Friday, February 13, 2004

என் வேதனைக் கால குறிப்புகள்...

என் நண்பா!!
நமக்கு மிகுந்த துக்கம்
தரக்கூடிய
ஓர் செய்தியை அறிவிக்கிறேன்.
தெளிவோடும்,
முரட்டு தைரியத்தோடும்.

"நம்மால் இனி அன்றைய
+2 மாணாக்கர்களாய்
மாறவே இயலாது".


அறிவின் தெளிவை நோக்கி
உள்ளொளியுடன் எரியும் சக்தியுடன்
வானத்தின் கீழ் அனைத்தும்
புதிதாய் புத்துணர்ச்சியாய்
இருந்தகாலம் இனி
இறந்த காலம்....

புகுத்தப்பட்ட கல்வியால்,
அறிந்த மற்றவைகளால்,
இது இப்படித்தான் என
பாழாய்ப்போன பயனற்ற "அறிவு"
நமக்கு உறுத்தி....
புதிர் காணும் சக்தியென்னும்
ஆக்கையை தொலைவில் நிறுத்தி
நம்மை அண்டத்தின்
அணைப்பில் அண்டவிடாமல்......

அறிவே நீயும் அழிவுதான்.......

-பாரி

No comments: