றேன்.
1. இவர்களால் அழ முடியுமே தவிர அடித்தவரை நேர்கண் கொண்டு பார்க்க முடியாது.
2. அடித்தவர் ஏன் அவ்வாறு என்று சொல்லாமல், ஓர் மிட்டாய் அல்லது ஓப்பியம் கொடுத்து அடியை மறக்கச் செய்வார்.
3. இவர்களும் எப்படி எங்கள் தலைவர்கள் என்று அவர்களை பாராட்டி ஓப்பிய பயன்பாட்டை எதிர்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக அதை உட்கொள்வர்.
4. இவர்களும் விடுதலை பற்றி பேசுவர். அவர்கள்தான் உலகில் (நாட்டில்) உள்ளனர் என்றும் மற்றவர்கள் முன்னிருந்தவாறே இருக்க (தங்கள் அடிமையாய் இருக்க) வேண்டும் என்றும் கூறுவர்.
5. இந்த விசயங்களை போற்றி பாதுகாக்க பலரின் அருளாசிகளும் உண்டு.
இவர்கள் பேசுவதில் உள்ள ஆதிக்க மனப்பான்மை எதிராளியை மருளச் செய்யும். இவர்களில் எவரேனும் ஈராக் சம்பவத்தை எழுதிய அதே வேகத்துடன் மணிப்பூர் சம்பவத்தை பற்றி எழுதுகின்றனரா?. இவர்களுக்கு முக்கியம் சொந்த நலன்கள். இவர்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதிலும், ஆடம்பர பேச்சுகள் மூலமும், கோஷ்டியாய் வந்து தாக்குவதன் மூலமும் தங்கள் அமைப்புக்கு அடிவருடி தங்களை இழந்து கொண்டே தங்களின் போலித்தனத்தை சற்றும் வெட்கமின்றி தொடர்வார்கள்.
அடிப்படையான நேர்மைத்திறனும், உண்மையான மனிதப் பண்பும் பார்த்து இவர்களிடம் பேசினால் சேற்றை வாரி இறைப்பர் ஏனென்றால் அவர்கள் உழல்வது அதிலேதான்.
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....
அன்புடன்
பாலாஜி-பாரி
ஒரு விசயம் நடக்கின்றது. அந்த விசயத்தை நீ பார் என்றால், அவர்கள் தங்களை அந்த விசயங்களோடு இணைத்து கொள்கின்றனர். தாங்களே அவ்விஷயம் என பாவித்து கொள்கின்றனர். இது எந்த வகை மனோபாவம் என்றால், ஆங்கிலேயனுக்கு கணக்கு எழுதி அதனால் தங்களுக்கு ஓர் பெருமையும், அடிவருடியதால் கிடைத்த எச்சில் பொட்டலங்களை அலுவுலகத்தை விட்டு வெளிவந்த பின் "பார்! என் கையில் பொட்டலம். நான் உங்களினும் மேலானவன்!!" என்று பாமர சனங்களை பயமுறுத்திய பச்சோந்தி மனோபாவம்.
இவர்களுக்கு போராட்டம் என்பது, பள்ளியில் டப்பா அடித்து மதிப்பெண் பெறுவது மட்டும்தான். தன்னைவிட பலம் வாய்ந்த தெரிந்தே தவறு செய்யும் அமைப்பை எதிர்ப்பதை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. தன்னை அடிமையாய் வைத்துள்ள ஓர் அமைப்பு எதை எதிர்க்கின்றதோ அதை அவர்களும் எதிர்ப்பர். ஏனென்றால் அதுதான் அவர்களது உளவியலுக்கும் இருப்புக்கும் பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். இவர்கள் அந்த அமைப்பினால் செய்யப்படும் சுரண்டல்களயும் துரோகத்தையும் இனி வருங்காலங்களில் வருந்தாமல் பாரம் சுமப்பர். அவ்வளவுதான் இவர்கள்.
இந்த இடத்தில்தான், நான் மேலும் சில விசயங்களை கூற விரும்புகின்றேன்.
1. இவர்களால் அழ முடியுமே தவிர அடித்தவரை நேர்கண் கொண்டு பார்க்க முடியாது.
2. அடித்தவர் ஏன் அவ்வாறு என்று சொல்லாமல், ஓர் மிட்டாய் அல்லது ஓப்பியம் கொடுத்து அடியை மறக்கச் செய்வார்.
3. இவர்களும் எப்படி எங்கள் தலைவர்கள் என்று அவர்களை பாராட்டி ஓப்பிய பயன்பாட்டை எதிர்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக அதை உட்கொள்வர்.
4. இவர்களும் விடுதலை பற்றி பேசுவர். அவர்கள்தான் உலகில் (நாட்டில்) உள்ளனர் என்றும் மற்றவர்கள் முன்னிருந்தவாறே இருக்க (தங்கள் அடிமையாய் இருக்க) வேண்டும் என்றும் கூறுவர்.
5. இந்த விசயங்களை போற்றி பாதுகாக்க பலரின் அருளாசிகளும் உண்டு.
இவர்கள் பேசுவதில் உள்ள ஆதிக்க மனப்பான்மை எதிராளியை மருளச் செய்யும். இவர்களில் எவரேனும் ஈராக் சம்பவத்தை எழுதிய அதே வேகத்துடன் மணிப்பூர் சம்பவத்தை பற்றி எழுதுகின்றனரா?. இவர்களுக்கு முக்கியம் சொந்த நலன்கள். இவர்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதிலும், ஆடம்பர பேச்சுகள் மூலமும், கோஷ்டியாய் வந்து தாக்குவதன் மூலமும் தங்கள் அமைப்புக்கு அடிவருடி தங்களை இழந்து கொண்டே தங்களின் போலித்தனத்தை சற்றும் வெட்கமின்றி தொடர்வார்கள்.
அடிப்படையான நேர்மைத்திறனும், உண்மையான மனிதப் பண்பும் பார்த்து இவர்களிடம் பேசினால் சேற்றை வாரி இறைப்பர் ஏனென்றால் அவர்கள் உழல்வது அதிலேதான்.
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....
அன்புடன்
பாலாஜி-பாரி
Thursday, July 08, 2004
நான் யார்?
"நீ வந்த இடம் கால்"
"அதை மட்டுமே நீ பார்"
ஆதிக்க வார்த்தைகள் கேட்டு,
ஆண்டுகளின் கணக்கறியா,
எமது மதங்கள் சுமத்திய
மாய சுமையறிந்தே கூனிய
முதுகு உன் தலையை
நிமிராது அழுத்தி பிடித்தது
எம் பெரியவர்கள் மூலம்.
ஆம் சிகிச்சையில்லா மூலம் தான் - அவர்கள்
மானிடத்திற்கு.
சுமந்தது என் இடது தோள்
இதுகாறும் முப்புரிநூல் மட்டும் அன்று
அதனூடாக ஈராயிரத்தின் கழிவுகளை.
எண்ணிச் சுமையென உணர்தல் கண்டேன்
எண்ணியபடி தீயில் சுட்டெரித்தேன்.
தீயே நீதான் என்னில் இறங்கு-காட்டு
நான் யாரேன எனக்கும்,
தான் யாரேன அவர்களுக்கும்.
பாலாஜி-பாரி
"அதை மட்டுமே நீ பார்"
ஆதிக்க வார்த்தைகள் கேட்டு,
ஆண்டுகளின் கணக்கறியா,
எமது மதங்கள் சுமத்திய
மாய சுமையறிந்தே கூனிய
முதுகு உன் தலையை
நிமிராது அழுத்தி பிடித்தது
எம் பெரியவர்கள் மூலம்.
ஆம் சிகிச்சையில்லா மூலம் தான் - அவர்கள்
மானிடத்திற்கு.
சுமந்தது என் இடது தோள்
இதுகாறும் முப்புரிநூல் மட்டும் அன்று
அதனூடாக ஈராயிரத்தின் கழிவுகளை.
எண்ணிச் சுமையென உணர்தல் கண்டேன்
எண்ணியபடி தீயில் சுட்டெரித்தேன்.
தீயே நீதான் என்னில் இறங்கு-காட்டு
நான் யாரேன எனக்கும்,
தான் யாரேன அவர்களுக்கும்.
பாலாஜி-பாரி
Wednesday, June 23, 2004
நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு- கிடையாது!! - 2
இத்திரைப் படம் "அண்ணாச்சியின்" குற்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்கின்றேன். முந்தைய பதிவில் கூறியபடி, எப்பொழுதும் அவர் முகத்தில் தனது பணி நிமித்த சோகம் இழையாக ஓடும்.
இப்படம் பல மனித உணர்வுகளை சிக்கல் இல்லாமல் காட்டுகின்றது.
"அண்ணாச்சியின்" கடைக்குட்டி மல்லிகா பருவம் அடைவது, அதற்கான விழா எடுப்பது, அவ்விழா முடிவில், மூத்த மகளின் கணவன் சொல்லிக் கொண்டு செல்லும் போது, மல்லிகாவை ஒரு கணம் பார்ப்பது, அந்த நிகழ்வை மல்லிகாவின் பெற்றோர் கவனித்து விடுவது இவை அனைத்தும் ஓர் சரம் போல் தொடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாச்சியின் மகன், சுதந்திரத்திற்காக பாடுபடுவதை ஓரிரு வசனங்கள் மூலமும், ராட்டையில் நூல் நூற்பதன் மூலமும் காட்டுகின்றார் இயக்குநர். அண்ணாச்சியின் மகன், தூக்கிலிடுவதை எதிர்த்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்வதையும் கள்ளுக்கடை காரர் மூலம் காட்டுகின்றார்.
அண்ணாச்சியிடம் நிறைய நோயாளிகள் வருவதை அறிந்து, மூத்த மகள் நிலம் வாங்க பணம் கேட்டு வருவதும், அது தொடர்பான வசனங்களும், அவள் மீது அண்ணாச்சியின் பரிவை காட்டுகின்றது.
அண்ணாச்சியின் உடல் நலம் குன்றி, அவரால் "ஆரச்சார்" தொழிலை தொடர முயலாத நிலையில், திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வரும் டவாலி, அவரது மகனை உதவிக்கு வைத்து கொள்ளுமாறு பணிக்கிறார். தந்தையின் உடல் நலம் கருதி தானும் அவருடன் செல்கிறார் மகன், கொள்கையை சற்றே ஓரமாக வைத்துவிட்டு.
அங்கு சென்ற பின், தூக்கின் திறனை சோதித்து, ஓர் வீட்டில் உட்காருகின்றனர். தூக்கிலிடுபவர், அன்றைய இரவு உறங்காமல் இருக்க வேண்டும். அதற்காக, அங்கு அவருடன் இருக்கும் மூன்று காவலர்கள் அவருக்கு கதை சொல்ல முயல்கின்றனர். முதலில் ஒருவர், அவருக்கு நந்தனார் கதையை கூறுகின்றார். பின்பு மற்றொருவர், அரிச்சந்திரன் கதையை கூற முற்படும் போது, அக்கதையில் நாட்டம் இன்றி தூக்கம் வருவதாக கூறுகின்றார் அண்ணாச்சி. உடனே, மூன்றாவது நபர் சுவாரசியமான ஓர் கதையை கூறுகின்றார்.
அந்தக் கதை:
ஓர் சிறுமி. 13 வயது. ஆடு மேய்க்க செல்லும் போது புல்லாங்குழல் வாசிப்பவனிடம் பழக்கம் ஏற்படுகின்றது.
அவள் தனது காதலனின் புல்லாங்குழலின் இசையில் மயங்குகிறாள். ஒரு நாள், அவனிடம் அவள் புல்லாங்குழல் வாசிக்க கற்று தரும் படி கேட்க, அவனும் கற்று தருகின்றான். அவள் ஆடு மேய்த்து கொண்டே அவனது புல்லாங்குழலை வாசிக்கின்றாள். அச்சிறுமியின் அக்காள் கணவன், அப்போது அங்கு வந்து அச்சிறுமியை கெடுத்து கொன்று விடுகின்றான். ஆனால், அச்சமயம் அங்கு வரும் அவள் காதலன் மீது பழியாகி தூக்கு தண்டனை பெறுகின்றான்.
இக்கதை அண்ணாச்சியின் மனக் கண்ணில் எவ்வாறு விரிகின்றது என்பது இப்படத்தின் திருப்பம், முடிவு. அவர் அச்சிறுமியை மல்லிகாவாக எண்ணிக்கொள்கின்றார். தனது மாப்பிள்ளையை அவளது அக்காவின் கணவனாக பாவித்து அதனால் அவர் மிக துயருற்று, கதையை நிறுத்தும் படி சொல்கின்றார். அப்போது, கதையாளி, "அண்ணாச்சி, எப்படி கதைய நிறுத்தறது? நீங்க தூக்கில போடப்போவது அந்தப் பையனதான" என்கின்றார். அதற்கு அவர் "நான் மாட்டேன், நான் மாட்டேன்" என்றபடியே சரிகின்றார். மாரடைப்பால் இறந்து விடுகின்றார். இச்சம்பவம் மூலம் இயக்குநர், பார்வையாளர்களின் எண்ணத்தை கவ்வுகின்றார்.
இச்சூழ்நிலையில், தண்டனையை நிறைவேற்ற சட்ட சிக்கல் வந்து விடுகின்றது. அப்போது அவரது மகன் பற்றிய எண்ணம் அவர்களுக்கு வருகின்றது. அவனை அப்பணி செய்ய அழைத்து செல்கின்றனர். கடைசிக் காட்சி நிழலாக காண்பிக்க படுகின்றது.
இப்போது பார்வையாளர் மனதில் ஓர் பாரம்.
இப்படத்தின் இசை இளையராஜா. படத்தில் பல இடங்களில் அவரது மேன்மை தெரிகின்றது. இசையே இல்லாத இடங்களிலும், படத்தினுள் இருக்கும் அக் குட்டிக் கதை துவங்கும் போதும், புல்லாங்குழல் இசையிலும் நம்மை கவர்ந்து விடுகின்றார். சில இடங்களில் அவரது இசை ஓர் அமானுஷ்ய தன்மையை கொடுக்கின்றது. இவரும் படத்தின் முதுகெலும்பு.
நன்றாக இருந்தது இப்படத்தின் ஒளிப்பதிவு. காடுகளும், தாமரைக் குளங்களும், மலைகளும், கண்ணுக்கு குளுமை.
சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கட்டாயம் பாருங்கள்.
இப்படம் பல மனித உணர்வுகளை சிக்கல் இல்லாமல் காட்டுகின்றது.
"அண்ணாச்சியின்" கடைக்குட்டி மல்லிகா பருவம் அடைவது, அதற்கான விழா எடுப்பது, அவ்விழா முடிவில், மூத்த மகளின் கணவன் சொல்லிக் கொண்டு செல்லும் போது, மல்லிகாவை ஒரு கணம் பார்ப்பது, அந்த நிகழ்வை மல்லிகாவின் பெற்றோர் கவனித்து விடுவது இவை அனைத்தும் ஓர் சரம் போல் தொடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாச்சியின் மகன், சுதந்திரத்திற்காக பாடுபடுவதை ஓரிரு வசனங்கள் மூலமும், ராட்டையில் நூல் நூற்பதன் மூலமும் காட்டுகின்றார் இயக்குநர். அண்ணாச்சியின் மகன், தூக்கிலிடுவதை எதிர்த்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்வதையும் கள்ளுக்கடை காரர் மூலம் காட்டுகின்றார்.
அண்ணாச்சியிடம் நிறைய நோயாளிகள் வருவதை அறிந்து, மூத்த மகள் நிலம் வாங்க பணம் கேட்டு வருவதும், அது தொடர்பான வசனங்களும், அவள் மீது அண்ணாச்சியின் பரிவை காட்டுகின்றது.
அண்ணாச்சியின் உடல் நலம் குன்றி, அவரால் "ஆரச்சார்" தொழிலை தொடர முயலாத நிலையில், திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வரும் டவாலி, அவரது மகனை உதவிக்கு வைத்து கொள்ளுமாறு பணிக்கிறார். தந்தையின் உடல் நலம் கருதி தானும் அவருடன் செல்கிறார் மகன், கொள்கையை சற்றே ஓரமாக வைத்துவிட்டு.
அங்கு சென்ற பின், தூக்கின் திறனை சோதித்து, ஓர் வீட்டில் உட்காருகின்றனர். தூக்கிலிடுபவர், அன்றைய இரவு உறங்காமல் இருக்க வேண்டும். அதற்காக, அங்கு அவருடன் இருக்கும் மூன்று காவலர்கள் அவருக்கு கதை சொல்ல முயல்கின்றனர். முதலில் ஒருவர், அவருக்கு நந்தனார் கதையை கூறுகின்றார். பின்பு மற்றொருவர், அரிச்சந்திரன் கதையை கூற முற்படும் போது, அக்கதையில் நாட்டம் இன்றி தூக்கம் வருவதாக கூறுகின்றார் அண்ணாச்சி. உடனே, மூன்றாவது நபர் சுவாரசியமான ஓர் கதையை கூறுகின்றார்.
அந்தக் கதை:
ஓர் சிறுமி. 13 வயது. ஆடு மேய்க்க செல்லும் போது புல்லாங்குழல் வாசிப்பவனிடம் பழக்கம் ஏற்படுகின்றது.
அவள் தனது காதலனின் புல்லாங்குழலின் இசையில் மயங்குகிறாள். ஒரு நாள், அவனிடம் அவள் புல்லாங்குழல் வாசிக்க கற்று தரும் படி கேட்க, அவனும் கற்று தருகின்றான். அவள் ஆடு மேய்த்து கொண்டே அவனது புல்லாங்குழலை வாசிக்கின்றாள். அச்சிறுமியின் அக்காள் கணவன், அப்போது அங்கு வந்து அச்சிறுமியை கெடுத்து கொன்று விடுகின்றான். ஆனால், அச்சமயம் அங்கு வரும் அவள் காதலன் மீது பழியாகி தூக்கு தண்டனை பெறுகின்றான்.
இக்கதை அண்ணாச்சியின் மனக் கண்ணில் எவ்வாறு விரிகின்றது என்பது இப்படத்தின் திருப்பம், முடிவு. அவர் அச்சிறுமியை மல்லிகாவாக எண்ணிக்கொள்கின்றார். தனது மாப்பிள்ளையை அவளது அக்காவின் கணவனாக பாவித்து அதனால் அவர் மிக துயருற்று, கதையை நிறுத்தும் படி சொல்கின்றார். அப்போது, கதையாளி, "அண்ணாச்சி, எப்படி கதைய நிறுத்தறது? நீங்க தூக்கில போடப்போவது அந்தப் பையனதான" என்கின்றார். அதற்கு அவர் "நான் மாட்டேன், நான் மாட்டேன்" என்றபடியே சரிகின்றார். மாரடைப்பால் இறந்து விடுகின்றார். இச்சம்பவம் மூலம் இயக்குநர், பார்வையாளர்களின் எண்ணத்தை கவ்வுகின்றார்.
இச்சூழ்நிலையில், தண்டனையை நிறைவேற்ற சட்ட சிக்கல் வந்து விடுகின்றது. அப்போது அவரது மகன் பற்றிய எண்ணம் அவர்களுக்கு வருகின்றது. அவனை அப்பணி செய்ய அழைத்து செல்கின்றனர். கடைசிக் காட்சி நிழலாக காண்பிக்க படுகின்றது.
இப்போது பார்வையாளர் மனதில் ஓர் பாரம்.
இப்படத்தின் இசை இளையராஜா. படத்தில் பல இடங்களில் அவரது மேன்மை தெரிகின்றது. இசையே இல்லாத இடங்களிலும், படத்தினுள் இருக்கும் அக் குட்டிக் கதை துவங்கும் போதும், புல்லாங்குழல் இசையிலும் நம்மை கவர்ந்து விடுகின்றார். சில இடங்களில் அவரது இசை ஓர் அமானுஷ்ய தன்மையை கொடுக்கின்றது. இவரும் படத்தின் முதுகெலும்பு.
நன்றாக இருந்தது இப்படத்தின் ஒளிப்பதிவு. காடுகளும், தாமரைக் குளங்களும், மலைகளும், கண்ணுக்கு குளுமை.
சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கட்டாயம் பாருங்கள்.
Tuesday, June 22, 2004
நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு-கிடையாது!! -1
இன்னைக்கு அபிலாஷ் கூப்பிட்டதால் இந்த படத்தை பார்த்தேன். இன்ஸ்டிட்டுயுட் ஜிம்கானாவில் திரையிட்டனர். அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படம்.
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. குற்றவாளியை தூக்கில போடற பணியை செய்யும் ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் சொல்றாங்க.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் குற்றவாளிகளை தண்டிக்க உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை தருவார்கள். இதை நிறைவேற்றும் பணியை செய்பவர் "அரச்சார்" என்றழைக்கப்படுவர். இது பரம்பரையாக வரும் பணி.
இப்படத்தின் நாயகன் சுமார் ஐம்பது-அறுபது வயதான "அண்ணாச்சி" (கொடுவில் உன்னிக்கிருஷ்ணன்). அவருடைய மனைவி, சுகுமாரி. அவர்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவள் திருமணமாகி, எட்டு வயது பெண் குழந்தைக்கு தாய். அவள் கணவன் (முரளி). அடுத்தவன் சுதந்திர போராட்ட வீரன். சத்தியாகிரகி. கடைக்குட்டி, பதிமூன்று வயதான மல்லிகா.
இப்படம், ஒரு கள்ளுக்கடையில் அண்ணாச்சி குடித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்கும். தான் தூக்கிலிட்ட ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தும் தூக்கிலிட்ட வருத்தத்தை குடித்துவிட்டு புலம்புவார்.
கதையின் ஓர் முக்கிய அம்சம் சமஸ்தானத்தில் நடக்கும் ஓர் பழக்கம். தூக்கிலிடுவதற்கான கயிறை சிறையில் கைதிகள் தயாரிப்பர். அக்கயிற்றுக்கான நோக்கம் நிறைவேறியவுடன், அண்ணாச்சி அதை தன் வீட்டின் பூசை அறையில் வைப்பார். அக்கயிற்றை பஸ்பம் செய்து நோய் கண்டவர்களுக்கு வீபூதியாக கொடுப்பார். அதனால் நோய் தீர்ந்துவிடும் என்று நம்பி பலர் அவரிடம் வருவார்கள். (ஒருகட்டத்தில், நீண்ட நாட்களுக்கு தூக்கில் யாரையும் போடாததால், அண்ணாச்சியின் பவர் குறைந்து விட்டது என்று ஊர்மக்கள் பேசுவர்:-)).
தூக்கிலிடும் பணியை மேற்கொள்ளும் அவருக்கு சொல்லொண்ணா சோகம். தனக்கு தெரியாத ஒருவன் எப்படி தன் எதிரியாக முடியும்?. அவனைக் கொல்கின்றோமே என்ற எண்ணம் அவர் முகத்தில் எப்பொழுதும் தெரியும். தனக்கு உடம்பு சரியில்லை என்றெல்லாம் சொல்வார். ஆனாலும் அவரை அழைத்து சென்றுவிடுவர். தீவிர காளி பக்தர். தன் குற்ற உணர்வை குறைக்க, தன் மீது காளி வந்து இக்காரியம் செய்கின்றாள் என நினைத்து கொள்வார்.
-தொடரும்
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. குற்றவாளியை தூக்கில போடற பணியை செய்யும் ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் சொல்றாங்க.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் குற்றவாளிகளை தண்டிக்க உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை தருவார்கள். இதை நிறைவேற்றும் பணியை செய்பவர் "அரச்சார்" என்றழைக்கப்படுவர். இது பரம்பரையாக வரும் பணி.
இப்படத்தின் நாயகன் சுமார் ஐம்பது-அறுபது வயதான "அண்ணாச்சி" (கொடுவில் உன்னிக்கிருஷ்ணன்). அவருடைய மனைவி, சுகுமாரி. அவர்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவள் திருமணமாகி, எட்டு வயது பெண் குழந்தைக்கு தாய். அவள் கணவன் (முரளி). அடுத்தவன் சுதந்திர போராட்ட வீரன். சத்தியாகிரகி. கடைக்குட்டி, பதிமூன்று வயதான மல்லிகா.
இப்படம், ஒரு கள்ளுக்கடையில் அண்ணாச்சி குடித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்கும். தான் தூக்கிலிட்ட ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தும் தூக்கிலிட்ட வருத்தத்தை குடித்துவிட்டு புலம்புவார்.
கதையின் ஓர் முக்கிய அம்சம் சமஸ்தானத்தில் நடக்கும் ஓர் பழக்கம். தூக்கிலிடுவதற்கான கயிறை சிறையில் கைதிகள் தயாரிப்பர். அக்கயிற்றுக்கான நோக்கம் நிறைவேறியவுடன், அண்ணாச்சி அதை தன் வீட்டின் பூசை அறையில் வைப்பார். அக்கயிற்றை பஸ்பம் செய்து நோய் கண்டவர்களுக்கு வீபூதியாக கொடுப்பார். அதனால் நோய் தீர்ந்துவிடும் என்று நம்பி பலர் அவரிடம் வருவார்கள். (ஒருகட்டத்தில், நீண்ட நாட்களுக்கு தூக்கில் யாரையும் போடாததால், அண்ணாச்சியின் பவர் குறைந்து விட்டது என்று ஊர்மக்கள் பேசுவர்:-)).
தூக்கிலிடும் பணியை மேற்கொள்ளும் அவருக்கு சொல்லொண்ணா சோகம். தனக்கு தெரியாத ஒருவன் எப்படி தன் எதிரியாக முடியும்?. அவனைக் கொல்கின்றோமே என்ற எண்ணம் அவர் முகத்தில் எப்பொழுதும் தெரியும். தனக்கு உடம்பு சரியில்லை என்றெல்லாம் சொல்வார். ஆனாலும் அவரை அழைத்து சென்றுவிடுவர். தீவிர காளி பக்தர். தன் குற்ற உணர்வை குறைக்க, தன் மீது காளி வந்து இக்காரியம் செய்கின்றாள் என நினைத்து கொள்வார்.
-தொடரும்
Thursday, June 17, 2004
வன்முறை
இந்த பதிவிற்கு திரு. JR அவர்களின் கவிதைதான் காரணம்( அவர் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இட்டது ).
எனது உள்ளில் இருக்கும் மூர்க்கம் சார்ந்த வன்முறையை வெளிக்கொணர அவர் தூண்டுகோலாகிவிட்டார்.
நான் சிறுவயதில் இருந்து செய்த, எனக்கு நினைவில் இருக்கும், வன்முறை என நான் கருதிய செயல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
UKG படிக்கும் சமயம் என் அம்மாவிடம் அடி வாங்கிய போது நடந்தது....
நான் அழுதபடி எங்கள் வீட்டில் இருந்த பலகையில் (சின்ன பலகை) உட்கார்ந்து கொண்டிருந்தேன். செய்த தவறை நான் உணர வேண்டும் என்பதற்காக சினஞ் சொற்கள் கூறிக் கொண்டிருந்தார் என் அம்மா. அது என் கோபத்தை வலுப்படுத்தியது. அவரை எதிர்க்க நான் அப்பொழுது கூறியது," போடி...".
இரண்டாவது வகுப்பு படிக்கும் போது என் நண்பன் முருகானந்தத்திடம் சண்டை இட்டேன். அப்பொழுது எழுந்த வன்சீறலில், என் கைகளின் நகங்களை வைத்து அவன் தொடையை கிள்ளி விட்டேன், இரத்தம் கசியும் அளவிற்க்கு. அவன் தனது போலீஸ் அண்ணனண அழைத்து வருதாக மிரட்டி, என்னை இரு தினங்கள் மிரள வைத்தான்.
எனது தங்கையை நான் கடித்து விட்டதால் பல் பதிந்து இரத்தம் வந்து, அந்த வடு இன்றும் இருக்கின்றது. அவள் கைகளில் மட்டும் அல்ல, எனது நெஞ்சிலும்.
ஐந்தாவது படிக்கும் போது பள்ளிவிட்டு செல்லும்போது ஓர் சண்டையை வைத்து, சக்திவேலும் நானும் மோதினோம். திட்டமிட்ட ஒரு ஒற்றைகொற்றை சண்டை.
தொட்டு விளையாட்டின் போது, எனது தங்கை என்னை முந்திய தருணத்தில் அவளது பொட்டு சிதறி விழ, அதை வன்மத்துடன் எடுத்து பிய்த்து போட்டேன். பாவம் அவள் தப்பினாள்.
ஏழாவது படிக்கும்போது, துடுக்கான முதல் வீட்டுப் பையனின் பட்ட பெயரை அவனது வீட்டின் முன் எழுதி அவனை தாழ செய்தேன்.
என்னை விட வயதில் மூத்த என் ஒன்றுவிட்ட அண்ணனை, குரூரமாக வார்த்தைகளால் தாக்கியது.
இன்னும் பலப்பல உள்ளன....
என் செய்வது, இதை அறிய முயலும் போதும் வேறொரு தவறை செய்து விடுகின்றேன்.
குற்ற உணர்வின் காரணமாக இப்பதிவு எழுத்ப்படவில்லை என்பதையும் வரிகளுக்கு இடையே படியுங்கள்.
எனது உள்ளில் இருக்கும் மூர்க்கம் சார்ந்த வன்முறையை வெளிக்கொணர அவர் தூண்டுகோலாகிவிட்டார்.
நான் சிறுவயதில் இருந்து செய்த, எனக்கு நினைவில் இருக்கும், வன்முறை என நான் கருதிய செயல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
UKG படிக்கும் சமயம் என் அம்மாவிடம் அடி வாங்கிய போது நடந்தது....
நான் அழுதபடி எங்கள் வீட்டில் இருந்த பலகையில் (சின்ன பலகை) உட்கார்ந்து கொண்டிருந்தேன். செய்த தவறை நான் உணர வேண்டும் என்பதற்காக சினஞ் சொற்கள் கூறிக் கொண்டிருந்தார் என் அம்மா. அது என் கோபத்தை வலுப்படுத்தியது. அவரை எதிர்க்க நான் அப்பொழுது கூறியது," போடி...".
இரண்டாவது வகுப்பு படிக்கும் போது என் நண்பன் முருகானந்தத்திடம் சண்டை இட்டேன். அப்பொழுது எழுந்த வன்சீறலில், என் கைகளின் நகங்களை வைத்து அவன் தொடையை கிள்ளி விட்டேன், இரத்தம் கசியும் அளவிற்க்கு. அவன் தனது போலீஸ் அண்ணனண அழைத்து வருதாக மிரட்டி, என்னை இரு தினங்கள் மிரள வைத்தான்.
எனது தங்கையை நான் கடித்து விட்டதால் பல் பதிந்து இரத்தம் வந்து, அந்த வடு இன்றும் இருக்கின்றது. அவள் கைகளில் மட்டும் அல்ல, எனது நெஞ்சிலும்.
ஐந்தாவது படிக்கும் போது பள்ளிவிட்டு செல்லும்போது ஓர் சண்டையை வைத்து, சக்திவேலும் நானும் மோதினோம். திட்டமிட்ட ஒரு ஒற்றைகொற்றை சண்டை.
தொட்டு விளையாட்டின் போது, எனது தங்கை என்னை முந்திய தருணத்தில் அவளது பொட்டு சிதறி விழ, அதை வன்மத்துடன் எடுத்து பிய்த்து போட்டேன். பாவம் அவள் தப்பினாள்.
ஏழாவது படிக்கும்போது, துடுக்கான முதல் வீட்டுப் பையனின் பட்ட பெயரை அவனது வீட்டின் முன் எழுதி அவனை தாழ செய்தேன்.
என்னை விட வயதில் மூத்த என் ஒன்றுவிட்ட அண்ணனை, குரூரமாக வார்த்தைகளால் தாக்கியது.
இன்னும் பலப்பல உள்ளன....
என் செய்வது, இதை அறிய முயலும் போதும் வேறொரு தவறை செய்து விடுகின்றேன்.
குற்ற உணர்வின் காரணமாக இப்பதிவு எழுத்ப்படவில்லை என்பதையும் வரிகளுக்கு இடையே படியுங்கள்.
Thursday, June 03, 2004
பௌர்ணமி !!
(சூழலுக்கும் எனக்கும் ஒரு மௌனமான உரையாடல்)
சூழல்: ஒரு மெல்லிசான மேகப் படலத்துக்கு பின்னால பளீர்னு நிலா ஒளி வீசிட்டு இருக்கு.
அத சுத்தி ஒரு பளீர் சாம்பல் நிறத்தில இருந்து துவங்கி விளிம்புல கரும் சாம்பல் நிறம் கொண்ட வானம் பரந்து இருக்கு.
நான்: என்ன ஒரு அற்புதம். நிலவொளி பாயுது, வெளியில் மட்டுமல்ல என்னுளும். என்னை அப்படியே இழுத்து மயக்குது. இந்த இனிமை சொர்க்கம்.
சூழல்: நிலா கிழக்கில எழுந்து மேலெ போய்ட்டு இருக்கு. மேற்கு திசைல இருந்து குளிர் காத்து அடிக்குது. சுத்தி இருக்கிற எல்லா இடத்துலேயும் அதோட வெளிச்சம்.
நான்: வெண்ணிலா தக்க தருணத்தில் தனது அழகை முழுமையா காட்ட தயங்குவது இல்லை. தனது முக வடுக்களை கூட முழுதாய்தான் காண்பிக்கின்றது. அப்பொழுது கூட அதன் ஒளி குறைவதில்லை. சரியாக சொன்னால் அப்பொழுதுதான் அது மிக அழகாகவும், பூரிப்பாகவும் உள்ளது.
சூழல்: நகரத்தின் ஒளியும் அங்கே, இங்கே தென்படுது. சோடியம் ஒளி விளக்குனால ஒரு செம்மஞ்சள் ஒளி தூரத்துல இருக்கு. மரங்கள் ரொம்ப கருப்பா இருக்கு.
நான்: "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே...
சூழல்: இந்த மாதிரிதான் நேத்தும் நான் இருந்தேன். மேகம் கோட்டையெல்லாம் கூட கட்டி இருந்தது. ஆனா இன்னிக்கு ரொம்பச் சின்ன ஒரு கோட்டை நிலாவ சுத்தி.
நான்: நிலவை சுற்றி அந்த வட்டமான கசிந்து இருக்கின்ற ஒளி போதி மரத்தையும் புத்தரையும் மனக்கண்ணில் கொண்டு வருகின்றது. இந்த எல்லையற்ற பெருவெளியில் தொலைந்து போகவேண்டும் என் அடையாளங்கள். நானும். காலத்தில் கரைந்து காற்றிலே மிதந்து செல்லும் ஓர் படிமமாகவாவது நான் உணர வேண்டும்.
சூழல்: அந்த வட்டம் சில நிறங்கள காட்டுது...
நான்: வர்ண ஜாலங்கள்....இத துரத்திட்டு போற செயல்.. அந்த ஆக்க சக்தி நான் வேண்டி நிற்கின்றேன். என் எல்லைகள் எனக்கு அரண்கள். உடைக்க முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தத்தளிகின்றேன்
சூழல்: நிலா இன்னும் கொஞ்சம் மேலே போய்கிட்டிருக்கு. வெளிச்சம் எல்லா இடத்திலேயும் இருக்கு. இப்பவும் மேற்குல இருந்து குளிர் காத்து வீசுது. சின்னதா ஒரு கோட்டை இப்பவும் இருக்கு சில நிறங்களோட.
சூழல்: ஒரு மெல்லிசான மேகப் படலத்துக்கு பின்னால பளீர்னு நிலா ஒளி வீசிட்டு இருக்கு.
அத சுத்தி ஒரு பளீர் சாம்பல் நிறத்தில இருந்து துவங்கி விளிம்புல கரும் சாம்பல் நிறம் கொண்ட வானம் பரந்து இருக்கு.
நான்: என்ன ஒரு அற்புதம். நிலவொளி பாயுது, வெளியில் மட்டுமல்ல என்னுளும். என்னை அப்படியே இழுத்து மயக்குது. இந்த இனிமை சொர்க்கம்.
சூழல்: நிலா கிழக்கில எழுந்து மேலெ போய்ட்டு இருக்கு. மேற்கு திசைல இருந்து குளிர் காத்து அடிக்குது. சுத்தி இருக்கிற எல்லா இடத்துலேயும் அதோட வெளிச்சம்.
நான்: வெண்ணிலா தக்க தருணத்தில் தனது அழகை முழுமையா காட்ட தயங்குவது இல்லை. தனது முக வடுக்களை கூட முழுதாய்தான் காண்பிக்கின்றது. அப்பொழுது கூட அதன் ஒளி குறைவதில்லை. சரியாக சொன்னால் அப்பொழுதுதான் அது மிக அழகாகவும், பூரிப்பாகவும் உள்ளது.
சூழல்: நகரத்தின் ஒளியும் அங்கே, இங்கே தென்படுது. சோடியம் ஒளி விளக்குனால ஒரு செம்மஞ்சள் ஒளி தூரத்துல இருக்கு. மரங்கள் ரொம்ப கருப்பா இருக்கு.
நான்: "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே...
சூழல்: இந்த மாதிரிதான் நேத்தும் நான் இருந்தேன். மேகம் கோட்டையெல்லாம் கூட கட்டி இருந்தது. ஆனா இன்னிக்கு ரொம்பச் சின்ன ஒரு கோட்டை நிலாவ சுத்தி.
நான்: நிலவை சுற்றி அந்த வட்டமான கசிந்து இருக்கின்ற ஒளி போதி மரத்தையும் புத்தரையும் மனக்கண்ணில் கொண்டு வருகின்றது. இந்த எல்லையற்ற பெருவெளியில் தொலைந்து போகவேண்டும் என் அடையாளங்கள். நானும். காலத்தில் கரைந்து காற்றிலே மிதந்து செல்லும் ஓர் படிமமாகவாவது நான் உணர வேண்டும்.
சூழல்: அந்த வட்டம் சில நிறங்கள காட்டுது...
நான்: வர்ண ஜாலங்கள்....இத துரத்திட்டு போற செயல்.. அந்த ஆக்க சக்தி நான் வேண்டி நிற்கின்றேன். என் எல்லைகள் எனக்கு அரண்கள். உடைக்க முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தத்தளிகின்றேன்
சூழல்: நிலா இன்னும் கொஞ்சம் மேலே போய்கிட்டிருக்கு. வெளிச்சம் எல்லா இடத்திலேயும் இருக்கு. இப்பவும் மேற்குல இருந்து குளிர் காத்து வீசுது. சின்னதா ஒரு கோட்டை இப்பவும் இருக்கு சில நிறங்களோட.
Tuesday, June 01, 2004
ஒரு சிறுகதை..
இந்த கதை தினமனி கதிரில் வெளியாகியுள்ளது. கதையின் கரு ஒரு ஆழமான விஷயத்தை எடுத்துரைகின்றது. நம்பிக்கை ஊட்டும் விதத்திலும் அமைந்துள்ளது. படித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
பாரி
அன்புடன்
பாரி
Sunday, May 30, 2004
குடி நீர் திட்டம்!!
கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை நடுவண் அரசு செயல் படுத்த போவதாகவும், அது முதலில் தமிழ் நாட்டில் துவக்கப்படும் என்ற செய்தி விகடன் தளத்தில் வந்துள்ளது.
மற்ற விவரங்கள் அறிந்தவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி
மற்ற விவரங்கள் அறிந்தவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி
Wednesday, May 12, 2004
தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி
As I could not find a place which hosts 38 MB file, this post remains incomplete. I regret it.
(This post is corrected and republished with above info on 20May04 at 2:45 AM IST)
தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஹோஸூரில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவை தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்தியது.அவ்விழாவில் ஒரு பட்டிமன்றமும், திரு. புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி அவர்களின் பாட்டுக் கச்சேரியும் நடந்தது.
நண்பர் திரு. ராஜா அவர்களின் அன்பான அழைப்பினால் இந்நிகழ்ச்சியை நாங்கள் (தங்கமணி,யென்ஸ்,பாலாஜி) கண்டுகளிக்கச் சென்றோம். இந்த விழியத்தை நம் அனைவருக்கும் பதிவு செய்து வழங்கியது திரு. யென்ஸ். அவர் ஜெர்மனியை சேர்ந்தவர். இங்கு பின்முனைவராக () பணியாற்ற வந்துள்ளார். அவருக்கு இசையில் ஈடுபாடு அதிகம். அன்றைய நிகழ்ச்சியை அவர் வெகுவாக ரசித்தார். இதை இங்கு இட ஆலோசனைகள் வழங்கிய நண்பர் ரமணீதரன், சத்தியராஜ்குமார்,சுந்தர் ஆகியோருக்கு நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் தேவையான ஜாவா ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுத்தமைக்கு அவருக்கு உங்கள் சார்பில் ஒரு பெரிய "ஓ".
அன்புடன்
பாரி
(This post is corrected and republished with above info on 20May04 at 2:45 AM IST)
தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஹோஸூரில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவை தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்தியது.அவ்விழாவில் ஒரு பட்டிமன்றமும், திரு. புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி அவர்களின் பாட்டுக் கச்சேரியும் நடந்தது.
நண்பர் திரு. ராஜா அவர்களின் அன்பான அழைப்பினால் இந்நிகழ்ச்சியை நாங்கள் (தங்கமணி,யென்ஸ்,பாலாஜி) கண்டுகளிக்கச் சென்றோம். இந்த விழியத்தை நம் அனைவருக்கும் பதிவு செய்து வழங்கியது திரு. யென்ஸ். அவர் ஜெர்மனியை சேர்ந்தவர். இங்கு பின்முனைவராக () பணியாற்ற வந்துள்ளார். அவருக்கு இசையில் ஈடுபாடு அதிகம். அன்றைய நிகழ்ச்சியை அவர் வெகுவாக ரசித்தார். இதை இங்கு இட ஆலோசனைகள் வழங்கிய நண்பர் ரமணீதரன், சத்தியராஜ்குமார்,சுந்தர் ஆகியோருக்கு நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் தேவையான ஜாவா ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுத்தமைக்கு அவருக்கு உங்கள் சார்பில் ஒரு பெரிய "ஓ".
அன்புடன்
பாரி
Tuesday, May 11, 2004
பயணம்
முகமறியா பலர் அமைத்த பாதை.
ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.
புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....
இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.
சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...
கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.
சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.
வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.
அன்புடன்
-பாரி
ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.
புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....
இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.
சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...
கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.
சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.
வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.
அன்புடன்
-பாரி
Monday, May 10, 2004
நண்பர் சித்ரன்
இன்று நண்பர் சித்ரனின் வலைப்பக்கத்தை காண நேர்ந்தது. மரத்தடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதற் பரிசை வென்றவர். கல்கியில் பல நல்ல கதைகள் உள்ளார். அவரது வரவு நம் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
பாலாஜி-பாரி
அன்புடன்
பாலாஜி-பாரி
Sunday, May 09, 2004
இன்னொன்னு....
இந்த புலி பதிவு முடிச்சுட்டு ரூம்முக்கு போனா, நண்பன் பாபு, "மால்குடிக்கு ஒரு புலி"(ஆங்கிலம்) ங்கிற புத்தகம் வைத்திருந்தான். ஒரே புலிகள் மயமா இருக்கேன்னு நினைச்சேன். அப்போ "இந்த ஒரு படம் மட்டும் சரிப்படாது. இன்னொன்னு போடுன்னு" புலி சொல்றாப்ல இருந்துச்சா. இன்னொரு படமும் புகைப்படமும் போட்டாச்சு.
பாலாஜி-பாரி
Saturday, May 08, 2004
புலி பாருங்கோ! புலி பாருங்கோ!!
புலி பாருங்கோ!! புலி பாருங்கோ!!!
பெங்களூரு புலி பாருங்கோ!!!!
'புலி' ந்னு சொன்னா பயப்படாதீங்கோ!!
தேசியம் சம்பந்தப் பட்டதுங்கோ!!!
அதாவது இந்திய தேசிய விலங்குங்கோவ் :) !!!
(நாங்கள் வன உலா சென்ற போது, இந்த புலியை நண்பர் 'யென்ஸ்' படம் பிடித்தார்!!)
"என் ஜாய் மாடி!!"
-பாரி
Tuesday, May 04, 2004
துருவலாய் மழை பொழியும் ஓர் காலை நேரத்தில்.....
முன்னிரவில் ஓய்வின்றி பொழிந்த மழை
மந்தமான வெளிச்சத்தை
பாரிலே பரப்பிவிட்டு
தன் ஓய்வை அறிவிக்க முயல்கிறது!!
நீர்க்குச்சிகள் துருவலாய் மாறி
தான் உதிர்த்த பல வண்ண மலர்களின் இதழ்களுக்கு
இதமாக இதழ் கொடுக்கின்றது!!
மந்தகாசம் மனதை நிறைத்த காலை
சிறு சோம்பலுடன் அலுவலகம் அடைந்து
இருக்கையின் பின்னிருக்கும்
ஜன்னலை திறந்தேன்.
மழைத் துருவலில் சிலிர்த்து
கம்பிகள் ஊடே அறையில் நுழைந்து சிலிர்க்கச் செய்தது
நட்சத்திரங்கள் கொண்ட பெயர் தெரியா அச்சிகப்பு மலர்!!
அன்புடன்
பாரி
மந்தமான வெளிச்சத்தை
பாரிலே பரப்பிவிட்டு
தன் ஓய்வை அறிவிக்க முயல்கிறது!!
நீர்க்குச்சிகள் துருவலாய் மாறி
தான் உதிர்த்த பல வண்ண மலர்களின் இதழ்களுக்கு
இதமாக இதழ் கொடுக்கின்றது!!
மந்தகாசம் மனதை நிறைத்த காலை
சிறு சோம்பலுடன் அலுவலகம் அடைந்து
இருக்கையின் பின்னிருக்கும்
ஜன்னலை திறந்தேன்.
மழைத் துருவலில் சிலிர்த்து
கம்பிகள் ஊடே அறையில் நுழைந்து சிலிர்க்கச் செய்தது
நட்சத்திரங்கள் கொண்ட பெயர் தெரியா அச்சிகப்பு மலர்!!
அன்புடன்
பாரி
Thursday, April 29, 2004
மார்ச் வரிகள்....
அந்த மார்ச் மாத இறுதி நாட்கள், அழகான பல இயற்கை நிகழ்வுகளோடு, நிகழ்வுகளின் மணத்தை நினைவுகளாகவும் பொதித்து கொண்டிருந்தன.
பூக்கள் மட்டுமே நிறைந்த மரங்களுக்கு கீழே இருந்த தேநீர் மேசைக்கு மேல் சந்தோஷங்களாக விரவி கிடந்தன ஊதா நிற மலர்கள். மண்ணில் உதிர்த்த மரத்தின் மேல் அவை கொண்ட பிணக்கு, மேசைக்கு அருகில் உட்கார்ந்து தங்களை நோக்கிய அச்சிறுமியின் புன்னகை கண்டு பூரிப்பாக மாற்றம் கொண்டது. அந்த காட்சி எனக்கு உவகை அளித்தது.
மாலை நேரம். சூரியன் தன்னை ஒளித்துக் கொள்ள இரு மணிதியாலங்கள் இருந்தது. கோடையின் வெப்பம் சற்று தணிய ஆரம்பித்தது. சட்டென்று, விண்ணில் கொண்டல்கள் தோன்றின. எங்கிருந்தோ திசையில்லாமல் குளிர்ந்தக் காற்று வீசியது.
அன்றைய பணியின் நிறைவை நினைத்துக் கொண்டே இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே அந்த சாலையில் நடந்து செல்கின்றேன். சூழலின் குளிர்ச்சி உள்ளத்தை நனைக்கின்றது. என்னை போலவே களிப்புற்று மஞ்சள் பூக்கள் நிறைந்த மரங்கள் அங்கு இங்கும் அசைந்து பூ மாரிப் பொழிந்தன. காதலி தன் கையால் காதலன் முகத்தில் நீரை சிதறச் செய்யும் போது அவன் சிணுங்குவதைப் போல் சிணுங்கச் செய்தன என்னை அம்மலர்கள், என் முகத்தில் படும் போது.
இப்போது எங்கோ இடி முழக்கம். கோடையின் சிறப்பு அதன் மழை. முரணாக இருந்தாலும் அழகுணர்ச்சிக்கு அது அரண். சட்..சட்....பெரிய பெரிய முத்துக்களாய் ஆரம்ப மழைத்துளிகள். கற்பிக்கப்பட்ட மனம் மழையிலிருந்து ஒதுங்க எண்ண, புதிர் காணும் மனம் நீர்க் குச்சிக்கு கீழே நிற்க அழைப்பு வைத்தது. ஏற்றேன். மண் வாசனை என் நினைவுகளை, பல கோடை மழைகளோடு பொருத்திப் பார்க்கின்றது.
நான் அம்மழையில் நடக்க, வசந்தத்தை உலகுக்கு அறிவித்த அந்த மஞ்சள் மலர்கள் தற்காலிக சிற்றோடைகளில் என்னைக் கடந்து சென்றன, புன்சிரிப்புடனே!! இத்தருணத்தில் இயற்கை தன்னை குதூகலமாக வைத்துக்கொண்டதாகப் பட்டது எனக்கு.
மின்னல் கீற்றுக்கள் மேகங்களை பிளக்க, மேகங்கள் உரத்த குரலோடு மழையினை உகுக்க, நிலைமை தீவிரம் அடைந்தது. புள்ளினத்தின் கூடுகள் அதிர மரங்கள் பேயாட்டத்துடன் ஓலம் இடுகின்றது. சூழலில் சற்றே இருள் கவிகின்றது. மரங்களிலிருந்து, சுள்ளிகள் கிளைகளின் மோதல்களில் பாதையில் வீழ்கின்றன. மேலும் பல அடிகள் நடந்தேன். இதற்குள் ஓடையில் நீர் பிரவாகம் அதிகரிக்க புரண்டு ஓடும் பூக்கள் என்னைக் காப்பாற்று எனக் கை நீட்ட, முகத்தில் வேகத்துடன் அறையும் மழை என் கண்களை மூடச் செய்தது. மூடனானேன் - செய்வதறியா.
தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் நீரை வடித்துவிட்டு பின்பு கண்களை திறக்கும் போது மழையின் வேகம் குறைந்ததாக தோன்றியது. மேகங்களின் அடர்த்தி ஒரு சில இடங்களில் குறைந்து அதனுள் விரவிய கதிரவனின் ஒளி சிதறி, ஒரு புதிய ஒளியைத் தந்தது அச்சூழலுக்கு. இப்போது பாதை ஓரம் ஒதுங்கிய மலர்கள், மீண்டும் என்னுடன் நட்புறவாடியது. அதைக் கண்டு நான் வெட்டகமுற்றாலும், ஆசுவாசமானேன். மழை நின்றது.
பாதையை கடக்க, பாலம் ஏறி இறங்கினால் அங்கு மலரும் காலத்திற்கு முன்பே மலர்ந்துவிட்ட குல்மோகர் பூவின் இதழ்கள் சிவப்புத் தீயாய் சிதறி கிடந்தன. இயற்கை இப்போதும் தன்னை குதூகலமாகவே வைத்துக் கொண்டுள்ளது.
மழையில் நடப்போம். மலர்கள் அப்போதும் நமக்கு ஏதாவது சொல்லும்.
நன்றிகளுடன்
-பாரி
பூக்கள் மட்டுமே நிறைந்த மரங்களுக்கு கீழே இருந்த தேநீர் மேசைக்கு மேல் சந்தோஷங்களாக விரவி கிடந்தன ஊதா நிற மலர்கள். மண்ணில் உதிர்த்த மரத்தின் மேல் அவை கொண்ட பிணக்கு, மேசைக்கு அருகில் உட்கார்ந்து தங்களை நோக்கிய அச்சிறுமியின் புன்னகை கண்டு பூரிப்பாக மாற்றம் கொண்டது. அந்த காட்சி எனக்கு உவகை அளித்தது.
மாலை நேரம். சூரியன் தன்னை ஒளித்துக் கொள்ள இரு மணிதியாலங்கள் இருந்தது. கோடையின் வெப்பம் சற்று தணிய ஆரம்பித்தது. சட்டென்று, விண்ணில் கொண்டல்கள் தோன்றின. எங்கிருந்தோ திசையில்லாமல் குளிர்ந்தக் காற்று வீசியது.
அன்றைய பணியின் நிறைவை நினைத்துக் கொண்டே இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே அந்த சாலையில் நடந்து செல்கின்றேன். சூழலின் குளிர்ச்சி உள்ளத்தை நனைக்கின்றது. என்னை போலவே களிப்புற்று மஞ்சள் பூக்கள் நிறைந்த மரங்கள் அங்கு இங்கும் அசைந்து பூ மாரிப் பொழிந்தன. காதலி தன் கையால் காதலன் முகத்தில் நீரை சிதறச் செய்யும் போது அவன் சிணுங்குவதைப் போல் சிணுங்கச் செய்தன என்னை அம்மலர்கள், என் முகத்தில் படும் போது.
இப்போது எங்கோ இடி முழக்கம். கோடையின் சிறப்பு அதன் மழை. முரணாக இருந்தாலும் அழகுணர்ச்சிக்கு அது அரண். சட்..சட்....பெரிய பெரிய முத்துக்களாய் ஆரம்ப மழைத்துளிகள். கற்பிக்கப்பட்ட மனம் மழையிலிருந்து ஒதுங்க எண்ண, புதிர் காணும் மனம் நீர்க் குச்சிக்கு கீழே நிற்க அழைப்பு வைத்தது. ஏற்றேன். மண் வாசனை என் நினைவுகளை, பல கோடை மழைகளோடு பொருத்திப் பார்க்கின்றது.
நான் அம்மழையில் நடக்க, வசந்தத்தை உலகுக்கு அறிவித்த அந்த மஞ்சள் மலர்கள் தற்காலிக சிற்றோடைகளில் என்னைக் கடந்து சென்றன, புன்சிரிப்புடனே!! இத்தருணத்தில் இயற்கை தன்னை குதூகலமாக வைத்துக்கொண்டதாகப் பட்டது எனக்கு.
மின்னல் கீற்றுக்கள் மேகங்களை பிளக்க, மேகங்கள் உரத்த குரலோடு மழையினை உகுக்க, நிலைமை தீவிரம் அடைந்தது. புள்ளினத்தின் கூடுகள் அதிர மரங்கள் பேயாட்டத்துடன் ஓலம் இடுகின்றது. சூழலில் சற்றே இருள் கவிகின்றது. மரங்களிலிருந்து, சுள்ளிகள் கிளைகளின் மோதல்களில் பாதையில் வீழ்கின்றன. மேலும் பல அடிகள் நடந்தேன். இதற்குள் ஓடையில் நீர் பிரவாகம் அதிகரிக்க புரண்டு ஓடும் பூக்கள் என்னைக் காப்பாற்று எனக் கை நீட்ட, முகத்தில் வேகத்துடன் அறையும் மழை என் கண்களை மூடச் செய்தது. மூடனானேன் - செய்வதறியா.
தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் நீரை வடித்துவிட்டு பின்பு கண்களை திறக்கும் போது மழையின் வேகம் குறைந்ததாக தோன்றியது. மேகங்களின் அடர்த்தி ஒரு சில இடங்களில் குறைந்து அதனுள் விரவிய கதிரவனின் ஒளி சிதறி, ஒரு புதிய ஒளியைத் தந்தது அச்சூழலுக்கு. இப்போது பாதை ஓரம் ஒதுங்கிய மலர்கள், மீண்டும் என்னுடன் நட்புறவாடியது. அதைக் கண்டு நான் வெட்டகமுற்றாலும், ஆசுவாசமானேன். மழை நின்றது.
பாதையை கடக்க, பாலம் ஏறி இறங்கினால் அங்கு மலரும் காலத்திற்கு முன்பே மலர்ந்துவிட்ட குல்மோகர் பூவின் இதழ்கள் சிவப்புத் தீயாய் சிதறி கிடந்தன. இயற்கை இப்போதும் தன்னை குதூகலமாகவே வைத்துக் கொண்டுள்ளது.
மழையில் நடப்போம். மலர்கள் அப்போதும் நமக்கு ஏதாவது சொல்லும்.
நன்றிகளுடன்
-பாரி
புதுமைப் பெண்கள் - 1 - கோமதி டீச்சர்
கி.பி.1950-களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
அந்த கல்வி பயிற்சியினூடே, ஹிந்தி கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அவர் ஹிந்தி ஆசிரியை ஆகின்றார். பழனியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நெய்க்காரப்பட்டி பள்ளியில் அவருக்கு பணி. அவரது கணவர், சிற்றுண்டிகள் செய்யும் வேலை செய்து வந்தார். அக்காலத்தில் குழந்தை பிறப்பு என்பது தாய்க்கும் சேய்க்கும் ஒரு வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகவே இருந்துள்ளது. இந்த போராட்டத்தில் அவருடைய சில வெற்றிகளாக இருப்பது, (எங்களது [மாணவர்களது] அன்பிற்கும் உரிய) இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும்தான். பிரசவித்த வேளையிலேயே இறந்து போன குழந்தைகள் அந்த இளம் ஆசிரியயை மிகவும் வாட்டியது. அவர் சில சமயம் கூறும் ஒரு சம்பவம்.
அவர் பள்ளிக்கு பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதையில்தான் சண்முகநதியும் இருக்கின்றது. அதன் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இடுகாடு அமைந்திருந்தது. அந்நதியை கடக்க உதவும் பாலத்தின் மேல் இருந்து பார்த்தால் அது நன்றாக கண்களுக்கு தெரியும். ஒரு சமயம் பிரசவம் ஆகி பின்னர் சில நாட்களில் பிறந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அக்குழந்தையின் ஈமக்கிரியையிலிருந்து நான்காம் நாள், அவர் பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. பள்ளிக்கு செல்லும் வழியில் பாலத்தை கடக்கும்போது ஏதோ ஒரு சிறு மண் மேட்டின் மீது அரைகுறையாக காய்ந்த மலர் மாலைகளை காண நேர்ந்தது. அப்போது, அங்கே புதைக்கப்பட்டு இருக்கும் அவரது குழந்தையின் நினைவு அவரை ஆட்கொண்டு, ஆறுதல் அளிக்க யாரும் இன்றி, தனியாக அங்கேயே உடைந்தார். கண்ணீர் ஆர்ப்பரிக்கும் வேளையில் துணை இல்லாத கொடுமையும், பிரிவின் சோகமும் அவரை கரைத்தது அப்போது. தன்நிலை மறந்து அவர் கரைந்த சம்பவம், ஒரு பெண் தாய்மை உணர்வை எவ்வளவு குரூரமாக எதிர் கொள்ள நேர்ந்தது என்பதை காட்டியது எனக்கு.
அவருக்கு அத்தகைய இழப்புகள் இருந்தாலும், அவரது மனம் தனது மூன்று குழந்தைகளின் நல்வாழ்விற்கும், தான் கற்றுக் கொடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கும் உழைக்க முனைந்தது. காலம் ஒரு ஓடை நீராக வழிந்தோடியது. இதனிடையே தனது ஆர்வத்தின் மூலமாக, ஹிந்தியில் பல நூல்களைப் பயின்றார். தக்ஷிண பாரத் கிந்தி ப்ரசார் சபாவின் பிரச்சாகராகவும் செயல்பட்டார். மாலை வேளைகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்க தனி வகுப்புகள் நடத்தினார். தாயைப் போல பிள்ளைகளும், ஹிந்தி கற்றனர் அன்னையிடமிருந்து. இதனிடையே அரசின் நிலைப்பாடுகளால் பள்ளியில் ஹிந்தி ஆசிரியை பணியை தொடர இயலாமல் போய்விட்டது. அச்சமயம் அவருக்கு உண்டான மன அழுத்தம், ஒரு வைராக்கியத்தையும் அவருள் உண்டாக்கியது.
1970களில் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஆங்கில வழி சிறுவர் பள்ளிகன் இருந்தன. ஆனால் அத்தகைய ஒரு பள்ளி பழனியில் இல்லாததை அவர் உணர்ந்தார். அத்தகைய பள்ளியை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் வலுப்பெற்றது. பள்ளிக்கு தேவையான இடத்திற்க்காக தனது வீட்டை சற்று மாற்றி அமைத்தார். பின்பு அவர் தனது அருமைத்தம்பி திரு. நாகராஜன் அவர்களின் உதவியோடு சிறுவர்கள் பள்ளியை ஆரம்பித்தார். வெறும் பள்ளி இறுதி வரை மட்டும் பயின்று விட்டு, கட்டுப்பட்டியான சமுதாயத்தில் ஓர் ஆசிரியப் பணி ஏற்று, பின்னர் அதுவும் பறிக்கப்பட்ட நிலையில், சற்றும் துவண்டு விடாமல், முன்னேற்ற பாதையில் சிந்தித்து வீறு நடைப் போட்டார். "பால முருகன் ஆங்கிலப் பள்ளி" ஆரம்பம் ஆனது. இதுதான் பழனி நகரின் முதல் ஆங்கில வழிப் பள்ளி. முதல் வருடம் மக்களுக்கு தயக்கங்கள் இருந்தாலும், மறு வருடம் முதல்நிறைய மாணக்கர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இவரது உழைப்பிற்கு நல்ல பலன் இருந்தது. இவரை தமிழ்நாடு சிறுவர் பள்ளிகள் நடத்துவோர் சங்கத்தில் முக்கிய உறுப்பினர் ஆக்குகின்றனர். இவர் கூச்சமும் பெருமிதமும் ஒரு சேர அந்த உறுப்பினர் நிலையை ஏற்கிறார்.( சில வருடங்களுக்கு முன்பாக அவரது சேவையை பாராட்டி அவருக்கு சிறந்த நிர்வாகிக்கான பரிசும், கௌரவமும் அச்சங்கத்திடமிருந்து கிடைத்தது). தனது கூரிய அறிவுத்திறன் மூலமும், தணியாத ஆர்வம் காரணமாகவும், அப்பள்ளி இன்று வரை வெற்றிகரமாக நடந்து வருகின்றது.
அப்பள்ளியை பற்றி சில வரிகள்: அப்பள்ளியில் நன்கொடை கிடையாது. கீழ் நடுத்தர மக்களும் பயில வாய்ப்பு தரும் வகையில் கட்டண அமைப்பு. நல்ல அன்பான, தகுதி வாய்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியைகள் நியமிப்பு. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பள்ளியை நடத்தி வந்தாலும், அவரின் இல்லம் ஓர் நடுத்தர வர்க்கத்தாரின் வீடு போல்தான் இருக்கும். அப்பள்ளியை நடத்த அவருக்கு பல சிக்கல்கள். ஆனால் அவரது நம்பிக்கையும் நேர்மையும் மட்டுமே அனைத்திலிருந்தும் அவரை காத்துள்ளது. இப்பொழுது அவரது பள்ளி ஓர் புதிய இடத்தில் அமைந்துள்ளது. அதை நிர்வகிக்க அவரின் மகனும், மருமகளும் அவருக்கு உதவுகின்றனர்.
இதை தவிர மாலை வகுப்புகளில் ஹிந்தி கற்கும் மாணவ மாணவியரின் கூட்டம். நான் அவரிடம்தான் ஹிந்தி கற்றேன். இது எனக்கு பின்னாட்களில் நல்ல பயன் தருகிறது. TIFR பயிற்சி பள்ளியின் போதும், ஆய்வுப் பணி நிமித்தமாக வட இந்தியா செல்லும் போதும், நான் கற்ற ஹிந்தி எனக்கு பல நட்புகளை பெற்றுத் தந்தது. அவரிடம் ஹிந்தி கற்ற பலர் இன்று ஹிந்தி ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.
அவரிடம் எனக்கு பிடித்த பல விஷயங்களில் சில: 1. எப்போதும் சிரித்த முகமாக இருப்பது. 2. மற்றவரிடம் பேசும் போது எதிராளி சொல்வதில் முழு கவனம் செலுத்துவது. 3. நம்பிக்கை உண்டாக்குவது. எனக்கு அவர் வாழ்வில் ஓர் முன்மாதிரி. அவருக்கு என் நன்றிகள்.
-அன்புடன்
பாலாஜி-பாரி
(நான் நீண்ட இடைவெளி விட்டதற்கு மன்னிக்கவும்: தொடர்ச்சிக்காக அனைத்தையும் தொகுத்து இட்டுள்ளேன்)
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
அந்த கல்வி பயிற்சியினூடே, ஹிந்தி கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அவர் ஹிந்தி ஆசிரியை ஆகின்றார். பழனியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நெய்க்காரப்பட்டி பள்ளியில் அவருக்கு பணி. அவரது கணவர், சிற்றுண்டிகள் செய்யும் வேலை செய்து வந்தார். அக்காலத்தில் குழந்தை பிறப்பு என்பது தாய்க்கும் சேய்க்கும் ஒரு வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகவே இருந்துள்ளது. இந்த போராட்டத்தில் அவருடைய சில வெற்றிகளாக இருப்பது, (எங்களது [மாணவர்களது] அன்பிற்கும் உரிய) இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும்தான். பிரசவித்த வேளையிலேயே இறந்து போன குழந்தைகள் அந்த இளம் ஆசிரியயை மிகவும் வாட்டியது. அவர் சில சமயம் கூறும் ஒரு சம்பவம்.
அவர் பள்ளிக்கு பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதையில்தான் சண்முகநதியும் இருக்கின்றது. அதன் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இடுகாடு அமைந்திருந்தது. அந்நதியை கடக்க உதவும் பாலத்தின் மேல் இருந்து பார்த்தால் அது நன்றாக கண்களுக்கு தெரியும். ஒரு சமயம் பிரசவம் ஆகி பின்னர் சில நாட்களில் பிறந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அக்குழந்தையின் ஈமக்கிரியையிலிருந்து நான்காம் நாள், அவர் பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. பள்ளிக்கு செல்லும் வழியில் பாலத்தை கடக்கும்போது ஏதோ ஒரு சிறு மண் மேட்டின் மீது அரைகுறையாக காய்ந்த மலர் மாலைகளை காண நேர்ந்தது. அப்போது, அங்கே புதைக்கப்பட்டு இருக்கும் அவரது குழந்தையின் நினைவு அவரை ஆட்கொண்டு, ஆறுதல் அளிக்க யாரும் இன்றி, தனியாக அங்கேயே உடைந்தார். கண்ணீர் ஆர்ப்பரிக்கும் வேளையில் துணை இல்லாத கொடுமையும், பிரிவின் சோகமும் அவரை கரைத்தது அப்போது. தன்நிலை மறந்து அவர் கரைந்த சம்பவம், ஒரு பெண் தாய்மை உணர்வை எவ்வளவு குரூரமாக எதிர் கொள்ள நேர்ந்தது என்பதை காட்டியது எனக்கு.
அவருக்கு அத்தகைய இழப்புகள் இருந்தாலும், அவரது மனம் தனது மூன்று குழந்தைகளின் நல்வாழ்விற்கும், தான் கற்றுக் கொடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கும் உழைக்க முனைந்தது. காலம் ஒரு ஓடை நீராக வழிந்தோடியது. இதனிடையே தனது ஆர்வத்தின் மூலமாக, ஹிந்தியில் பல நூல்களைப் பயின்றார். தக்ஷிண பாரத் கிந்தி ப்ரசார் சபாவின் பிரச்சாகராகவும் செயல்பட்டார். மாலை வேளைகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்க தனி வகுப்புகள் நடத்தினார். தாயைப் போல பிள்ளைகளும், ஹிந்தி கற்றனர் அன்னையிடமிருந்து. இதனிடையே அரசின் நிலைப்பாடுகளால் பள்ளியில் ஹிந்தி ஆசிரியை பணியை தொடர இயலாமல் போய்விட்டது. அச்சமயம் அவருக்கு உண்டான மன அழுத்தம், ஒரு வைராக்கியத்தையும் அவருள் உண்டாக்கியது.
1970களில் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஆங்கில வழி சிறுவர் பள்ளிகன் இருந்தன. ஆனால் அத்தகைய ஒரு பள்ளி பழனியில் இல்லாததை அவர் உணர்ந்தார். அத்தகைய பள்ளியை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் வலுப்பெற்றது. பள்ளிக்கு தேவையான இடத்திற்க்காக தனது வீட்டை சற்று மாற்றி அமைத்தார். பின்பு அவர் தனது அருமைத்தம்பி திரு. நாகராஜன் அவர்களின் உதவியோடு சிறுவர்கள் பள்ளியை ஆரம்பித்தார். வெறும் பள்ளி இறுதி வரை மட்டும் பயின்று விட்டு, கட்டுப்பட்டியான சமுதாயத்தில் ஓர் ஆசிரியப் பணி ஏற்று, பின்னர் அதுவும் பறிக்கப்பட்ட நிலையில், சற்றும் துவண்டு விடாமல், முன்னேற்ற பாதையில் சிந்தித்து வீறு நடைப் போட்டார். "பால முருகன் ஆங்கிலப் பள்ளி" ஆரம்பம் ஆனது. இதுதான் பழனி நகரின் முதல் ஆங்கில வழிப் பள்ளி. முதல் வருடம் மக்களுக்கு தயக்கங்கள் இருந்தாலும், மறு வருடம் முதல்நிறைய மாணக்கர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இவரது உழைப்பிற்கு நல்ல பலன் இருந்தது. இவரை தமிழ்நாடு சிறுவர் பள்ளிகள் நடத்துவோர் சங்கத்தில் முக்கிய உறுப்பினர் ஆக்குகின்றனர். இவர் கூச்சமும் பெருமிதமும் ஒரு சேர அந்த உறுப்பினர் நிலையை ஏற்கிறார்.( சில வருடங்களுக்கு முன்பாக அவரது சேவையை பாராட்டி அவருக்கு சிறந்த நிர்வாகிக்கான பரிசும், கௌரவமும் அச்சங்கத்திடமிருந்து கிடைத்தது). தனது கூரிய அறிவுத்திறன் மூலமும், தணியாத ஆர்வம் காரணமாகவும், அப்பள்ளி இன்று வரை வெற்றிகரமாக நடந்து வருகின்றது.
அப்பள்ளியை பற்றி சில வரிகள்: அப்பள்ளியில் நன்கொடை கிடையாது. கீழ் நடுத்தர மக்களும் பயில வாய்ப்பு தரும் வகையில் கட்டண அமைப்பு. நல்ல அன்பான, தகுதி வாய்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியைகள் நியமிப்பு. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பள்ளியை நடத்தி வந்தாலும், அவரின் இல்லம் ஓர் நடுத்தர வர்க்கத்தாரின் வீடு போல்தான் இருக்கும். அப்பள்ளியை நடத்த அவருக்கு பல சிக்கல்கள். ஆனால் அவரது நம்பிக்கையும் நேர்மையும் மட்டுமே அனைத்திலிருந்தும் அவரை காத்துள்ளது. இப்பொழுது அவரது பள்ளி ஓர் புதிய இடத்தில் அமைந்துள்ளது. அதை நிர்வகிக்க அவரின் மகனும், மருமகளும் அவருக்கு உதவுகின்றனர்.
இதை தவிர மாலை வகுப்புகளில் ஹிந்தி கற்கும் மாணவ மாணவியரின் கூட்டம். நான் அவரிடம்தான் ஹிந்தி கற்றேன். இது எனக்கு பின்னாட்களில் நல்ல பயன் தருகிறது. TIFR பயிற்சி பள்ளியின் போதும், ஆய்வுப் பணி நிமித்தமாக வட இந்தியா செல்லும் போதும், நான் கற்ற ஹிந்தி எனக்கு பல நட்புகளை பெற்றுத் தந்தது. அவரிடம் ஹிந்தி கற்ற பலர் இன்று ஹிந்தி ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.
அவரிடம் எனக்கு பிடித்த பல விஷயங்களில் சில: 1. எப்போதும் சிரித்த முகமாக இருப்பது. 2. மற்றவரிடம் பேசும் போது எதிராளி சொல்வதில் முழு கவனம் செலுத்துவது. 3. நம்பிக்கை உண்டாக்குவது. எனக்கு அவர் வாழ்வில் ஓர் முன்மாதிரி. அவருக்கு என் நன்றிகள்.
-அன்புடன்
பாலாஜி-பாரி
(நான் நீண்ட இடைவெளி விட்டதற்கு மன்னிக்கவும்: தொடர்ச்சிக்காக அனைத்தையும் தொகுத்து இட்டுள்ளேன்)
Friday, April 02, 2004
கோடை மழை
நேற்று கனத்த கோடை மழை. அத்தருணத்தில் சாலையின் இரு புறங்களில் இருக்கும் செம்மண்ணுடன் எனது இதயமும் கரைந்தது. அப்போது தோன்றிய மிகச்சிறிய தற்காலிக ஓடைகளில், வசந்த காலத்தை அறிவித்த மலர்கள் பயணித்து கொண்டிருந்தன, சில இலைகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு. இக்காட்சியை இயற்கை அவ்வப்போது படம் பிடித்து கொண்டிருந்தது வெட்டும் மின்னலின் துணை கொண்டு. மழையின் நீண்ட கால்கள் வீசிய திசை சார்பற்ற குளிர்ந்த காற்றுக்கு ஏற்றவாறு அழகிய நடனம் புரிந்தது.
அன்புடன்
பாரி
அன்புடன்
பாரி
Friday, March 26, 2004
ஓர் நட்சத்திரம் பிறந்தது
ஆயிரத்து ஐநூறு ஒளி ஆண்டுகளுக்கப்பால் ஒர் நட்சத்திரம் பிறந்துள்ளது. இதை ஜே மெக்நெய்ல் என்ற ஓர் அமெச்சூர் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். அவர் தனது எளிமையான 3 இன்ச் தொலை நோக்கியை கொண்டு, தனது வீட்டின் கொல்லையில் இருந்து ஆகாயத்தை அலசியுள்ளார். அப்போது வேட்டைக்காரன் என்ற நட்சத்திர கூட்டத்தில் புதிய ஒளி தெரிவதை பதிவு செய்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக, ஓர் ஒளி தெரிவதை சரியாக அடையாளம் கண்டு இணையத்தின் மூலம் புரஃபோஷனல்ஸை தொடர்பு கொண்டு இச்செய்தியை தெரிவித்துள்ளார்.
அதன் பின் உலகின் தலைசிறந்த வானவியல் மையங்கள் அவரது கண்டுபிடிப்பை பாராட்டி உள்ளன. அந்த நட்சத்திரத்திற்கு, மெக்னேய்ல் நெபுலா என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு சுட்டவும்
அதன் பின் உலகின் தலைசிறந்த வானவியல் மையங்கள் அவரது கண்டுபிடிப்பை பாராட்டி உள்ளன. அந்த நட்சத்திரத்திற்கு, மெக்னேய்ல் நெபுலா என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு சுட்டவும்
Tuesday, March 23, 2004
பாரதி கண்ட புதுமைப் பெண்கள்: கோமதி டீச்சர் - 1
கி.பி.1940-50 களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
(-தொடரும்)
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
(-தொடரும்)
Monday, March 08, 2004
பெண்கள் தின வாழ்த்துக்கள்!!!
இன்று பெண்கள் தினம். இந்த தினத்தை ஒட்டி என்னைக் கவர்ந்த பெண்கள் என்ற தொடர் எழுத முடிவு செய்துள்ளேன். ஆணாதிக்க சமுதாயத்திலும் திறம் பட சாதனைகள் பல செய்த நான் சந்தித்த பெண்மணிகள் பற்றி இங்கே எழுத உள்ளேன். முதலில் நமக்கு அறிமுகமாவது, எனக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்த கோமதி டீச்சர் அவர்கள்.
இத்தொடர் சற்று கால இடைவெளியுடன் வரும்...... பணி அழுத்தம் காரணம்.
அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!!
அன்புடன்
-பாரி
இத்தொடர் சற்று கால இடைவெளியுடன் வரும்...... பணி அழுத்தம் காரணம்.
அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!!
அன்புடன்
-பாரி
Wednesday, March 03, 2004
தமிழ் பற்றி UNESCO அறிக்கை
திரு சுரேஷ் அவர்கள் மரத்தடியில் இட்டுள்ள அறிக்கையின் சுட்டி.
யுனஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்த திரு. மணவை முஸ்தாபா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி சுட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் பற்றி UN என்ன கூறி உள்ளது என்ற விபரம் உள்ளது.
யுனஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்த திரு. மணவை முஸ்தாபா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி சுட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் பற்றி UN என்ன கூறி உள்ளது என்ற விபரம் உள்ளது.
Saturday, February 28, 2004
நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்....-2)
அவர் ஒரு நிதானத்துடன் ஒரு மரத்தை அண்ணாந்து பார்ப்பார். பின்பு ஒரு கையை அதன் மேல் வைத்து, அழகான லாவகத்துடன் தனது கால்களில் நாரால் ஆன பெல்ட்டை மாட்டி கொள்வார். அதன் பின் அவர் வலது கையை மரத்தை அணைத்தவாறு பிடித்துக் கொண்டு, இடது கையை மரத்தில் அழுத்தி, நாரால் ஆன பிணைப்பின் உதவியோடு கால்களால் மரத்தை கவ்விக் கொண்டு ஏறுவார். அது ஓர் பெரிய நேர்த்தியான செயல். அவர் அதை அனாயசமாக செய்வார். மர உச்சியை அடைந்தவுடன், கைகளால் காய்ந்த மட்டைகளை பிய்த்து போடுவார். வீட்டில் இருக்கும் தட்டி வழியாக அண்ணாந்து பார்க்க அவ்வளவு பரபரப்பாக இருக்கும். அதன் பின், தேங்காய வெட்டி மேலே இருந்து போடுவார். அப்ப கீழே நிற்கும் அவரது மகனோ அல்லது மனைவியோ அந்த வழி செல்பவர்களை உஷார் செய்வர். இவ்வாறு கவனித்து செய்யும் பொழுது கூட எங்களது காம்பௌண்ட் அருகில் உள்ள (ஜெயந்தி அக்கா) வீட்டில் தேங்காய் விழுந்து அவரது தாயாரின் மலையாளம் கலந்த தமிழ் வசை சொற்கள் அசரீரியாக வரும். இதனிடையே, கொஞ்சம் பச்சை மட்டைகளையும் மேலேயிருந்து தள்ளுவார். இவ்வாறு அனைத்து மரங்களையும் ஒரு ரவுண்ட் வந்த பிறகு பறித்த தேங்காய்களை மூட்டையிலிட்டு எடுத்து செல்வார்.
இந்த நிகழ்வுகளுக்கு இடையில், மேலேயிருந்து சிதறி இருக்கும் தென்னங் குரும்பைகள், தென்னம் மட்டைகள் ஆகியன வாண்டுகளின் உற்சாகத்தை கூட்டும். தென்னங்குரும்பைகளை நாங்கள் குரும்பைக்காய் என்போம். அது பல சமயங்களில் எங்களுக்கு Ball -ஆக மாறி கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் குரும்பைக்காயை கொண்டு கிலுகிலுப்பை செய்யலாம். குரும்பக்காயின் தொப்பி பகுதியை நீக்கி மென்மையான முன் பகுதியை தரையில் தேய்த்து தட்டை ஆக்கி கொள்ள வேண்டும். ஈர்க்குச்சி ஒன்று எடுத்து அதை வளைத்து தட்டை பகுதியில் U வடிவத்தில் அமைத்து செருகி கொள்ள வேண்டும். மேலும் ஓர்க் குச்சியை மையத்தில் செருகிக் கொள்ள வேண்டும். இப்போது அது நாமம் மாதிரி தோன்றும். அதற்கு செங்குத்தாக இரு குச்சிகளை செருகி சுழற்றும் போது, நடுவில் இருக்கும் குச்சி முன்னும் பின்னும் அசைந்து கடக், கடக் என்று சீராய் ஒலி எழுப்பும். கிலுகிலுப்பை தயார். தென்னம் மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி, சிறிது செதுக்கி Bat-ஆக மாற்றும் ஓர் கலையும் நாங்கள் கற்றோம். மட்டையின் மேல் இருவர் உட்கார மேலும் இருவர் அதை இழுத்து செல்லும் வண்டி விளையாட்டும் மிக்க களிப்பை தரும். பச்சை தென்னம் மட்டைகளிலிருந்து ஓலைகளை பறித்து அதில் குச்சிக்கு அருகில் நுனியில் இருந்து அடி வரை கீறி விட்டு கடைசியில் தொங்குமாறு செய்து, அதை பின்னி ஒரு பாம்பு போல் செய்வோம். தென்னை ஓலைகளில் இருந்து ஊது குழல் செய்வதும் எளிது. ராக்கெட் மாதிரி அந்த ஓலைகளை பறக்க விடவும் செய்யலாம். எங்களுக்குள் இருக்கும் குரங்கு விழித்து எழுந்து விட்டால், தென்னை மரத்தில் ஒரு கால் பங்கு உயரம் ஏறுவோம்.
இவ்வாறு தென்னை மரத்தின் பயன்கள் பல. (தென்னை மரத்தின் பயன்கள் என்ன? என்ற பரிட்சை கேள்விக்கு நியாயமான பதில் இதுதான் என்பது அடியேனின் அக்கால எண்ணம்).
காம்பௌண்டை பிரித்து விற்க வேண்டிய ஓர் சூழ்நிலையில், அம்மரத்துக்காரர் வந்தார். அவருடன் மேலும் சில நபர்கள் வந்தனர். அவர் ஒரு சில மரங்களை கைகாட்டி அவர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் பார்த்தது அம்மரங்களின் வீழ்ச்சியை. நான்கு மரங்களும் ஓரிரு நாட்களில் சாய்ந்தன. அப்போது நான் ஒரு துயரமும் இன்றி அதை வேடிக்கை பார்க்க அசாத்திய தைரியம் அடைந்தவனானேன். அந்த தென்னை மரத்துக்காரரும் அவ்வாறே எண்ணியிருக்க கூடும்.
(தென்னை மரத்துக்காரர் - முற்றும்)
- பாரி
இந்த நிகழ்வுகளுக்கு இடையில், மேலேயிருந்து சிதறி இருக்கும் தென்னங் குரும்பைகள், தென்னம் மட்டைகள் ஆகியன வாண்டுகளின் உற்சாகத்தை கூட்டும். தென்னங்குரும்பைகளை நாங்கள் குரும்பைக்காய் என்போம். அது பல சமயங்களில் எங்களுக்கு Ball -ஆக மாறி கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் குரும்பைக்காயை கொண்டு கிலுகிலுப்பை செய்யலாம். குரும்பக்காயின் தொப்பி பகுதியை நீக்கி மென்மையான முன் பகுதியை தரையில் தேய்த்து தட்டை ஆக்கி கொள்ள வேண்டும். ஈர்க்குச்சி ஒன்று எடுத்து அதை வளைத்து தட்டை பகுதியில் U வடிவத்தில் அமைத்து செருகி கொள்ள வேண்டும். மேலும் ஓர்க் குச்சியை மையத்தில் செருகிக் கொள்ள வேண்டும். இப்போது அது நாமம் மாதிரி தோன்றும். அதற்கு செங்குத்தாக இரு குச்சிகளை செருகி சுழற்றும் போது, நடுவில் இருக்கும் குச்சி முன்னும் பின்னும் அசைந்து கடக், கடக் என்று சீராய் ஒலி எழுப்பும். கிலுகிலுப்பை தயார். தென்னம் மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி, சிறிது செதுக்கி Bat-ஆக மாற்றும் ஓர் கலையும் நாங்கள் கற்றோம். மட்டையின் மேல் இருவர் உட்கார மேலும் இருவர் அதை இழுத்து செல்லும் வண்டி விளையாட்டும் மிக்க களிப்பை தரும். பச்சை தென்னம் மட்டைகளிலிருந்து ஓலைகளை பறித்து அதில் குச்சிக்கு அருகில் நுனியில் இருந்து அடி வரை கீறி விட்டு கடைசியில் தொங்குமாறு செய்து, அதை பின்னி ஒரு பாம்பு போல் செய்வோம். தென்னை ஓலைகளில் இருந்து ஊது குழல் செய்வதும் எளிது. ராக்கெட் மாதிரி அந்த ஓலைகளை பறக்க விடவும் செய்யலாம். எங்களுக்குள் இருக்கும் குரங்கு விழித்து எழுந்து விட்டால், தென்னை மரத்தில் ஒரு கால் பங்கு உயரம் ஏறுவோம்.
இவ்வாறு தென்னை மரத்தின் பயன்கள் பல. (தென்னை மரத்தின் பயன்கள் என்ன? என்ற பரிட்சை கேள்விக்கு நியாயமான பதில் இதுதான் என்பது அடியேனின் அக்கால எண்ணம்).
காம்பௌண்டை பிரித்து விற்க வேண்டிய ஓர் சூழ்நிலையில், அம்மரத்துக்காரர் வந்தார். அவருடன் மேலும் சில நபர்கள் வந்தனர். அவர் ஒரு சில மரங்களை கைகாட்டி அவர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் பார்த்தது அம்மரங்களின் வீழ்ச்சியை. நான்கு மரங்களும் ஓரிரு நாட்களில் சாய்ந்தன. அப்போது நான் ஒரு துயரமும் இன்றி அதை வேடிக்கை பார்க்க அசாத்திய தைரியம் அடைந்தவனானேன். அந்த தென்னை மரத்துக்காரரும் அவ்வாறே எண்ணியிருக்க கூடும்.
(தென்னை மரத்துக்காரர் - முற்றும்)
- பாரி
Labels:
நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்
Thursday, February 26, 2004
என் வேதனைக் கால குறிப்புகள் - 2
முகில்கள் தோற்குமோ
கவின் மிகு பிம்பங்களில்....
மலைகள் தோற்குமோ
அழுத்தமான இருப்புகளில்...
மலர்கள் தோற்குமோ
பரவச ரசனைகளில்....
ஒளிகற்றை தோற்குமோ
தேடல்களின் ஆழத்தில்...
உணர்வுகள் தோற்குமோ
உயிர் துடிக்கும் பிரிவின் அக்கணத்தில்...
(காற்றிலே கலந்து இருந்தது
பெண்டத்தால் வாசனை குளிர்ச்சியாய்)
- பாரி
கவின் மிகு பிம்பங்களில்....
மலைகள் தோற்குமோ
அழுத்தமான இருப்புகளில்...
மலர்கள் தோற்குமோ
பரவச ரசனைகளில்....
ஒளிகற்றை தோற்குமோ
தேடல்களின் ஆழத்தில்...
உணர்வுகள் தோற்குமோ
உயிர் துடிக்கும் பிரிவின் அக்கணத்தில்...
(காற்றிலே கலந்து இருந்தது
பெண்டத்தால் வாசனை குளிர்ச்சியாய்)
- பாரி
Thursday, February 19, 2004
அறிவுக் களஞ்சியம் www.thamizham.net
இன்று ஒரு இணைய தளத்தை நண்பர் தங்கமணி சுட்டிக்காட்ட நான் பார்த்தேன். அதில் ஓர் ஆசிரியரின் சீரிய பணியை கண்டு வியந்தேன். இவர் தற்கால தமிழ் இலக்கியத்தின் ஓர் கருவூலம். இவரை பற்றி நம் வலைபதிவர்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. ஆகையால் இந்த உடனடி செய்தி.
திரு. நடேசன் அவர்கள், பொள்ளாச்சியில் இருந்து கொண்டு இந்த அருமையான தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது நூலகத்தில் இருக்கும் சிற்றிதழ்-களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மேலும் போற்றத் தக்கது. அவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஓர் தீவிரம். அனைவரையும் நாம் போற்றுவோமாக.
இவர்களின் பணி ஓர் கூட்டு முயற்சியாய் நடை பெறுகின்றது. பல அரிய புத்தகங்களும், தமிழ் சார்ந்த பல தகவல்களும் சுவாரசியம் கொள்ள செய்கின்றன. இவர்கள் இதை மின் ஊடகத்தில் மாற்றவும் முயற்சி செய்கின்றனர். இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
அன்புடன்
-பாரி
திரு. நடேசன் அவர்கள், பொள்ளாச்சியில் இருந்து கொண்டு இந்த அருமையான தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது நூலகத்தில் இருக்கும் சிற்றிதழ்-களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மேலும் போற்றத் தக்கது. அவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஓர் தீவிரம். அனைவரையும் நாம் போற்றுவோமாக.
இவர்களின் பணி ஓர் கூட்டு முயற்சியாய் நடை பெறுகின்றது. பல அரிய புத்தகங்களும், தமிழ் சார்ந்த பல தகவல்களும் சுவாரசியம் கொள்ள செய்கின்றன. இவர்கள் இதை மின் ஊடகத்தில் மாற்றவும் முயற்சி செய்கின்றனர். இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
அன்புடன்
-பாரி
நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்துக்காரர்)
கடந்த பல வாரங்களாக மற்ற விஷயங்களில் சென்ற கவனம், இன்று தான் இந்த தொடருக்கு திரும்பியது.
எங்க காம்பௌண்ட்ல பதினோரு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையிலோ என்னவோ, பதினொரு தென்னை மரங்கள் இருந்தன. ஒரு அடர்த்தியில்லா தென்னந்தோப்பு. இதை தவிர ஒரு பெரிய அடுக்கு - செம்பருத்தி செடி (புதர்?), அழகிய மஞ்சள் பூக்கள் தரும் மந்தாரைச் செடி, குட்டியா ஒரு செம்பருத்தி செடி, கிணற்றடி அருகிலே வசந்தி அக்காவின் முயற்சியில் தோன்றிய சில வாழை மரங்கள், என்று கலகலப்பாக இருக்கும். நான் மூன்றாவது படிக்கும் போது, எனது பெரியம்மாவின் கடைசி மகன் (என்னையும் சேர்த்துக் கொண்டு), சோமு என்ற நண்பரின் வீட்டில் இருந்து, ஜீன்யா செடியை கொண்டு வந்தான். இந்த பூக்கள் பல வண்ணங்களில் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நான் இதுவரை பல பூக்களை (பெயர் தெரியாவிட்டாலும்) கண்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் ஜீன்யா பூ எனக்கு சொல்ல முடியாத அளவு பெரு மகிழ்ச்சி தரும். இப்போது பார்த்தாலும்.... (JNC-விடுதிக்கு அருகில் இதை நான் காலையில் தினமும் பார்க்கின்றேன்). இதை தவிர, சேனைக் கிழங்கு எனது தந்தையின் முயற்சியால் அவ்வப்போது இடப்படும். (சேனைக் கிழங்கு செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்: வெளிர் பச்சையில் ...)
சரி. விசயத்திற்கு வருவோம். இந்த தென்னை மரங்களில், இரண்டு "செவ்வெளநீ" தரும். இந்த இரண்டில் ஒன்று பாலா மாமியின் வீட்டினுள் வளர்ந்து கூரை வழியாக வெளி வரும். கூரை சீமை ஓடால் வேயப்பட்டிருக்கும். அந்த மரத்தில் தென்னம் மட்டைகள் காய்ந்து போனால், பாலா மாமிக்கு டென்ஷன் அதிகமாகிவிடும். "இப்படியே இருந்தாக்க, காத்தடிச்சு மட்டை விழுந்து ஓடுகள பொறுக்கணும். இந்த விஷயத்தை ராஜாமணி காதில போட்டுடணும்" என்பார். (ராஜாமணி என்பவர், எங்க house ownerin ரின் மூத்த புதல்வர்). இவரை தவிர மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் எப்போதாவது அகஸ்மத்தாக விழும் ஒரு தென்னம் மட்டை, ஒரு தேங்காய் இவைகள் வாண்டுகளுக்கு ஒரு களிப்பை உண்டாக்கும். விழும் தேங்காய்களை கைப்பற்ற ஒரு பெரிய கலாட்டாவே நடக்கும். இவ்வாறு நடக்கும் கலாட்டாவில் பெற்ற சில வெற்றிகள் எனக்கு, "தேங்காய்" என்ற ஓர் சிறப்பு பட்டத்தை (!) எனது வீட்டாரிடம் பெற்று தந்தது.
பாலாமாமியின் வார்த்தைகள் சிறிது நாட்களில் வேலை செய்யும். நாரால் (என்ன நார்?) ஆன ஒரு V-பெல்-டை தோளில் எடுத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு அரிவாளை செருகி, திறந்த மேலுடம்புடன் அவர் வருவார். அதாங்க நம்ம தென்ன மரத்துக்காரர். எப்பயாவது விழும் தென்னை மட்டைக்கே குதியாட்டம் போடும் நாங்க, அவரக் கண்டதும் பயங்கர ஜாலி ஆயிடுவோம். ஆனா வழக்கம் போல பெரியவங்க பிரச்சனை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க! அவன் போனப்புறமா வந்து விளையாடலாம்".
(தென்னை மரத்துக்காரர் - தொடரும்)
எங்க காம்பௌண்ட்ல பதினோரு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையிலோ என்னவோ, பதினொரு தென்னை மரங்கள் இருந்தன. ஒரு அடர்த்தியில்லா தென்னந்தோப்பு. இதை தவிர ஒரு பெரிய அடுக்கு - செம்பருத்தி செடி (புதர்?), அழகிய மஞ்சள் பூக்கள் தரும் மந்தாரைச் செடி, குட்டியா ஒரு செம்பருத்தி செடி, கிணற்றடி அருகிலே வசந்தி அக்காவின் முயற்சியில் தோன்றிய சில வாழை மரங்கள், என்று கலகலப்பாக இருக்கும். நான் மூன்றாவது படிக்கும் போது, எனது பெரியம்மாவின் கடைசி மகன் (என்னையும் சேர்த்துக் கொண்டு), சோமு என்ற நண்பரின் வீட்டில் இருந்து, ஜீன்யா செடியை கொண்டு வந்தான். இந்த பூக்கள் பல வண்ணங்களில் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நான் இதுவரை பல பூக்களை (பெயர் தெரியாவிட்டாலும்) கண்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் ஜீன்யா பூ எனக்கு சொல்ல முடியாத அளவு பெரு மகிழ்ச்சி தரும். இப்போது பார்த்தாலும்.... (JNC-விடுதிக்கு அருகில் இதை நான் காலையில் தினமும் பார்க்கின்றேன்). இதை தவிர, சேனைக் கிழங்கு எனது தந்தையின் முயற்சியால் அவ்வப்போது இடப்படும். (சேனைக் கிழங்கு செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்: வெளிர் பச்சையில் ...)
சரி. விசயத்திற்கு வருவோம். இந்த தென்னை மரங்களில், இரண்டு "செவ்வெளநீ" தரும். இந்த இரண்டில் ஒன்று பாலா மாமியின் வீட்டினுள் வளர்ந்து கூரை வழியாக வெளி வரும். கூரை சீமை ஓடால் வேயப்பட்டிருக்கும். அந்த மரத்தில் தென்னம் மட்டைகள் காய்ந்து போனால், பாலா மாமிக்கு டென்ஷன் அதிகமாகிவிடும். "இப்படியே இருந்தாக்க, காத்தடிச்சு மட்டை விழுந்து ஓடுகள பொறுக்கணும். இந்த விஷயத்தை ராஜாமணி காதில போட்டுடணும்" என்பார். (ராஜாமணி என்பவர், எங்க house ownerin ரின் மூத்த புதல்வர்). இவரை தவிர மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் எப்போதாவது அகஸ்மத்தாக விழும் ஒரு தென்னம் மட்டை, ஒரு தேங்காய் இவைகள் வாண்டுகளுக்கு ஒரு களிப்பை உண்டாக்கும். விழும் தேங்காய்களை கைப்பற்ற ஒரு பெரிய கலாட்டாவே நடக்கும். இவ்வாறு நடக்கும் கலாட்டாவில் பெற்ற சில வெற்றிகள் எனக்கு, "தேங்காய்" என்ற ஓர் சிறப்பு பட்டத்தை (!) எனது வீட்டாரிடம் பெற்று தந்தது.
பாலாமாமியின் வார்த்தைகள் சிறிது நாட்களில் வேலை செய்யும். நாரால் (என்ன நார்?) ஆன ஒரு V-பெல்-டை தோளில் எடுத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு அரிவாளை செருகி, திறந்த மேலுடம்புடன் அவர் வருவார். அதாங்க நம்ம தென்ன மரத்துக்காரர். எப்பயாவது விழும் தென்னை மட்டைக்கே குதியாட்டம் போடும் நாங்க, அவரக் கண்டதும் பயங்கர ஜாலி ஆயிடுவோம். ஆனா வழக்கம் போல பெரியவங்க பிரச்சனை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க! அவன் போனப்புறமா வந்து விளையாடலாம்".
(தென்னை மரத்துக்காரர் - தொடரும்)
Labels:
நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்
Wednesday, February 18, 2004
கல்லுக்குள் ஈரம்
ஐந்து நாரைகள்....
புற்களின் மேல் குட்டி குட்டி
வெண் மேகங்களாய்.......
உள்ளங்கைகளின் செந்நிறத்தில்
அதன் அலகுகள் மின்ன....
ஒடிந்து விடுமோ அதன் கால்கள்
என அஞ்ச வைத்து
ஒய்யாரமாய் அது நகர்வதென்ன...
வட்ட விழி கிட்டே பார்த்து
வான் வழி அவை பறக்க,
சுட்டதென்னவோ அவந்தான்.
ஆனாலும் மகிழ்ச்சி அவனுள்
நம்மால் நான்கு தப்பியதே......
-பாரி
புற்களின் மேல் குட்டி குட்டி
வெண் மேகங்களாய்.......
உள்ளங்கைகளின் செந்நிறத்தில்
அதன் அலகுகள் மின்ன....
ஒடிந்து விடுமோ அதன் கால்கள்
என அஞ்ச வைத்து
ஒய்யாரமாய் அது நகர்வதென்ன...
வட்ட விழி கிட்டே பார்த்து
வான் வழி அவை பறக்க,
சுட்டதென்னவோ அவந்தான்.
ஆனாலும் மகிழ்ச்சி அவனுள்
நம்மால் நான்கு தப்பியதே......
-பாரி
Friday, February 13, 2004
என் வேதனைக் கால குறிப்புகள்...
என் நண்பா!!
நமக்கு மிகுந்த துக்கம்
தரக்கூடிய
ஓர் செய்தியை அறிவிக்கிறேன்.
தெளிவோடும்,
முரட்டு தைரியத்தோடும்.
"நம்மால் இனி அன்றைய
+2 மாணாக்கர்களாய்
மாறவே இயலாது".
அறிவின் தெளிவை நோக்கி
உள்ளொளியுடன் எரியும் சக்தியுடன்
வானத்தின் கீழ் அனைத்தும்
புதிதாய் புத்துணர்ச்சியாய்
இருந்தகாலம் இனி
இறந்த காலம்....
புகுத்தப்பட்ட கல்வியால்,
அறிந்த மற்றவைகளால்,
இது இப்படித்தான் என
பாழாய்ப்போன பயனற்ற "அறிவு"
நமக்கு உறுத்தி....
புதிர் காணும் சக்தியென்னும்
ஆக்கையை தொலைவில் நிறுத்தி
நம்மை அண்டத்தின்
அணைப்பில் அண்டவிடாமல்......
அறிவே நீயும் அழிவுதான்.......
-பாரி
நமக்கு மிகுந்த துக்கம்
தரக்கூடிய
ஓர் செய்தியை அறிவிக்கிறேன்.
தெளிவோடும்,
முரட்டு தைரியத்தோடும்.
"நம்மால் இனி அன்றைய
+2 மாணாக்கர்களாய்
மாறவே இயலாது".
அறிவின் தெளிவை நோக்கி
உள்ளொளியுடன் எரியும் சக்தியுடன்
வானத்தின் கீழ் அனைத்தும்
புதிதாய் புத்துணர்ச்சியாய்
இருந்தகாலம் இனி
இறந்த காலம்....
புகுத்தப்பட்ட கல்வியால்,
அறிந்த மற்றவைகளால்,
இது இப்படித்தான் என
பாழாய்ப்போன பயனற்ற "அறிவு"
நமக்கு உறுத்தி....
புதிர் காணும் சக்தியென்னும்
ஆக்கையை தொலைவில் நிறுத்தி
நம்மை அண்டத்தின்
அணைப்பில் அண்டவிடாமல்......
அறிவே நீயும் அழிவுதான்.......
-பாரி
Saturday, February 07, 2004
பிளாட் ஃபாரம்
"அங்கனே பாரு புள்ள....
மெயின் ரோட்டுக்கு மத்தியில...
வரிசையா நட்ட மரம் அழகு தாம்லே?"
அப்பா சொல்ல
அதை பார்த்தாள் அச்சிறுமி.
"அட..இதா...ரோட்ல இறங்காத புள்ள..
பிளாட்ஃபாரம்லயே நட..."
"அதெனங்கையா பிளாட்ஃபாரம்?"
"நாம நடக்குதோம் இல்ல? அத்யான்"
"மக்கா... நடக்க என்னாமா
கட்டிருக்காக! பட்டணம்னா சும்மாவா?"
அடிச்ச மழையில் பிஞ்ச கூரை
ஒதுக்கியிருந்தது வேறு சிலரை
பிளாட்ஃபார பாலித்தீன் கூடாரத்தில்.
அதையும் கண்டாள் அச்சிறுமி!
அகலமான கண்கள் மேலும் அகல கேட்டாள்
"அய்யா! இவுகளை யாரு இங்கே நட்டது?"
-பாரி
மெயின் ரோட்டுக்கு மத்தியில...
வரிசையா நட்ட மரம் அழகு தாம்லே?"
அப்பா சொல்ல
அதை பார்த்தாள் அச்சிறுமி.
"அட..இதா...ரோட்ல இறங்காத புள்ள..
பிளாட்ஃபாரம்லயே நட..."
"அதெனங்கையா பிளாட்ஃபாரம்?"
"நாம நடக்குதோம் இல்ல? அத்யான்"
"மக்கா... நடக்க என்னாமா
கட்டிருக்காக! பட்டணம்னா சும்மாவா?"
அடிச்ச மழையில் பிஞ்ச கூரை
ஒதுக்கியிருந்தது வேறு சிலரை
பிளாட்ஃபார பாலித்தீன் கூடாரத்தில்.
அதையும் கண்டாள் அச்சிறுமி!
அகலமான கண்கள் மேலும் அகல கேட்டாள்
"அய்யா! இவுகளை யாரு இங்கே நட்டது?"
-பாரி
Saturday, January 31, 2004
No Sound Horn
மைய நூலகத்தின் முன்னமைந்த சாலை
இரு மருங்கிலும் பறவைகளும் அடர்ந்த மரங்கள்
படித்த விஷயத்தை சுமந்தபடி சாலையில் நான்
கீ.ய்...கீச்..கீச்ச்....கீக்கீ..கீய்....கீச்....
ஒரே நேரத்தில் பறவைகளின் ஒலி
எண்ணத்தின் -inertia விலிருந்து என்னை மீட்டது
சற்றே நிமிர்ந்த என் கண்களில் பட்டது
No Sound Horn அறிவிப்பு பலகை
-பாரி
(பின் குறிப்பு: -inertia என்ற பதத்திற்கு தமிழ் வார்த்தை சொல்லி உதவுங்கள்)
இரு மருங்கிலும் பறவைகளும் அடர்ந்த மரங்கள்
படித்த விஷயத்தை சுமந்தபடி சாலையில் நான்
கீ.ய்...கீச்..கீச்ச்....கீக்கீ..கீய்....கீச்....
ஒரே நேரத்தில் பறவைகளின் ஒலி
எண்ணத்தின் -inertia விலிருந்து என்னை மீட்டது
சற்றே நிமிர்ந்த என் கண்களில் பட்டது
No Sound Horn அறிவிப்பு பலகை
-பாரி
(பின் குறிப்பு: -inertia என்ற பதத்திற்கு தமிழ் வார்த்தை சொல்லி உதவுங்கள்)
நான், திரு மற்றும் ஓர் சிறுமி
" அங்கிள்! நீவு left Right!" அன்புக் கட்டளை ஒன்று. "அங்கிள் 'மார்ச் ஆன்' கேளி!" சிறிதும் தாமதிக்காமல் இன்னொரு உத்தரவு. அதன் பின் "...ட்விங்கிள்..ட்விங்கிள்..." என்று ஓர் ரைம். நான் அதை சொல்ல முயலும் போதே " a d f e g k s y....." என்று Random-ஆக எழுத்துக்களை மழலையிட்டாள்.
எப்படி துரித கதி ஓட்டம் செல்ல வேண்டும் என்று திரு எனக்கு டெமோ செய்து காட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் இருந்த இடம் ஓர் பரந்த மைதானம். அச்சமயம் எனக்கு முன் அந்த சிறுமி ஓடி வந்து நின்றாள். அவளது அலை போன்ற ஆர்வம் எனது கவனத்தை அவள் பால் ஈர்த்தது. அவளிடம் இருந்த மலர்ச்சியான சக்தி எங்களது பயிற்சியை நிறுத்த செய்து அவளது விளையாட்டில் பங்கேற்க செய்தது. ஓர் நிறைவுடன் நாங்கள் அவளது சொற்களுக்கு கட்டுபடத் தொடங்கினோம்.
அவளது மொழி non-linear ஆக இருந்தது. லா. சா. ரா-வின் எழுத்து உள்ளுக்குள் உண்டாக்கும் சுழற்சியை உண்டாக்கியது அவள் மொழி. பழகிய தளத்தின் ஒரு தரிசனம் அவரது எழுத்து. ஆனால் அச்சிறுமியோ அவளது எண்ண வடிவமைப்பிற்கு முழு குறியீடாக இருந்தாள். சாரு-வின் "Zero-degree"(முற்பகுதி) முற்றிலும் தளம் இழக்கச் செய்யும் தன்மை உடையது. ஆனால் அவளோ எனக்கு தெரியாத ஓர் தளத்தை அறிமுகம் செய்தாள்.
எனது "நான்" அவளது தளத்தை புரிந்து கொள்வது எளிது என்றே வலுவாக கூறி அழுத்தியது. அவளது "அஜ்ஜி" தொலைவில் சென்று அமர்ந்து விட அங்கு செல்வது இக்குழந்தையின் நோக்கமாக இருக்கும் என்று என் "நான்" கூற, "அஜ்ஜி-யாந்த்ர கோகன்ன பா", என்று கூறி, அஜ்ஜி-(அதாவது பாட்டி) இருந்த இடத்தை நோக்கி அழைத்தேன். வலது கையின் கட்டை விரலை தாடையின் கீழ் வைத்து என்னுடன் காய் விட்டது. அச்சிறுமி என்னை நிராகரித்தது. எப்பொழுதும் போல் எனது "நான்"-க்கு ஓர் குத்து விழுந்தது. அக்கணத்தில் என்னுள் நிறைந்து இருந்தது அச்சிறுமியின் இனிமையான நினைவு மட்டும். எதை அறிய நான் எங்கு செல்வேன்?.
-பாரி
எப்படி துரித கதி ஓட்டம் செல்ல வேண்டும் என்று திரு எனக்கு டெமோ செய்து காட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் இருந்த இடம் ஓர் பரந்த மைதானம். அச்சமயம் எனக்கு முன் அந்த சிறுமி ஓடி வந்து நின்றாள். அவளது அலை போன்ற ஆர்வம் எனது கவனத்தை அவள் பால் ஈர்த்தது. அவளிடம் இருந்த மலர்ச்சியான சக்தி எங்களது பயிற்சியை நிறுத்த செய்து அவளது விளையாட்டில் பங்கேற்க செய்தது. ஓர் நிறைவுடன் நாங்கள் அவளது சொற்களுக்கு கட்டுபடத் தொடங்கினோம்.
அவளது மொழி non-linear ஆக இருந்தது. லா. சா. ரா-வின் எழுத்து உள்ளுக்குள் உண்டாக்கும் சுழற்சியை உண்டாக்கியது அவள் மொழி. பழகிய தளத்தின் ஒரு தரிசனம் அவரது எழுத்து. ஆனால் அச்சிறுமியோ அவளது எண்ண வடிவமைப்பிற்கு முழு குறியீடாக இருந்தாள். சாரு-வின் "Zero-degree"(முற்பகுதி) முற்றிலும் தளம் இழக்கச் செய்யும் தன்மை உடையது. ஆனால் அவளோ எனக்கு தெரியாத ஓர் தளத்தை அறிமுகம் செய்தாள்.
எனது "நான்" அவளது தளத்தை புரிந்து கொள்வது எளிது என்றே வலுவாக கூறி அழுத்தியது. அவளது "அஜ்ஜி" தொலைவில் சென்று அமர்ந்து விட அங்கு செல்வது இக்குழந்தையின் நோக்கமாக இருக்கும் என்று என் "நான்" கூற, "அஜ்ஜி-யாந்த்ர கோகன்ன பா", என்று கூறி, அஜ்ஜி-(அதாவது பாட்டி) இருந்த இடத்தை நோக்கி அழைத்தேன். வலது கையின் கட்டை விரலை தாடையின் கீழ் வைத்து என்னுடன் காய் விட்டது. அச்சிறுமி என்னை நிராகரித்தது. எப்பொழுதும் போல் எனது "நான்"-க்கு ஓர் குத்து விழுந்தது. அக்கணத்தில் என்னுள் நிறைந்து இருந்தது அச்சிறுமியின் இனிமையான நினைவு மட்டும். எதை அறிய நான் எங்கு செல்வேன்?.
-பாரி
Wednesday, January 21, 2004
சருகுகள்
யாரும் கவலை படாத, காற்றிலே மிதந்து செல்லும், உச்சி மரக்கிளையில் இருந்து உதிர்ந்த காய்ந்த சருகை போல் உணர்கிறேன்.
சுதந்திரம்....
புவியின் ஈர்ப்பு மட்டும் இல்லையேல், உடைத்தெறிந்து பறக்கும் உயிர் பறவை உடலை விட்டு.
நீரினுள் கலந்த உப்பாக பிரபஞ்ச கடலினில் கலக்க நினைக்கிறேன். கரையாத கல்லாய் புவியின் ஈர்ப்பினால் உள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றேன். தரை தட்டுவேனோ, அதை பிளப்பேனோ....
நிகழும் இந்த லீலைகள், நாளைய காவியத்தின், முன்னுரைகள்............
அன்புடன்
பாரி
சுதந்திரம்....
புவியின் ஈர்ப்பு மட்டும் இல்லையேல், உடைத்தெறிந்து பறக்கும் உயிர் பறவை உடலை விட்டு.
நீரினுள் கலந்த உப்பாக பிரபஞ்ச கடலினில் கலக்க நினைக்கிறேன். கரையாத கல்லாய் புவியின் ஈர்ப்பினால் உள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றேன். தரை தட்டுவேனோ, அதை பிளப்பேனோ....
நிகழும் இந்த லீலைகள், நாளைய காவியத்தின், முன்னுரைகள்............
அன்புடன்
பாரி
Monday, January 19, 2004
பேர்ல என்ன இருக்கு ??
இப்படி யாராவது சொன்னா... தயவு செஞ்சு இதை படிங்க.....
பாலாஜி. இது வெறும் மூணெழுத்து வார்த்தை. இந்த வார்த்தை படற பாடு... படுத்தற பாடு.... இருக்கே..... சொல்லி மாளாது....ஆனால் சொல்லாமயும் இருக்க முடியல.......
B-ல ஆரம்பிக்குதா.... ஸ்கூல் அட்டெண்டென்ஸ்ல எப்படியும் மூணு நாலு பெயருக்குள்ள வந்து விடும். ஜன்னல் ஓரத்துல உக்காந்துட்டு சீனியர் மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை வகுப்பறையிலிருந்து (match ன்னா கேட்கவே வேணாம்!! உடல் மட்டும் வகுப்பறையில்...) வேடிக்கை பார்க்கும் போது, ரெண்டு அல்லது மூணு பாலாஜி-ல என் பெயர (S.Balaji) கூப்பிடறதுக்கு முன்னாடியோ அல்லது அப்புறமோ "ப்ரெசண்ட் மிஸ்"ன்னு சொல்லி, "என்ன எரும? வெளில என்ன ஆடுது?" ன்னு சரோஜினி மிஸ்-கிட்ட திட்டு வாங்கி இருக்கேன்.
SRIMHSS-ல் +2 படிக்கும் போது, ரெண்டு பாலாஜி. இன்னொரு பாலாஜி Computer science. நான் Biology. எங்களுக்கு இந்த வித்தியாசம் இருந்த போதும், பயாலஜி பாலாஜி-ன்னு கூப்பிட கஷ்ட்டப்பட்டுகிட்டு எங்களுக்கு புது அடை மொழி கொடுத்தாங்க. நான் பழனியில் இருந்து வந்ததால பழனி பாலாஜி -யாகவும், அவங்க அப்பா மிட்டாய் கடை வைச்சு இருந்ததால இன்னொரு பாலாஜி, மிட்டாய் பாலாஜி -யாகவும், ஆகிவிட்டோம். ( "நண்பா! மிட்டாய் பாலாஜி! அந்த கணக்கு டுயூசன் சம்பவம் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. இதை படித்த பின்பும் நீ தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்!!")
APAC -ல ஃபிசிக்ஸ் படிக்கும் போதும் ரெண்டு பாலாஜி. இங்கே ஒரு சின்ன ஆறுதல். இன்னொரு பாலாஜி பேரு பாலாஜி விஸ்வநாதன். இங்கே குழப்பம் கம்மின்னு நினைச்சேன். ஆனா, ஒரு தடவை எங்கிட்ட வந்து "ஆமா!! ஏண்டா இப்படி லொள்ளு பண்ற? physics lab -la யாரும் இல்லாத போது physics பூதம் டான்ஸ் ஆடுதுன்னு சொன்னியாம்"ன்னாங்க பசங்க. அப்போதான் தெரிஞ்சுது " B. vishwanathan" மிகுந்த நகைச்சுவை உடையவர் என்று.
நல்ல வேளை... AC-ல 94php-ல ஒரே ஒரு பாலாஜிதான் :))
சரி ஐயா! IISc யில எங்க dept-ல ஒரு பாலாஜிதான்னு சந்தோஷப்படும் போது, registrar office-ல இருந்து phone வருது. என்ன விஷயம்ன்னு கேட்டா, "உங்கள gymkhaana treasurer-ஆ select பண்ணி இருக்காங்க" அப்படீங்கறாங்க. என்னாடா இது புதுக் குழப்பம்ன்னு "உங்களுக்கு யார் வேணும்?"-னு பணிவா கேட்டேன் (வேற என்ன பண்ண??). " நீங்க student் தானே?"ன்னாங்க. "ஆமாம்!!" னேன். "உங்க பேரு "S.Balaji" தானே?". இதுக்கும் "ஆமாம்" னேன். "அப்ப உங்களத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க"ன்னாங்க. உடனே நான் "அட நான் எலெக்ஷன்னுக்கு நாமினேட் பண்ணவே இல்லீங்க" னு சொன்னேன். "இல்லையே Instrumentation னு போட்டு இருக்கே" அப்படீன்னு சொல்றாங்க. நான் "சே!! இங்கேயும் இப்படியான்னு" நினைச்சுகிட்டு, "சார்! வேற dept-ல என்கொயர் பண்ணுங்க. அப்புறமா நான் உங்க office-க்கு வரேன்னு சொல்லி phone-ஐ வைத்தேன். பிற்பாடு Metullargy-ல ஒரு "S.Balaji", இருந்தது, அவரும் நானும் ஒரே பிளாக்கில் (PD-Block) இருந்தபடியால் நண்பர்களானது ஒரு பின் கதை.
இங்கேயும் குழப்பம் இல்லாமல் இல்லை. ஏன்னா, அவரோட ரூம் நம்பர் "137". என்னோட ரூம் நம்பர் "37". எல்லாரும் செக்யூரிட்டி கிட்ட தபால் ஏதேனும் வந்தான்னு விசாரிச்சுகிட்டா, நாங்க மட்டும் பரஸ்பரமா-வும் letter வந்ததுருக்கான்னு கேட்டுப்போம். :)
இங்கே வட மாநில பசங்களுக்கு "ஜி" ங்கறது மரியாதை விகுதியாம். அதனால என்னை "பாலா" ன்னு-தான் கூப்பிடுவாங்க.
இப்போ நெட்-ல எழுத ஆரம்பிச்ச பின்னரும், இதே கதை தொடருது. சரி ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்வோம்னு "பாரி" னு வைச்சுக்கிட்டேன். பார்த்தா, blogspot-ல பரிமேள்ஸ் "பரி"ன்னு ரொம்ப நாளா எழுதறார். திண்ணையில் பாரி பக்கத்தில் " பாரி பூபாலன்" னு ஒருத்தர் எழுதறார்.
அதானால இனிமே "PAARI" (பாரி) ங்கற நாம கரணத்தை மட்டும் தரித்துக் கொள்றேன். இனி நெட்-ல பாலாஜி-க்கு கோவிந்தா!!!! :)))
அன்புடன்
பாரி
பாலாஜி. இது வெறும் மூணெழுத்து வார்த்தை. இந்த வார்த்தை படற பாடு... படுத்தற பாடு.... இருக்கே..... சொல்லி மாளாது....ஆனால் சொல்லாமயும் இருக்க முடியல.......
B-ல ஆரம்பிக்குதா.... ஸ்கூல் அட்டெண்டென்ஸ்ல எப்படியும் மூணு நாலு பெயருக்குள்ள வந்து விடும். ஜன்னல் ஓரத்துல உக்காந்துட்டு சீனியர் மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை வகுப்பறையிலிருந்து (match ன்னா கேட்கவே வேணாம்!! உடல் மட்டும் வகுப்பறையில்...) வேடிக்கை பார்க்கும் போது, ரெண்டு அல்லது மூணு பாலாஜி-ல என் பெயர (S.Balaji) கூப்பிடறதுக்கு முன்னாடியோ அல்லது அப்புறமோ "ப்ரெசண்ட் மிஸ்"ன்னு சொல்லி, "என்ன எரும? வெளில என்ன ஆடுது?" ன்னு சரோஜினி மிஸ்-கிட்ட திட்டு வாங்கி இருக்கேன்.
SRIMHSS-ல் +2 படிக்கும் போது, ரெண்டு பாலாஜி. இன்னொரு பாலாஜி Computer science. நான் Biology. எங்களுக்கு இந்த வித்தியாசம் இருந்த போதும், பயாலஜி பாலாஜி-ன்னு கூப்பிட கஷ்ட்டப்பட்டுகிட்டு எங்களுக்கு புது அடை மொழி கொடுத்தாங்க. நான் பழனியில் இருந்து வந்ததால பழனி பாலாஜி -யாகவும், அவங்க அப்பா மிட்டாய் கடை வைச்சு இருந்ததால இன்னொரு பாலாஜி, மிட்டாய் பாலாஜி -யாகவும், ஆகிவிட்டோம். ( "நண்பா! மிட்டாய் பாலாஜி! அந்த கணக்கு டுயூசன் சம்பவம் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. இதை படித்த பின்பும் நீ தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்!!")
APAC -ல ஃபிசிக்ஸ் படிக்கும் போதும் ரெண்டு பாலாஜி. இங்கே ஒரு சின்ன ஆறுதல். இன்னொரு பாலாஜி பேரு பாலாஜி விஸ்வநாதன். இங்கே குழப்பம் கம்மின்னு நினைச்சேன். ஆனா, ஒரு தடவை எங்கிட்ட வந்து "ஆமா!! ஏண்டா இப்படி லொள்ளு பண்ற? physics lab -la யாரும் இல்லாத போது physics பூதம் டான்ஸ் ஆடுதுன்னு சொன்னியாம்"ன்னாங்க பசங்க. அப்போதான் தெரிஞ்சுது " B. vishwanathan" மிகுந்த நகைச்சுவை உடையவர் என்று.
நல்ல வேளை... AC-ல 94php-ல ஒரே ஒரு பாலாஜிதான் :))
சரி ஐயா! IISc யில எங்க dept-ல ஒரு பாலாஜிதான்னு சந்தோஷப்படும் போது, registrar office-ல இருந்து phone வருது. என்ன விஷயம்ன்னு கேட்டா, "உங்கள gymkhaana treasurer-ஆ select பண்ணி இருக்காங்க" அப்படீங்கறாங்க. என்னாடா இது புதுக் குழப்பம்ன்னு "உங்களுக்கு யார் வேணும்?"-னு பணிவா கேட்டேன் (வேற என்ன பண்ண??). " நீங்க student் தானே?"ன்னாங்க. "ஆமாம்!!" னேன். "உங்க பேரு "S.Balaji" தானே?". இதுக்கும் "ஆமாம்" னேன். "அப்ப உங்களத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க"ன்னாங்க. உடனே நான் "அட நான் எலெக்ஷன்னுக்கு நாமினேட் பண்ணவே இல்லீங்க" னு சொன்னேன். "இல்லையே Instrumentation னு போட்டு இருக்கே" அப்படீன்னு சொல்றாங்க. நான் "சே!! இங்கேயும் இப்படியான்னு" நினைச்சுகிட்டு, "சார்! வேற dept-ல என்கொயர் பண்ணுங்க. அப்புறமா நான் உங்க office-க்கு வரேன்னு சொல்லி phone-ஐ வைத்தேன். பிற்பாடு Metullargy-ல ஒரு "S.Balaji", இருந்தது, அவரும் நானும் ஒரே பிளாக்கில் (PD-Block) இருந்தபடியால் நண்பர்களானது ஒரு பின் கதை.
இங்கேயும் குழப்பம் இல்லாமல் இல்லை. ஏன்னா, அவரோட ரூம் நம்பர் "137". என்னோட ரூம் நம்பர் "37". எல்லாரும் செக்யூரிட்டி கிட்ட தபால் ஏதேனும் வந்தான்னு விசாரிச்சுகிட்டா, நாங்க மட்டும் பரஸ்பரமா-வும் letter வந்ததுருக்கான்னு கேட்டுப்போம். :)
இங்கே வட மாநில பசங்களுக்கு "ஜி" ங்கறது மரியாதை விகுதியாம். அதனால என்னை "பாலா" ன்னு-தான் கூப்பிடுவாங்க.
இப்போ நெட்-ல எழுத ஆரம்பிச்ச பின்னரும், இதே கதை தொடருது. சரி ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்வோம்னு "பாரி" னு வைச்சுக்கிட்டேன். பார்த்தா, blogspot-ல பரிமேள்ஸ் "பரி"ன்னு ரொம்ப நாளா எழுதறார். திண்ணையில் பாரி பக்கத்தில் " பாரி பூபாலன்" னு ஒருத்தர் எழுதறார்.
அதானால இனிமே "PAARI" (பாரி) ங்கற நாம கரணத்தை மட்டும் தரித்துக் கொள்றேன். இனி நெட்-ல பாலாஜி-க்கு கோவிந்தா!!!! :)))
அன்புடன்
பாரி
Wednesday, January 14, 2004
பொங்கல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
நம் உயிர் வாழ்தலுக்கு அடிப்படையாக விளங்கும் உழவுத் தொழிலை மேற்கொள்ளும் அந்த உழவர் நண்பர்களுக்கும் நம் நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்!!
பருவ மழை தப்பாமல், அவர்களது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவும், அவர்கள் வாழ்வில் வளங்கள் பொங்கவும், பிரார்த்திப்போம்!!!
இப்பொங்கல் விழா சந்தர்ப்பத்தில், உழவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!
அன்புடன்
பாலு மற்றும் பாலாஜி
நம் உயிர் வாழ்தலுக்கு அடிப்படையாக விளங்கும் உழவுத் தொழிலை மேற்கொள்ளும் அந்த உழவர் நண்பர்களுக்கும் நம் நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்!!
பருவ மழை தப்பாமல், அவர்களது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவும், அவர்கள் வாழ்வில் வளங்கள் பொங்கவும், பிரார்த்திப்போம்!!!
இப்பொங்கல் விழா சந்தர்ப்பத்தில், உழவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!
அன்புடன்
பாலு மற்றும் பாலாஜி
Saturday, January 03, 2004
புதிர்
அந்த புதிர் மிகவும் அழகானது. நேர் கோட்டில் செல்லும் மத்தாப்பு கம்பி சட்டென்று சகல திசைகளிலும் பூ வாரி இறைப்பதை போல அழகானது. மாலை நேர உலாவில் பூந்தோட்டம் வழியே செல்லும் போது, அவ்வேளை ஆட்கொள்ளும் நறுமணம் போன்றது. சின்னக் குழந்தையை கண்கள் அகல விரியச் செய்யும் கவின்மிகு வியப்பை போன்றது.
புதிர் பிரிக்க வருபவருக்கு ஆக்க சக்தியும், அளவற்ற நம்பிக்கையும் கொடுக்க வல்லது அப்புதிர்.
அறியும் வரைதான் புதிர் அழகு என்பர். ஆனால், அப்புதிர் அறிந்த பின் மேன்மேலும் அகண்ட பல தளங்களில் பல அரிய புதிர்களை மட்டும் காட்டுவது அப்புதிரின் பண்பு. அறிய முயலும் பாதையில் களைப்பை உண்டாக்கும். எண்ணக் கருவூலம் சிதறி அடிக்கப்படும் அப்பயணத்தில். சிதறிய துண்டுகளோ மேலும் அழகானதாகவும் உள் மனதை கவரும் வகையில் பாங்குற அமையும். பயணிப்பதற்கு பல விதைகள் நாங்கள்! என்று வழித்தடம் இடும்.
தூக்கி கவிழ்த்துப் போட்டாலும் அந்தரத்தில் பல தளங்களை காட்டி மிதக்கச் செய்யும்.
அந்த மஞ்சள் மலரின் மெல்லிய இதழ் போல வலிமையை தன்னுள் கொண்டு, மிகவும் எளிமையை காட்டும். " ஆகா! எளியதே அழகு" என்ற பேருண்மையை அப்பயணத்தில் முரசறிவிக்கும். முயற்சியை பேருவகையுடன் தொடர வழி செய்யும். கால்த்தால், பரிமாணத்தால் எப்படி கடக்கப் போகிறோம் என்ற கவலையை தோற்றுவித்தாலும் எல்லையற்ற பெருவெளியில் தூலம் கரைந்து சென்று, எண்ண அதிர்வலையை பெருவெளியில் நிறைக்க அன்றே அப்பயணம் முடியும், மேலும் ஒரு புதிராக, மற்றொரு பயணத்தின் துவக்கமாக.........!!!
தான் இருக்கும் நிதர்சனத்தை காட்டிய அந்த புதிருக்கு இக்கணம் நன்றி.........!!!!!
-பாரி
புதிர் பிரிக்க வருபவருக்கு ஆக்க சக்தியும், அளவற்ற நம்பிக்கையும் கொடுக்க வல்லது அப்புதிர்.
அறியும் வரைதான் புதிர் அழகு என்பர். ஆனால், அப்புதிர் அறிந்த பின் மேன்மேலும் அகண்ட பல தளங்களில் பல அரிய புதிர்களை மட்டும் காட்டுவது அப்புதிரின் பண்பு. அறிய முயலும் பாதையில் களைப்பை உண்டாக்கும். எண்ணக் கருவூலம் சிதறி அடிக்கப்படும் அப்பயணத்தில். சிதறிய துண்டுகளோ மேலும் அழகானதாகவும் உள் மனதை கவரும் வகையில் பாங்குற அமையும். பயணிப்பதற்கு பல விதைகள் நாங்கள்! என்று வழித்தடம் இடும்.
தூக்கி கவிழ்த்துப் போட்டாலும் அந்தரத்தில் பல தளங்களை காட்டி மிதக்கச் செய்யும்.
அந்த மஞ்சள் மலரின் மெல்லிய இதழ் போல வலிமையை தன்னுள் கொண்டு, மிகவும் எளிமையை காட்டும். " ஆகா! எளியதே அழகு" என்ற பேருண்மையை அப்பயணத்தில் முரசறிவிக்கும். முயற்சியை பேருவகையுடன் தொடர வழி செய்யும். கால்த்தால், பரிமாணத்தால் எப்படி கடக்கப் போகிறோம் என்ற கவலையை தோற்றுவித்தாலும் எல்லையற்ற பெருவெளியில் தூலம் கரைந்து சென்று, எண்ண அதிர்வலையை பெருவெளியில் நிறைக்க அன்றே அப்பயணம் முடியும், மேலும் ஒரு புதிராக, மற்றொரு பயணத்தின் துவக்கமாக.........!!!
தான் இருக்கும் நிதர்சனத்தை காட்டிய அந்த புதிருக்கு இக்கணம் நன்றி.........!!!!!
-பாரி
Subscribe to:
Posts (Atom)