யாரும் கவலை படாத, காற்றிலே மிதந்து செல்லும், உச்சி மரக்கிளையில் இருந்து உதிர்ந்த காய்ந்த சருகை போல் உணர்கிறேன்.
சுதந்திரம்....
புவியின் ஈர்ப்பு மட்டும் இல்லையேல், உடைத்தெறிந்து பறக்கும் உயிர் பறவை உடலை விட்டு.
நீரினுள் கலந்த உப்பாக பிரபஞ்ச கடலினில் கலக்க நினைக்கிறேன். கரையாத கல்லாய் புவியின் ஈர்ப்பினால் உள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றேன். தரை தட்டுவேனோ, அதை பிளப்பேனோ....
நிகழும் இந்த லீலைகள், நாளைய காவியத்தின், முன்னுரைகள்............
அன்புடன்
பாரி
No comments:
Post a Comment