Thursday, February 26, 2004

என் வேதனைக் கால குறிப்புகள் - 2

முகில்கள் தோற்குமோ
கவின் மிகு பிம்பங்களில்....

மலைகள் தோற்குமோ
அழுத்தமான இருப்புகளில்...

மலர்கள் தோற்குமோ
பரவச ரசனைகளில்....

ஒளிகற்றை தோற்குமோ
தேடல்களின் ஆழத்தில்...

உணர்வுகள் தோற்குமோ
உயிர் துடிக்கும் பிரிவின் அக்கணத்தில்...

(காற்றிலே கலந்து இருந்தது
பெண்டத்தால் வாசனை குளிர்ச்சியாய்)


- பாரி

No comments: