Saturday, February 07, 2004

பிளாட் ஃபாரம்

"அங்கனே பாரு புள்ள....
மெயின் ரோட்டுக்கு மத்தியில...
வரிசையா நட்ட மரம் அழகு தாம்லே?"
அப்பா சொல்ல
அதை பார்த்தாள் அச்சிறுமி.
"அட..இதா...ரோட்ல இறங்காத புள்ள..
பிளாட்ஃபாரம்லயே நட..."
"அதெனங்கையா பிளாட்ஃபாரம்?"
"நாம நடக்குதோம் இல்ல? அத்யான்"
"மக்கா... நடக்க என்னாமா
கட்டிருக்காக! பட்டணம்னா சும்மாவா?"
அடிச்ச மழையில் பிஞ்ச கூரை
ஒதுக்கியிருந்தது வேறு சிலரை
பிளாட்ஃபார பாலித்தீன் கூடாரத்தில்.
அதையும் கண்டாள் அச்சிறுமி!
அகலமான கண்கள் மேலும் அகல கேட்டாள்
"அய்யா! இவுகளை யாரு இங்கே நட்டது?"

-பாரி

No comments: